கலைக்களஞ்சியம்/ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் கடைச்சங்கப் புலவர். நற்றிணையில் காணப்படும் இப்பெயரும், அகநானூற்றில் காணப்படும் ஆவூர்க் கவுதமன் சாதேவன் என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆமூர்க்கவுதமன் சாதேவனார் என்றிருக்கவேண்டும் எனக் கருதுவாரும் உளர். இவர் பாடல் பாலைத்திணையை வருணிப்பனவாயிருத்தலால் ஆவூர் என்பது குறும்பொறை மலையின் கீழ்ப் பாலுள்ள பாலை நிலத்திலுள்ள ஆமூரைக் குறிக்கும் என்று கருதுகிறார்கள் (நற். 264; அகம். 159).