கலைக்களஞ்சியம்/ஆனந்தசங்கர துருவர்

ஆனந்தசங்கர துருவர் (1879-1942) குஜராத்தி எழுத்தாளர்; தருமத்திலும் தத்துவ ஞானத்திலும் மிகுந்த பயிற்சியுள்ளவர். நல்ல சமஸ்கிருத பண்டிதர். பொதுமக்கள் வாழ்க்கையிலும் இவருக்குச் சிறப்பான இடமிருந்தது. ஹிந்துதர்மனீ பாலபோதீ, ஆபணோ தர்ம என்பவை இவருடைய சிறந்த நூல்கள். இவர் உரைநடை சமஸ்கிருதம் கலந்ததாக இருந்தாலும் படிப்பதற்குக் கடினமானதன்று. இவர் ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபட்டவர். வஸந்த என்ற மாதப் பத்திரிகையில் புதுமையையும் பழமையையும் ஒன்றுசேர்த்து விதவிதமான கட்டுரைகளை எழுதி வந்தார். பி. ஜீ. தே.