கலைக்களஞ்சியம்/ஆதன் எழினி

ஆதன் எழினி : இவன் 'செல்லிக்கோமான்... ஆதன் எழினி' என வழங்கப்படுகிறான் (அகம்.216). செல்லி என்பது சோழநாட்டுக் கடற்கரையோரமாக உள்ள செல்லூர் என்று துணியலாம். 'செல்லூர்க்குணா அது... கோசர் நியமம்' (அகம். 90) என வருவதால் இது உறுதி பெறுகிறது. இவன் கோசர் மரபினன் என்பதைக் 'கோசர் கண்ணி அயரும்... செல்லிக் கோமான்' (அகம். 216) என்று வருவதால் கொள்ளலாம் என்பர். இவன் பெருவீரன் எனவும், வேற்படையினன் எனவும் தெரிகின்றன (அகம்.216).