இராமதேவர் பூசா விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==1-5==
1
 
ஆதி என்ற மணி விளக்கை அறிய வேணும்
:அகண்ட பரி பூரணத்தைக் காண வேணும்
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம்
:சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள் தன்னை
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம்
:நிற்குணத்தின் நின்ற நிலை யாரும் காணார்
வேதி என்ற வேதாந்தத்து உள்ளே நின்று
:விளங்குவதும் பூசை இது வீண் போகாதே
 
2
 
போகாமல் நின்றதோர் ஐயா நீதான்
:பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே
ஆகாமல் ஆனந்த வல்லி யாலே
:அடிமுடியின் நடுவாசி ஆறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
:வழி தோன்றும் மூன்று எழுத்தை உரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலம்
:சசிவட்டம் நடுக்கோணம் முக்கோணம் ஆமே
 
3
 
முக்கோணம் மூசுழி தற்கோணம் ஆகி
:முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
:நாயகியாள் பரஞ்சோதி நாட்டம் உற்றுத்
தீக்கோணத் திக்குதிசை இருந்த மாயம்
:தெரிந்திடவே உரைத்திட்டேன் விவரமாக
தாக்கோண விட்டகுறை வந்தது என்றால்
:தனியிருந்து பார்த்தவனே சித்தன் ஆமே
4
 
சித்தான மூன்று எழுத்துச் செயலாம் சோதி
:சீரியவை யுங்கிலியும் சவ்வுமாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
:முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும் தான்
வித்தான வித்தையடா மூட்டும் பாரு
:விரிவான முகக்கருவும் மூன்று கேளு
சத்தான அதன் கருவும் சிலையில் வைத்துச்
:சதுரான விதி விவரம் அறியக் கேளே
 
5
 
கேளப்பா பலி கொடுத்துப் பூசை செய்து
:கிருபையுள்ள உருவேற்றித் திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
:வளமாகப் புதைத்துவிடு நடுச்சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரணம் ஆகி
:ஆண்டிருந்த தவசுநிலை தான் குலைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதை தெரியச் சொல்லுகிறேன் இன்னம் பாரே
==6-10==
6
 
இன்னம் இன்னம் கண்முன் சோதனையும் ஆகும்
:ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம்
அன்னம் இன்னா அகில் கட்டை தேவ தாரம்
:அறிவுடைய முளைசீவிச் சிங்கையோதி
வன்னம் இன்னார் பேர்சொல்லி ருசியென்றே தான்
:வலுவான நூற்றெட்டு உருவம் போடு
சன்னம் இன்னா மரத்திடியில் இருந்து கொண்டு
:சதிராக ஆணிகொண்டு அடித்தி டாயே
 
7
அடித்த முளை பிடுங்கி வைத்து இறுக்கிப் போடு
:ஆனந்த உருக்குலைந்து பட்டுப் போகும்
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானுந்
:தொகை முடிந்து ஆச்சுதடா இந்தப் போக்கு
விடுத்த பின்பு விடம் ஏறிக் கருவிப் போகும்
:விரித்து உரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தில் அடித்துப் பாரு
:தட்டழிந்து உயிர் முதலாய்ச் சேதம் ஆமே
 
8
 
ஆமப்பா அடிதரிசிங் களத்தில் ஆனால்
:அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம்
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு
:விளையாட்டே இல்லையடா இந்தப் போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கிச்
:சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
:தவறாது ராமனுடை வாக்யம் தானே
 
9
 
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
:தனதான நூற்று எட்டுக் குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதி யெட்டும் ஆடும்
:அறுபத்து நால்மூலி எல்லாம் ஆடும்
கோன் என்ற கோடி சித்துக் கணத்தில் ஆடும்
:குணமாக ரேவதி நாள் செய்ய நன்று
வானென்ற அட்டமியில் செய்ய நன்று
:வளர்பிறையில் செய்தவனே யோகியாமே
 
10
 
யோகியாய் ஆவதற்கு ஈதுனக்குச் சொன்னேன்
:ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே
யோகிகளாய் ஏகாந்த வல்லி ஆட்கிங்
:ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு
தாகிகளாய் தாயடைய கிருபை யாலே
:தவமாகும் மவமாகும் சுபம் உண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதி பத்தாலே
:முத்தி பெறச் சித்திவிளை பத்துமுற்றே
 
:::முற்றும்
"https://ta.wikisource.org/wiki/இராமதேவர்_பூசா_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது