கலைக்களஞ்சியம்/ஆத்திசூடி

ஆத்திசூடி ஔவையார் இயற்றிய அறநூல்; சிறிய தொடர்களால் அரிய கருத்துக்களை விளக்குவது; 'ஆத்திசூடி' எனத் தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. ஆழ்ந்த கருத்துக்களையுடைய இந்நூலின் தொடர்களையும் பொருள்களையும் அமைத்து, ஆத்திசூடி வெண்பா, ஆத்திசூடி புராணம் என்னும் நூல்கள் பிற்காலத்தே எழுதப்பெற்றன.