கலைக்களஞ்சியம்/ஆந்தைக் காதல்

ஆந்தைக் காதல்: ஆந்தையின் கூப்பிடலால் நன்மை தீமைகளை அறிதல்: கூப்பிடுதல் ஒன்றானால் சாவு, இரண்டானால் கருமம் கைகூடுதல், மூன்றானால் மனைவி வருதல், நான்கானால் கலகம், ஐந்தாகில் பயணம், ஆறாகில் அடுத்தவர் வரவு, ஏழாகில் இழந்த பண்டம் கிட்டுதல், எட்டாகில் சாவு, ஒன்பதும் பத்துமாகில் நன்மை உண்டாகும் என்பர்.