சீனத்தின் குரல்/கடைசி வீழ்ச்சி

கடைசி வீழ்ச்சி

சீன நாட்டு பெண் குலத்தின் கடைசி. வீழ்ச்சிக்குக் காரணம் அவர்களுடைய கால்களைக் கட்டுப்படுத்தி இரும்பு பூட்சுகளால் குறிக்கிவிட்டதுதான். பெண்களும் எங்கேயும் கண்ட கண்ட விடங்களில் ஓடாமல் செய்ததானது சின. வீரத்தின் பொன்னேடுகளில் ஒரு பெண்ணின் பெயரைக் காண முடியவில்லை. சமூகப் பேராசையால் கட்டப்பட்ட அவர்களுடைய கால் நடையின் வேகம்போலத்தான் சீன சரித்திரமும் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் ஆமைபோல் நகர்ந்து கொண்டிருந்ததோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படுகிறது, ஓடிப்பாயும் வேங்கையாய் வெம்புலியாய் ஆகாமல் ஊர்ந்து செல்லும் பிராணிகளாய்விட்டார்கள். அடிக்கடி இப்படி ஏற்பட்ட தொல்லைகளால் சீனத்தில் நடக்கும் எந்த சடங்காக இருந்தாலும் ஒரே கூச்சல் பயமாக இருந்தது. Noisy Wedding, Noisy funerals, Noisy suffers, Noisy sleeping என்று எழுதுகின்ற லி - யு - டாங்.

செறுக்கு மனப்பான்மை குடும்பத்தில் வளர வளர குழந்தை பருவத்திலேயே பலர் வீட்டைவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். மரணத்திற்காக அவர்கள் அனுசரித்த முறை, அதாவது மனைவி இறந்துவிட்டால் கணவன். ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டுமென்ற ஏற்பாடு பலரை: பரீட்சையில் கலந்துகொள்ள முடியாமலும், சிலர் மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலையும் ஏற்படுத்தியிருக்கிறது.