களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/இணைப்பு - 1

இணைப்பு - 1

களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள்

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

(தரவு)

கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் தொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைஇ
அழலவிர் சுழல் செங்கண் அரிமாவாய் மலைத்தானைத்
தாரோடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
ஆர்புனல் இழிகுருதி அகலிடம் உடலனைப்பக்
கூருகிரான் மார்பிடத்த கொலைமலி தடக்கையோய்!

(தாழிசை)


முரைசதிர் வியன்மதுரை முழுவதூஉம் தலைபணிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைத்த மறமல்லர்
அடியோடு முடியிறுப்புண் உயர்ந்தவன் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்கனத்துப் புடைத்துநின் புகழாமோ?

கவியொழி வியனுலகம் கலந்துட னனிநடுங்க
வலியியல் அவிராழி மாறெதிர்ந்த மருட்கோவும்
மாணாதார் உடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச்
சேணுயர் இருவிசும்பிற் செகுத்ததுதின் சினமாமோ?

படுமணி இளநிரைகள் பரந்துடன் இரிந்தோடக்
கடுமுரண் எதிர்மலைந்த காரொலி எழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்த்துதிறல் வேறாக
எருமலி பெருத்தொழுவின் இறுத்ததுதின் இல்லாமோ?

(அம்போதரங்கம்)

(பேரென்)


இலங்கொலி மரகதம் எழில்மிகு வியன்கடல்

வலம்புரித் தடக்கை மாஅல் நின்னிறம்

விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய்! புரையும் நின்னுடை

(சிற்றெண்)


கண்கவர் கதிர்மணி கனலும் சென்னியை
தண் சுடர் உறுபகை தவிர்த்த ஆழியை
ஒலியியல் உவணம் ஓங்கிய கொடியினை
வலிமிகு சகடம் மாற்றிய அடியினை

(இடையெண்)


போரவுணர்க் கடந்தோய் நீ
புணர் மருதம் பிளந்தோய் நீ
நீரகிலம் அளந்தோய் நீ
நிழல்திகழும் படையோய் நீ

(அளவெண்)


ஊழி நீ உலகு நீ உருவு நீ அருவு நீ
ஆழி நீ அருளு நீ அறமு நீ மறமு நீ

(தனிச்சொல்)
எனவாங்கு

(கரிதகம்)


அடுதிறல் ஒருவநிற் பரவுதும் எங்கோன்
தொடுகழற் கொடும்பூட் பகட்டெழில் மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
தொன்று முதிர்கட லுலகம் முழுதுடள்

ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே
✽✽✽

2.தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

பெருதேவபாணி


(தரவு)


அலைகடற் கதிர்முத்தம் அணிவயிரம் அவையணிந்து
மலையுறைமா சுமந்தேந்தும் மணியணைமேல் மகிழ்வெய்தி
ஓசனை சூழ் திருநகருள் உலகொருமூன் றுடனேத்த
ஈசனையாய் இனிதமர்ந்தங் கிருடிகட்கும் இறையவர்க்கும்
அருளறமே அறமாக அயலார்கண் மயலாக
இருளறதன் கெடுத்தியம்பி இருவினை கடிந்திசினோய்!

{தாழிசை)



துன்னாத வினைப்பகையைத் துணிசெய்யும் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கும் நினைப்பினால்
இருளில்லா உணர்வென்னும் இலங்கொளியால் எரித்தனையாய்
அருளெல்லாம் அடைத்தெங்கண் அருளுவதுன் அருளாமோ?

மதிபுரைமுக் குடைநீழல் மகிழ்வெய்தி அடைத்தோரைக்
கதிபொருதக் கருவரைமேல் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினை தீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தனிர்
போல்
நின்மினீர் எனவுணர்த்தல் திருமல நின் பெருமையோ?

மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
வினையறுக்கல் உறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென் றீங்
கருகில்லாப் பெருஞ்செல்வத் தமரரசர் புடைசூழ
உலகெல்லாம் உடன்றுறவா உடைமையுநின் உயர்வாமோ

(அராகம்)



அரசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
மூரசதிர் இமிழிசை முரணிய மொழியினை

(அம்போதரங்கம்)
(பேரெண்)



அணிகிளர் அவிர்மதி அழகெழில் அவிர்சுடர்

மணியொளி மலமறு கனலி நின்னிறம்
மழையது மலியொலி மலிகடல் அலையொலி
முழையுறை அரியது முழக்கம் நின்மொழி

(இடையெண்)



வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
அருவினை வெல்பவர்க் கரும்புணை ஆயினை
ஒருவினை ஆகி உலகுடன் உணர்ந்தனை

(சிற்றெண்)



உலகுடன் உணர்த்தனை
உயிர்முழு தோம்பினை
நிலவுறழ் நிலத்தனை
நிழலியல் ஆக்கையை
மாதவர் தாதையை
போதிவர் பிண்டியை
புலவருட் புலவனை



(தனிச்சொல்)

எனவாங்கு

(சுரிதகம்)



அருளுடை ஒருவர் நிற் பரவுதும் எங்கோ
இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த
நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
ஒற்றைச் செங்கோல் ஒச்சிக்
கொற்ற வெண்குடை நிழற்றுக எனவே

3. அம்போதரங்க ஒரு போகு

(தாழிசை)

கரைபொருநீர்க் கடல்கலங்கக் கருவரைமத் ததுவாகத்
திரைபொருது புடைபெயரத் திண்டோளாற் கடைந்தனையே
முகில்பொரு துடல்கலங்க முழவுத்தோள் புடைபெயர
அகல்விசும்பின் அமரர்க்கும் ஆரமுதல் படைத்தனையே
வரைபெரிய மத்தாக வாளரவம் கயிறாகத்
திரையிரியக் கடல் கடைந்து திருமகளைப் படைத்தனையே

(அராகம்)
(பேரெண்)


 
அமரரை அமரிடை அமருல கதுவிட
நுமரது புகழ்மிக மிகவிகல் அடுத்தனை
அலைகடல் உலகமும் அந்தணர்க் கீந்தனை
உலகொடு நிலவிய ஒருபுகழ் சுமந்தனை

(இடையெண்)



ஆதிக்கண் அரசெய்தினை
நீதிக்கண் மதிநிரம்பினை
விளங்கெரி முதல்வேட்டனை
துளங்கெரியவர் புகழ்துளக்கினை

(அளவெண்)


 
அலகு நீ உலகு நீ அருளு நீ பொருளு நீ
நிலவு நீ வெயிலு நீ நிழலு நீ நீரு நீ

(தனிச் சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)


 
பவழம் எறிதிரைப் பரதைக் கோவே!
புகழ்துறை நிறைந்த பொருவேல் நந்தி!
உலகுடன் அளந்தனை நீயே,
உலகொடு நிலவுமதி உதயவரை ஒத்தே

4.வண்ணக ஒரு போகு

(அராகம்)

அகலிடமும் அமருலகும் அமர்பொருதும் அறந்தோற்றப்
புகலிடநின் குடை நிழலாப் புகுமரணம் பிறிதின்றி
மறத்தோற்று நிறங்கருகி மாற்புகழும் நிறைதளரப்
புறத்தோற்றுக் கழலார்ப்பப் பொருதகளம் வெறிதாக
மண்ணுலகும் மறிகடலும் மாமலையும் நிலைகலங்க
விண்ணுலகம் வியப்பெய்த வெஞ்சமத்துள் அவைத்தனையே
அதனால்,
கனைகடல் உடைதிரை கரைபொரக் கடைந்தனை
முனைவரும் அமரரும் முறைமுறை வந்துநின்
இணைமலர் பலர்புகழ் பயில்வருதார் பண்பினை
மருளுறு துதைகதிர் மணியது
மணிநிற மருளும் நின்குடை
குடையது குளிர்நிழல் அடைகுன
உயிர்களை அளிக்கும் நின்கோல்
கோலது செம்மையிற் குரைகடல் வளாகம்
மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று.

(பேரெண்)


ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா
நீரினும் இனிதுநின் அருள்
அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும்
இருள்கொடிமேற் கொண்டாய் நினைக்கு

(சிற்றென்)



நீரகலம் காத்தோய் நீ நீலவுகம் ஈந்தோய் நீ
போரமர் கடந்தோய் நீ புனையெரிமுன் வேட்டோய் நீ,
ஒற்றைவெண் குடைபோய் நீ கொற்றச்செங் கோலாய் நீ
பாகையந் துறைவனி பரியவர் இறைவனீ.


(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)


பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து

அருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே!
இளையை ஆதலின் பனிமதி தவழும்
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே!

5. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா



(தரவு)



நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற
வண்டாற்ற நாற்காதம் வகைமாண உயர்த்தோங்கும்
தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே

(தாழிசை)


ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ
எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ
ஊர்கோளோ டுடன்முளைத்த ஒளிர்வட்டம் உடைத்தன்றே?

கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக
இனமணி ஆரமா இயன்றிருள் இரித்தோட
அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி
இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே?

வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பருதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய கோட்டைசூழ் திருநதிகள் திளைத்தன்றே?

(அம்போதரங்கம்)
(பேரெண்)


மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீக்கற் கறப்புனை ஆயினை
ஒருதுணி வழிய உயிர்க்காண் ஆகி
இரு துணி ஒருபொருட் கியல்வகை கூறினை

(இடையெண்)

ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விருப்புறு தமனிய விளக்கு நின்னிறம்
ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ்

(சிற்றெண்)


இந்திரர்க்கும் இந்திரன் நீ இணையில்லா இருக்கையை நீ
மந்திர மொழியினை நீ மாதவர்க்கு முதல்வனும் நீ
அருமை சால் அறத்தினை நீ ஆருயிரும் அளித்தனை நீ
பெருமைசால் குணத்தினை நீ பிறர்க்கறியாத் திறத்தினை நீ

(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)


அருள்தெறி ஒருவ! நிற் பரவுதுல் எங்கோத்
திருமிகு சிறப்பிற் பெருவரை அகலத்
தென்மிகு தானைப் பண்ணமை தெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செபிமனை செறுக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே'

✽✽✽