கவிபாடிய காவலர்/பயிற்சி

பயிற்சி

கீழ்வரும் தலைப்புக்கள் ஒவ்வொன்றையும் பற்றித் தனித் தனிக் கட்டுரையாக இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுக.

I. பாலைபாடிய பெருங் கடுங்கோ

1. பாலைபாடிய பெருங் கடுங்கோ என்னும் பெயரை நன்கு விளக்குக.

2. இவர் பாடியுள்ள பாடல்களின் சீரிய கருத்துக்களை விளக்கமுற எடுத்துக் காட்டுக.

II சேரமான் கணைக்கால் இரும்பொறை

1. மானம் என்பதைத் தலைப்பாகக் கொண்டு ஒரு கட்டுரை வரைக.

2. சேரமான் கணக்கால் இரும்பொறை என்பார் யார்?

3. இவர் மானம் உடையவர் என்பதை உதாரணந்தந்து நிலை நிறுத்துக.

III சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

1. பிரிவு என்பது எவரையும் கலக்கச் செய்யவல்லது என்பதை நன்கு எடுத்துக் காட்டுக.

2. “மாக் கோதை” என்பார் பெயர்க்குமுன் கொடுக்கப்பட்ட அடைமொழிகளால் நீ அறிவன யாவை?

IV சோழன் நல் உருத்திரன்

1. சோழன் நல் உருத்திரன்பால் அமைந்த இயல்புகள் யாவை?

2. இவர் ஆயர் இயல்புகளைப் பற்றி நமக்கு அறிவிப்பன யாவை?

V சோழன் நலங்கிள்ளி

1. சோழன் நலங்கிள்ளியின் இயல்புகளை விளக்கமுறத் தருக.
2. இவர் ஒரு பெருவீரர் என்பதை நிறுவுக.


VI இரும்பிடர்த் தலையார்

1. கரிகால் பெருவளத்தானைப் பற்றி நீ அறிந்து கொண்டவை எவை?
2. இரும்பிடர்த் தலையார் யாவர்? அவர் இப்பெயர் பெறக் காரணம் யாது?
இவரால் பாடப்பட்ட மன்னனைப் பற்றி நீ அறிந்தவை எவை?


VII கோப்பெருஞ் சோழன்

1. பிசிராந்தையாரைப் பற்றி நீ என்ன அறிகின்றனை?
2. கோப்பெருஞ் சோழருக்கும் பிசிராந்தையார்க்கும் இருந்த நட்புரிமையை எடுத்துக் காட்டுக.
3. பொத்தியாரும் கோப்பெருஞ் சோழரின் நண்பரே என்பதை நிலை நிறுத்துக.

VIII சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

1. கிள்ளிவளவன் யார் யாரால் பாடப்பட்ட பெருமை பெற்றவர்?

2. கிள்ளிவளவன் புலவர்களின் அறவுரைகட்குக் செவி கொடுப்பவர் என்பதை இரண்டு உதாரணங்களால் விளக்கிக் காட்டுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=கவிபாடிய_காவலர்/பயிற்சி&oldid=1380002" இலிருந்து மீள்விக்கப்பட்டது