பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,180:
குற்றாலத் தானையே கூறு (12)
==வெண்பா==
===1-5===
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம் தேடி விட்டோமே நித்தம்
பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மடநெஞ்சம்
சுறந்த இடத்தை நாடுதே கண் (1)
 
தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு – நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை (2)
 
வாசற் படிகடந்து வாராத பிச்சைக்கு இங்
காசைப் படுவதில்லை அண்ணலே – ஆசைதனைப்
பட்டிறந்த காலமெல்லாம் போதும் பரமேட்டி
சுட்டிறந்த ஞானத்தைச் சொல் (3)
 
நச்சரவம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்
இச்சையிலை தான் அங்கிருப்பதுவும் – பிச்சைதனை
வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலிலே
தூங்குவதும் தானே சுகம் (4)
 
இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் – பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே என்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி (5)
===6-10===
விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத் தார் பட்டது பட் {டு}
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம் (6)
 
ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா மட நெஞ்சமே
செத்தாரைப் போலே திரி (7)
 
வெட்ட வெளியான வெளிக்கும் தெரியாது
கட்டளையும் கைப்பணமும் காணாதே – இட்டமுடன்
பற்றென்றால் பற்றாது பாவியே நெஞ்சில் அவன்
இற்றெனவே வைத்த இனிப்பு (8)
 
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சமே
வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் – சொப்பனம்போல்
விக்கிப் பற்கிட்டக் கண்மெத்த பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச் செத் துக்கொட்டக் கண்டு (9)
 
மேலும் இருக்க விரும்பினையே – வெள்விடையோன்
சீலம் அறிந்திலையே சிந்தையே கால்கைக்குக்
கொட்டை இட்டு மெத்தை இட்டுக் குத்திமொத்தப் பட்டஉடல்
கட்டை இட்டுச் சுட்டு சுட்டுவிடக் கண்டு (10)
===11-15==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது