சீர்மிகு சிவகங்கைச் சீமை/இறவாப்புகழ் கொண்ட இரண்டாவது மன்னர்

3. இறவாப்புகழ் கொண்ட
இரண்டாவது மன்னர்






புதிய சிவகங்கைத் தன்னரசின் இரண்டாவது மன்னராக முடிசூட்டிக் கொண்டவர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் என்பவர். மன்னர் சசிவர்ணத் தேவரது முதல் மனைவி அகிலாண்ட ஈசுவரி மூலம் பிறந்த பட்டாபி இராமசாமி, சுவர்ண கிளைத் தேவர் என்ற இரு ஆண்மக்கள், மன்னர் மறைவதற்கு முன்னதாகவே காலமாகி விட்டனர். ஆதலால், முத்து வடுகநாதர் மன்னராகும் வாய்ப்பை பெற்றார். மறைந்த மன்னர் சசிவர்ணத் தேவருடைய இரண்டாவது மனைவியின் மகன். அப்பொழுது அவருக்கு வயது இருபத்து ஒன்று. பதவிக்கு ஏற்ற வயது தான். ஆனால் நிர்வாகத்துக்கு மிகவும் புதியவராக இருந்ததால் அவரது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர் செல்வ ரகுநாதத் தேவர், முத்து வடுகநாத தேவருக்கு நிர்வாகத்தில் துணை புரிந்து வந்தார். இந்த இளைய அரசுக்கு பல சோதனைகள் காத்து இருந்தன. அவைகளில் ஒன்று தஞ்சைமராட்டிய மன்னரது படையெடுப்பாகும். இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு சீமைகளுக்கும் உரிய அனுமந்தக்குடி பகுதியை தஞ்சாவூர் படைகள் திடீரென்று ஆக்கிரமித்துக் கொண்டன. ஏற்கனவே கி.பி. 1728-ல் சசிவர்ணத் தேவரும், இராமநாதபுரம் கட்டத்தேவரும் பாம்பாற்றுக்கு வடக்கேயுள்ள சேது நாட்டின் நிலப்பரப்பை தஞ்சை மன்னருக்கு தாரை வார்த்துக் கொடுத்திருந்தும், பேராசை காரணமாக அப்பொழுது தஞ்சை மன்னராக இருந்த பிரதாப் சிங் பாம்பாற்றை கடந்து சேது நாட்டிற்கு வடக்கே உள்ள விரிசுழி ஆற்றின் கரையில் இருந்த அனுமந்தக் குடி வரை ஆக்கிரமித்து விட்டார். அந்த அக்கிரமச் செயலுக்கு புதுக்கோட்டை தொண்டைமானும் துணை புரிந்தார்.[1] செய்தியறிந்த முத்து வடுகநாதரும், செல்வ ரகுநாதத் தேவரும் இராமநாதபுரம் கோட்டைக்கு விரைந்து சென்று சேதுபதி மன்னரைச் சந்தித்தனர். முடிவு அடுத்த மூன்று நாட்களில் மறவர் படை திரண்டது. சிவகங்கை மறவர்களும், சேதுபதி சீமையின் மறவர்களும் அஞ்சு கோட்டையில் சந்தித்து அணிவகுத்தனர். சேதுபதி மன்னரது வீரத் தளபதியான வெள்ளையன் சேர்வைக்காரர்தலைமையில் அனுமந்தக்குடி நோக்கி அந்த படைகள் புறப்பட்டன. மறவர் சீமைக்குரிய மகோன்னத வீரத்துடன் போர் புரிந்து வெற்றியுடன் ஆக்கிரமிப்பாளர்களைத் துரத்தி விட்டு வெற்றியுடன் திரும்பினர்.[2] ஒரு வகையாக இந்த முதல் சோதனையில் இளம் மன்னர் முத்து வடுகநாதத் தேவர் வெற்றி பெற்றுவிட்டார். என்றாலும், சிவகங்கை ஒட்டியுள்ள மதுரை, திருச்சி, தஞ்சாவூர் சீமைகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் தாக்கம் சின்ன மறவர் சீமையிலும் எதிரொலித்தன.

அழிந்த கண்மாயில் மீன்பிடிப்பவர்களைப் போன்று தமிழக அரசியலை தங்களது சுயநலத்திற்குப் பயன்படுத்திய சந்தா சாகிபும், மராட்டியர், ஹைதராபாத் நிஜாம் ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாகத் தளர்ந்தவுடன் நிஜாமினால் அங்கேரிக்கப்பட்ட அன்வர்தீன் திருச்சியை தலைநகராகக் கொண்டு கர்நாடக நவாப் ஆனார். ஏற்கனவே சந்தா சாகிபால் மதுரைச் சீமை அரசினை இழந்த மதுரை நாயக்க இளவல் விஜய குமாரனும் அவரது தந்தை பங்காரு திருமலையும் சிவகங்கை சீமையில் புகலிடம் பெற்றிருந்தனர்."[3] இப்பொழுது இருவரும் திருச்சி வந்து இருந்த நிஜாமை சந்தித்தனர். அவருக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவும் மதுரைச் சீமைக்கு கப்பமாக ஆண்டு ஒன்றுக்கு முப்பது லட்சம் ரூபாய் செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டனர். நிஜாமும் அவர்களது கோரிக்கையை ஒப்புதல் அளித்து அவர்களுக்கு உதவுமாறு நவாப் அன்வர்தீனைப் பணித்தார்.[4] ஆற்காட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறிய அன்வர்தீன் ஒரு நாள் பங்காருவை விஷம் கொடுத்து கொன்றார்.[5] சதாரா சிறையிலிருந்து விடுதலைபெற்று மராட்டிய படைகளுடன் திரும்பிய சந்தா சாகிப்,நவாப் அன்வர்தீனை ஆம்பூர் போரில் கொன்ற பின்னர், திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். அவரது தளபதி ஆலம்கான் மதுரையைப் பிடித்தார். உள்ளூர் மக்களது உணர்வுகளை மதித்தவராக மதுரையின் முந்தைய அரசு வழியினரான விஜயகுமாரனை மதுரைக்கு மன்னராக நியமித்து அவருக்குதுணை புரிய முடேமியா என்ற தனது தளபதியையும் நியமனம் செய்தார். பின்னர், முடேமியா - விஜயகுமாரனை கொல்ல முயன்றபொழுது அவர் மீண்டும் தப்பி சிவகங்கையில் தஞ்சம் பெற்றார்.[6]

இதற்கிடையில் ஆற்காடு நவாப் ஆகிவிட்ட சந்தாசாகிபுக்கும் அன்வர்தீன் மகன் வாலாஜா முகமது அலிக்கும், இடையில் நடைபெற்ற போர்களின் இறுதிக் கட்டமாக பி.பி. 1751ல் திருச்சி கோட்டைப் போர் ஏற்பட்டது. ஏற்கனவே மைசூர் மன்னரது திவான் நஞ்ச ராஜாவுக்கு விட்டு கொடுத்திருந்ததை ஒட்டி மைசூர் படைகள் மதுரையைக் கைப்பற்றின. கூப் சாகிப் என்ற அவரது தளபதியின் தலைமையில் நிலையற்ற மதுரையின் நிலை அண்மையிலிருந்த சிவகங்கை அரசுக்கு பெருத்த மனக் கவலையை அளித்தது. மதுரைக்கு ஆபத்து என்பது தென்பாண்டிய நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணர்ந்து இருந்த மறவர் சீமை மன்னர்கள், தக்க ஆலோசனைக்குப் பிறகு தங்களது பிரதானிகள் வெள்ளையன் சேர்வையையும், தாண்டவராய பிள்ளையையும் படைகளுடன் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மறவர்கள் மதுரைக் கோட்டையைச் சூழ்ந்து தாக்கி, தளபதி கூப் சாகிபை முறியடித்தனர். மதுரையின் மன்னராக விஜய குமாரனுக்கு மீண்டும் முடிசூட்டித் திரும்பினர்.[7] சில மாதங்களில் மறவர் படை தங்களது சீமைக்கு திரும்பிச் சென்றவுடன், மயானா என்ற மதுரைத் தளபதி, மதுரையை மீண்டும் பிடித்துக் கொண்டார். உடலுறுதியும் உள்ளத்துணிவும் இல்லாத விஜய குமாரன் மீண்டு சிவகங்கைக்கே ஒடி வந்தார்.[8] மறவர் படை மீண்டும் சென்று மதுரையை கைப்பற்றியது என்றாலும், அவர்களது கட்டுப்பாட்டில் கோட்டையை வைத்து இருந்துவிட்டு தளபதி மயானா என்பவர் பொறுப்பில் விட்டுத் திரும்பினர்.[9]

இதற்கிடையில், தமிழக அரசியலின் மிக முக்கிய சதுரங்கக் களமாக திருச்சி மாறியது. திருச்சி கோட்டையைப் பிடிக்க பிரெஞ்சுக்காரர் உதவியுடன் சந்தாசாகிபு முயன்றார். எதிர்அணியான வாலாஜாமுகம்மது அலிக்கு ஆங்கிலேயர் உதவியுடன் மைசூர் திவான் நஞ்சராஜா ஏராளமான பொன்னும் பொருளும் படை உதவியும் அளித்தார். மேலும் தஞ்சை மன்னரது ஆதரவும், புதுக்கோட்டை தொண்டைமானது ஒத்துழைப்பும் வாலாஜாவிற்கு இருந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சந்தாசாகிபின் தாக்குதலை அனுபவித்தவர்கள் அல்லவா?

ஏற்கனவே தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மறவர் சீமை மன்னர்களை, வாலாஜா முகமது அலி கேட்டுக் கொண்டார். இந்த சூழ்நிலைகளில் மறவர் சீமையின் உதவியும் ஒத்துழைப்பும் யாருக்கு அளிக்கப்பட வேண்டும்?

தமிழக அரசியலை அலைத்துக் கொண்டிருந்த இந்த பூதாகரமான பிரச்னையில் மறவர் சீமை முழுமையாக ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம். அவ்விதம் செய்யாமல் தனித்து நிற்பது அறிவுடைமையாகாது. அப்படியானால் எந்த அணியில் சேருவது? மறவர் சீமையின் பரம்பரை பகைவர்களான புதுக்கோட்டைத் தொண்டமானும் தஞ்சாவூர் மன்னரும் முந்திக் கொண்டு நிற்கும் முகமது அலியின் அணியிலா?

மன்னர் முத்து வடுகநாதர் பிரதானியுடன் ஆலோசனை செய்தார். அடுத்து சேதுபதி மன்னருடன் கலந்து முடிவிற்கு வந்தார். வழக்கம் போல், இரண்டு மறவர் சீமைகளும், ஆற்காட்டு நவாப் பதவிக்கு நியாயமான உரிமையுள்ள சந்தா சாகிபை ஆதரிப்பது என்பது தான் அந்த முடிவு. இந்த முடிவுக்கு நியாயமான காரணம் மட்டுமல்லாமல் சந்தா சாகிபின் முந்தைய நடவடிக்கையைக் கொண்டும் அவருக்கு சாதகமாக இந்த முடிவு செய்யப்பட்டது.

முன்னர், திருச்சி நாயக்கப் பேரரசின் ராணியான மீனாட்சிக்கு உதவுவதற்கு முன்வந்த சந்தா சாகிபு, திருச்சி சீமையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருந்த மைசூர் படைகளை விரட்டி அடித்ததுடன் மதுரை சீமைப் பாளையங்களையும் தாக்கி பாளையக்காரர்களிடம் கப்பம் பெற்றார். ஆனால் மதுரையை அடுத்துள்ள மறவர் சீமைகளை ஒன்றும் செய்யவில்லை.[10] குறிப்பாக சந்தா சாகிபுக்குப் பயந்து சிவகங்கையில் பங்காரு திருமலையும் அவரது மகன் விஜயகுமாரனும் அரசியல் தஞ்சம் பெற்று இருப்பதை அறிந்து இருந்தும், சிவகங்கையை அவர் சாடவில்லை. இத்தகைய நடுநிலையான நோக்குடைய சந்தா சாகிபுவிற்கு உதவ மறவர் சீமை மன்னர்கள் முன் வந்தனர். அவர் மேற்கொண்ட திருச்சிராப்பள்ளி முற்றுகைக்கு துணைபுரிய நான்காயிரம் மறவர்கள் பூரீரங்கம் சென்று நிலை கொண்டனர்.[11]

இந்தப் போருக்கு முழுமையும் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனி, சந்தா சாகிபுக்கு போதிய படையணிகளையும் தளவாடங்களையும் அளிக்க இயலவில்லை. மற்றும், இந்த முற்றுகையில் ஈடுபடுத்தப்பட்ட பிரெஞ்சுத் தளபதிகள், சந்தா சாகிபிற்கு கட்டுப்படாமல் கோழைத்தனமாக நடந்து கொண்டனர். இதனால் போரின் கடுமை பிசுபிசுத்தது. மறவர் சீமை அணிகள் வெறுப்புடன் சீமை திரும்பினர்.[12] அடுத்து தோல்வியுற்ற சந்தாசாகிபுவை ஆதரிப்பதாக நடித்த தஞ்சைத் தளபதி மானோஜி, அவரை 17.06.1752-ல்[13] நயவஞ்சகமாக கொன்று தீர்த்தான். தமிழக அரசியலில் அன்னியர்களின் ஆதிக்கம் அடித்தளம் பெற்றதை இந்த நிகழ்ச்சி தெளிவாக அறிவுறுத்தியது.

தமிழக அரசியலில் தனிமைப்பட்டு தவிக்கக்கூடாது என்பதற்காக சந்தாசாகிபு அணியுடன் இணைத்துக்கொண்ட சிவகங்கை இராமநாதபுரம் மன்னர்களது நிலை வேதனைப்படத்தக்கதாக இருந்தது. இதே நிலையில் தஞ்சை மன்னர் மறவர் சீமையை சிண்டிப் பார்க்க முயன்றார். இதனை அறிந்த நவாப் முகம்மதுஅலி, தஞ்சைஅரசின் படை உதவி, மதுரை, திருநெல்வேலி பாளையக்காரர்களை அடக்க தேவைப்படுவதால், மறவர் சீமை மீது போர் தொடுப்பதைக் கை விடுமாறு தஞ்சை மன்னரை அறிவுறுத்தினார்.[14] என்றாலும், நவாப்பினது அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, தஞ்சையின் மராத்தியப்படை மறவர் சீமைக்குள் புகுந்தது. தளபதி மானோஜி தலைமையில் நிகழ்ந்த இந்த ஆக்கிரமிப்பிற்கு புதுக்கோட்டைத் தொண்டமானும் தன்னால் ஆன உதவியைச் செய்யத் தவறவில்லை. ஆனால் விரைவில் மறவர்கள் மராத்திய ஆக்கிரமிப்பாளர்களை அனுமந்தக்குடிப் பகுதியிலிருந்து துரத்தி அடித்தனர்.[15]

ஆனால் மீண்டும் மே.1755-ல் கூடுதலான மராத்தியப் படைகள் அனுமந்தக்குடி மாகாணத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டன. உடனே ஆங்கில கம்பெனி கவர்னர், தளபதி காலியத்தை தஞ்சைக்கு அனுப்பி வைத்து, தஞ்சைப் படைகளை திரும்பப் பெற்று மதுரைப்படை எடுப்பிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.[16] அப்பொழுது மதுரையில் முகாமிட்டிருந்த ஆங்கிலத் தளபதி ஹெரானை மன்னர் முத்து வடுகநாதரும் சேதுபதி மன்னரும் நேரில் சந்தித்து தஞ்சை மன்னரது தொல்லைகளைத் தெரிவித்ததுடன், கும்பெனியாருடன் நேசத்தொடர்புகள் கொள்வதற்கு இணக்கத்தையும் அறிவித்தனர். மறவர் சீமையில் ஆங்கில கம்பெனியார் வணிகத் தொடர்புகள் கொள்வதற்கு ஏற்றவாறு தமது கடற்கரைப் பகுதியில் இரண்டு தீவுகளைக் கொடுத்து உதவுவதாகவும் சேதுபதி மன்னர் தெரிவித்தார்.[17] மறவர் சீமை மன்னர்களது நேசநிலைக்கு தளபதி ஹெரான் ஒப்புதல் அளித்ததுடன் தற்பொழுது தாம் நெல்லைப் படையெடுப்பை முடித்த பிறகு, மறவர் சீமை பற்றி கம்பெனி தலைமையிடத்திலும், நவாப்பிடமும் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். அத்துடன் திருநெல்வேலிப் படையெடுப்பிற்கு உதவுமாறு மறவர் சீமை மன்னர்களைக் கேட்டுக் கொண்டார்.

அடுத்த சில நாட்களில், சிவகங்கை, இராமநாதபுரம் மறவர்களைக் கொண்ட படைகள் சேதுபதி மன்னரது சகோதரர் சுப்பராயத் தேவரது தலைமையில் திருநெல்வேலி புறப்பட்டது.[18] ஆங்கிலேயரது சேவைக்கென்றே தங்களை அர்ப்பணித்திருந்த புதுக்கோட்டை தொண்டமானும், தஞ்சை மன்னரும் மறவர்களுடன் கிழக்கிந்தியக் கம்பெனியார் தொடர்பு வைத்துக் கொள்வதை வெறுத்ததுடன் அந்த கூட்டணியில் இருந்து விலகி, தளபதி மயானாவை திருச்சிராப்பள்ளியின் நவாப்பாக அங்கீகரித்துச் செயல்படப் போவதான எதிர்ப்பைக் கூறி மிரட்டினர். இந்த எதிர்பாராத சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக திருநெல்வேலி நகருக்கு ஐந்து கல் தொலைவில் வந்துவிட்ட மறவர் அணியைத் திரும்பிச் செல்லுமாறு தளபதி ஹெரான் உத்திரவிட்டார்.[19]

அப்பொழுது, சென்னைக் கோட்டையின் கும்பெனியாரது புதிய கவர்னராகப் பதவி ஏற்ற பிகாட் என்பவர் தளபதி ஹெரானது செயல்பாட்டிற்கு ஏற்புடையவராக இல்லை. புதிய கவர்னர் அரசியல் கொள்கையில் மாற்றம் செய்ய விரும்பாமல், சிவகங்கை, இராமநாதபுரம் மன்னர்கள், தஞ்சை மன்னருக்கு ஆதரவாகத் தங்களது அனுமந்தக்குடி மாகாண உரிமையை விட்டுக் கொடுத்து ஒத்து போகுமாறு அறிவுறுத்தினார்.[20] ஒரு புதுமையான ஆனால் சற்றும் எதிர்பாராத நியாயத் தீர்ப்பாகத் தோன்றியது, மறவர் சீமை மன்னர்களுக்கு. என்றாலும் மீமாம்சை போன்ற நூல்களில் கலியுகம் மதிக்கத்தக்கதாக காட்டப்பட்டுள்ள பல்வேறு வகையான நியாயங்களில் "தைமிக்க நியாய" வகையிலான நியாயம் இது என்பதை உணர்ந்து ஆறுதலடைந்தனர்.

என்றாலும், தங்களது தற்காப்பிற்கு உதவக் கூடிய வெளிநாட்டு சக்தி ஒன்றின் ஆதரவு இன்றியமையாதது என்ற நிலையை உணர்ந்தனர். அப்பொழுது, ஆங்கில, பிரஞ்சு நாட்டவர்களைப் போல, டச்சுக்காரர்கள் கைத்தறித் துணி, மிளகு, இலவங்கம், பாக்கு முத்து, நெல் ஆகிய பொருள் கொள்முதல் ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். ஹாலந்து நாட்டவரான டச்சுக் கம்பெனியார் தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, மாலத்தீவு, போர்னியோ, ஆகிய கீழை நாடுகளிலும் வாணிபத் தொடர்புகள் வைத்து இருந்தனர். கி.பி.1639 - முதல் தமிழகத்தில் நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தனர். எதிர்க்கரையான இலங்கையில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். சேது நாட்டிற்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏற்கனவே வணிக தொடர்புகள் இருந்ததை தளவாய் சேதுபதி ஆவணங்களில் அறிய முடிகிறது.

மதுரை திருமலை நாயக்கரது படைகள், போர்ச்சுக்கீசியரின் உதவியுடன் கி.பி. 1645-ல் இராமேசுவரம் தீவில் தளவாய் சடைக்கன் சேதுபதியினை எதிர்த்து போரிட்ட பொழுது, மறவர் சீமைப்படைகளுக்கு உதவியாக இருந்தவர்கள் இந்த டச்சுக்காரர்கள். கி.பி. 1659-ல் மே மாதத்தில் திருமலை சேதுபதிக்கு, மன்னர் முத்து சலாபத்தில் உள்ள முத்துக்குளிக்கும் உரிமையை மதித்து சேதுபதி மன்னருடன் டச்சுக்காரர்கள் உடன்படிக்கை ஒன்றை செய்ததை டச்சு ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.[21]

இன்னும் மார்ட்டின் பாதிரியாரது கி.பி.1710-ம் ஆண்டுக் கடிதம் ஒன்றின் மூலம் டச்சுக்காரர் சேதுபதி மன்னரிடமிருந்து முத்து சங்கு குளிக்கும் உரிமை பெற்று இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.[22]

மீண்டும் மராட்டியர்கள்

மறவர் சீமையின் வடகிழக்குப் பகுதி விரிசுழி ஆற்றின் வடகரையில் அமைந்து தஞ்சாவூர் சீமையை அடுத்த பகுதியாக விளங்கியது. கி.பி.1728-ல் பாம்பாற்றின் வட பகுதியில் உள்ள சேதுபதி சீமையை தஞ்சை மன்னருக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த பகுதியை தங்கள்ஆட்சிப் பரப்பாகக் கொள்வதற்கு மராட்டிய மன்னர்கள் முயன்று வந்தனர். அவர்களது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் பகுதியாக மன்னர் துல்ஜாஜி கி.பி.1771-ல் போர் தொடங்குவதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடித்தார். அவருக்கு சொந்தமான சில யானைகள், மிரண்டு ஒடி வந்து சிவகங்கை காடுகளில் புகுந்து அட்டகாசம் செய்தன. மன்னர் முத்து வடுகநாதர் ஆணையின்படி அந்த யானைகள் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டன.[23] அவைகளை விடுதலை செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறும், அனுமந்தக்குடிப் பகுதியை தமக்கு விட்டுக் கொடுக்குமாறும் மன்னர் துல்ஜாஜி கோரினார். அடுத்து, சேதுபதி மன்னருக்கு ஆதரவான நவாபின் படை வீரர்களைப் போல் மாறுவேடம் தரித்த தஞ்சாவூர் படைகள், இராமநாதபுரம் சீமையின் வடகிழக்குப் பகுதியில் முதுவார்நத்தம் என்ற ஊரை கைப்பற்றிக்கொண்டன. அந்த மகாணம் முழுவதும் இப்பொழுது தஞ்சைப் படைகளால் சூழப்பட்டன.[24] அடுத்து, இராமநாதபுரம் கோட்டையைத் தாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இராமநாதபுரம் கோட்டையை பிடிப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற முற்றுகையில் தோல்வி கண்டு இராமநாதபுரம் ராணி முத்து திருவாயி நாச்சியாருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட தஞ்சை மன்னர் துல்ஜாஜி சிவகங்கைச் சீமையில் புகுந்தார். அப்பொழுது முத்து வடுக நாதருக்கு ஒலை ஒன்றை அனுப்பி வைத்தார்.[25] அதில் மன்னர் கைப்பற்றியுள்ள ஆறு யானைகளை ஒப்படைப்பதுடன், செலவுத் தொகைக்காக ரூபாய் ஒரு லட்சம் கொடுக்குமாறு அந்த ஒலையில் தஞ்சை மன்னர் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே மறவர் சீமை நோக்கி தஞ்சை படைகள் செல்வதையறிந்த நவாப் முகமது அலி, தமது படைகளுடன் தஞ்சை நோக்கி வந்தார்.[26] நவாபின் படைகள் தம்மை தொடர்வதை அறிந்த தஞ்சை மன்னர் சிவகங்கைப் படையெடுப்பைக் கைவிட்டு விட்டு தஞ்சாவூர் திரும்பிவிட்டார்.[27] அத்துடன் நவாப் அவரை விடவில்லை. தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தன்னரசுகளும் தனது மேலாண்மைக்கு உட்பட்டவை; ஆதலால் தஞ்சை மன்னர் அத்து மீறி இராமநாதபுரம், சிவகங்கை மீது படையெடுத்தது தவறான போக்கு என்பதை குறிப்பிட்டிருந்தார். தஞ்சை அரசரோ மறவர் சீமையின்பகுதி தமக்கு கட்டுப்பட்டது என்று உரிமை கொண்டாடினார்.[28] தஞ்சை மீது போர் தொடுக்க ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனியாரை அணுகினார். கர்நாடக நவாப் கம்பெனியாருடன் கி.பி.1765-ல் செய்து கொண்ட உடன்பாட்டில் மறவர் சீமை பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால் படை உதவி அளிக்க கம்பெனியார் தயங்கினர். இது பற்றி முடிவு செய்ய சென்னை கவர்னர் தனியாக ஆய்வுக் குழு ஒன்றை நியமித்தார். அந்த குழுவின் கண்டுபிடிப்பு அறிக்கை மறவர் சீமையும் புதுக்கோட்டை தொண்டைமானும் எப்பொழுதும் எந்த அரசுக்கும் முறையான கப்பம் செலுத்தவில்லை என்பது தான். மேலும் திருச்சியில் நாயக்க அரசு இருந்த பொழுதும், மறவர் சீமையும் புதுக்கோட்டையும் தன்னரசுகளாகவே இருந்தன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.[29] ஆனால் தஞ்சைப் படை எடுப்பினால் ஏற்படும் செலவை ஏற்றுக் கொள்வதுடன் முப்பத்து ஐந்து லட்சம் ரூபாய் அன்பளிப்பு அளிப்பதாக நவாப் சொன்னவுடன் கவர்னர் நவாப்பின் வேண்டுகோளை ஏற்று தஞ்சை மீது போர் தொடுக்க ஒப்புதல் அளித்தார். இவ்விதம் தஞ்சை அரசை பல வகையான சிக்கலுக்குள் சிக்க வைத்து பெரும் பணத்தை செலவழிக்குமாறு செய்த நவாப், அடுத்து மறவர் சீமையையும் கைப்பற்றுவது பற்றிச் சிந்தித்தார்.

கி.பி.1752-ல் தனது பதவி போட்டியில் சந்தா சாகிபை வென்ற பிறகு, தொடர்ந்து கடந்த இருபது ஆண்டுகளில் பாளையக்காரர்களுடனான போர்களில்

கி.பி.1757-61-ல் திருநெல்வேலி பாளையக்காரர்கள் போர்,

கி.பி.1763-1764-ல் மதுரை கான்சாகிபுவுடன் போர்,

கி.பி. 1765-ல் அரியலூர், உடையார் பாளையங்களின் மீதான போர்,

கி.பி.1764-ல் திருவாங்கூர் மீதான போர்,

கி.பி.1771-ல் தஞ்சை மீதான போர்

என்று தமது மேலாண்மையை நிலைநாட்டிய வாலாஜா முகம்மது அலி, எஞ்சியுள்ள இராமநாதபுரம், சிவகங்கை தன்னரசுகளைக் கைப்பற்றுவது என முடிவு செய்தார்.

இத்தனை ஆண்டுகளாக அவர்கள் நவாபிற்கு கப்பம் செலுத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் அடுத்து நவாப்பின் முன் அனுமதி இல்லாமல் டச்சுக்காரர்கள் தமது சீமையில் தொழிற் மையங்கள் தொடங்குவதற்கு சேதுபதி மன்னர் அனுமதி அளித்ததும் அதைவிட பெரிய குற்றம் அல்லவா? இன்னும் சட்டவிரோதமாக சர்க்கார் கிராமங்களை கைப்பற்றியிருப்பதாகவும் இராமநாதபுரம் மன்னர் மீதான குற்றச்சாட்டு தொடர்ந்தது. இத்தகைய காரணங்களைக் காண்பித்து மறவர் சீமையை மீட்பதற்கு நவாப் முகமது அலி ஆங்கிலேயரிடம் படையுதவி கோரினார். ஒன்பது மாதங்களுக்கு முன்னர் மறவர் சீமை தன்னரசுகளை பற்றிய தெளிவான அறிக்கையை தயாரித்த கம்பெனியார், அவர்களுக்கே உரிய சந்தர்ப்பவாதம் காரணமாக, இப்பொழுது மறவர் சீமையைக் கைப்பற்ற படை உதவி அளிக்க முன்வந்தனர். ஆம் அவர்களுக்கு வேண்டியது அரசியல் ஆதாயம்! அடுத்தது பணம்.

மே 1772-ல் திருச்சியிலிருந்து பெரும்படை ஒன்று புறப்பட்டது. ஜோஸப் சுமித் என்ற ஆங்கில தளபதியும் நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ரா ஆகியோரது கூட்டுத் தலைமையில்.[30] முதலில் இராமநாதபுரம் கோட்டை இந்த படை எடுப்பிற்கு பின்பலமாகவும் பிற பாளையக்காரர்கள் உதவிகளை இராமநாதபுரம் சிவகங்கை மறவர்கள் பெறாமல் தடுக்கவும், மதுரைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயரது இன்னொரு அணி தளபதி பான்ஜோர் என்பவர் தலைமையில் திருப்புவனம் வந்தது [31]

இராமநாதபுரம் அடைந்த படைகள், ஜூன் 1, 2 ஆகிய நாட்களில் கோட்டையில் முதல் வெடிப்பை ஏற்படுத்தியது. அதன் உள்பகுதியில் நிலை கொண்டு இருந்த மூவாயிரம் வீரர்களை போரில் இழந்து சேதுபதியின் அணி தோல்வியுற்றது. கோட்டையைக் கைப்பற்றிய கூட்டுப் படையினர் இராமநாதபுரம் ராணியையும், இளவரசரையும் திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தனர்.[32]

அடுத்து இந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிவகங்கைச் சீமை நோக்கி புறப்பட்டனர். மதுரையில் இருந்து வந்த அணி திருப்புவனம் நோக்கி முன்னேறியது. தளபதி ஜோசப்சுமித் நவாப் உம்தத்துல் உம்ரா ஆகியோர் மேற்கு நோக்கி முன்னேறி வந்தனர். எங்கு பார்த்தாலும், காடு, முட்செடிகள் இவைகளை கடந்து வருபவர்களைத் தடுக்கும் வகையில் வழியெங்கும் பெரிய மரங்கள் வெட்டப்பட்டு குறுக்கே தடையாக போடப்பட்டு இருந்தன.[33]

ஆங்காங்கு பதுங்கு குழிகளும் தோண்டப்பட்டு எதிரியை மடக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. என்றாலும், சிவகங்கை கோட்டைக்கு அபாயம் இருந்ததால் எதிரிகளைச் சமாளிப்பதற்கான ஏற்ற இடம் காளையார் கோவில் காடுகள்தான் என முடிவு செய்யப்பட்டு மன்னரும், மற்றவர்களும் காளையார் கோவில் கோட்டைப் பாதுகாப்பை ஆயத்தம் செய்தனர்.[34] ஜூன் 21-ம் தேதி, தளபதி பான்ஜோர் தலைமையிலான மதுரையணி, சிவகங்கையைக் கைப்பற்றி கிழக்கே முன்னேறியது.[35] தொண்டி சாலை வழியாக காளையார் கோவிலை நோக்கி வந்த ஜோசப் சுமித், மன்னர் முத்து வடுகநாதருடன் தொடர்பு கொண்டார். உயிர்ச்சேதம், பொருட் சேதத்தை தடுப்பதற்காக மன்னரும் படை எடுப்பாளருடன் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டார்.[36] இந்த முயற்சி முற்றுப்பெறுவதற்குள்ளாக, முன்னேறி வந்த மதுரை தளபதி பான்ஜோர் அணி காளையார் கோவிலை நெருங்கி வந்து தாக்குதலைத் தொடுத்தது.

ஆறிலிருந்து பத்துக்கல் தொலைவில் வடக்கிலும், மேற்கிலும் பரந்துள்ள அடர்ந்த இயற்கையான காடுகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் அந்நியர்கள் அவ்வளவு எளிதில் புகுந்து வந்து நேரடியாகப் பொருத முடியாது என தப்புக் கணக்குப் போட்ட சிவகங்கை மறவர்களுக்கு இந்தத் தாக்குதல் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. துரோகிகளுக்கு என்றுமே துணையாக இருக்கும் தொண்டமானது ஐயாயிரம் பேர் கொண்ட காடு வெட்டிகள் அணி, நீண்ட அரிவாள்களுடன் வந்து, மரங்களை வெட்டிச் சாய்த்து கும்பெனிப் படைகள் விரைந்து எளிதாக முன்னேறுவதற்குப் பாதைகளைச் செம்மைப்படுத்திக் கொடுத்தது.

மேலும், அமைதிப் பேச்சிற்கு உத்திரவாதம் அளித்த தளபதி ஜோஸப் சுமித், மேற்கேயிருந்து முன்னேறி வந்த தளபதி பான்ஜோருக்கு தமது அமைதி பேச்சுப் பற்றி தெரிவிக்காததால் அவரது அந்த அறிவிப்பு தளபதி பான்ஜோருக்கு சென்று. அடையாததால், அவர் தாக்குதலை தொடுத்துவிட்டார். அவருக்கு அளிக்கப்பட்டிருந்த உத்திரவு காளையார் கோவில் கோட்டையை மேற்குப் புறமாக வந்து சூழ்ந்து கொள்ள வேண்டும் என்பது தான், தமது மேல் அதிகாரியான ஜோஸப் சுமித்தின் முன் உத்திரவைப் பெறாமலேயே காளையார்கோவில் தாக்குதலை அவர் தொடுத்தது மறவர்களிடையே பெருங்குழப்பத்தை உண்டாக்கியது.

சிவகங்கை சீமை தோன்றியபிறகு, அந்த சீமையிலே நிகழ்ந்த முதல் போர் அது. போராட்ட உணர்வும், தாய்நாட்டுப் பற்றும் மிக்க தமிழக மறவர்களை, வெள்ளையரின் வெடி மருந்து திறன் கொண்டு அதுவரை அழித்து வந்த ஆற்காட்டு நவாப், கடைசியாகச் சந்தித்த வீரமறவர் அணி அது. அதுவும் சங்ககாலச் சிறப்பு வாய்ந்த கானப்பேரில் மதுரைப் பாண்டியன் பெரு வழுதி தன்னை ஒரு சேரப் பொருதிய, வளவனையும் பொறையனையும் அழித்து புறமுதுகிட செய்த புனித பூமி. ஆதலால் அந்த மண்ணின் மாண்பையும், மரபுவழிப் பெருமையையும் நிலை நிறுத்த அங்கு மறவர் போரிட்டனர்.

"பகை எனில் கூற்றம்வரினும் தொலையான்' என்ற புலவர் கூற்றுக்கு மாறுபடாமல், பகைவர்களைக் கூற்றுவனுக்கு இரையாகக் கொடுத்ததுடன் தங்களையும் பொன்றாத புகழுக்கு உரியவர்களாக்கி உயிர் துறந்தனர். பகைவர்கள் வெற்றி பெற்றனர். படுகொலை, பகல் கொள்ளை. மன்னர் முத்துவடுக நாதரும் படுகளத்தில் குண்டு பாய்ந்து தியாகியானார். அதுவரை ஆற்காட்டு நவாப், பாளையக்காரர். குறுநில மன்னர்கள் மீது போர் தொடுத்த போது, அவர்கள் நவாப்பிடம் சரணடைந்தனர். நெற்கட்டும்.செவ்வல் பூலித்தேவர் உடையார் பாளையம் பாளையக்காரர் போன்றவர்கள் நவாப்பிடம் தோல்வியுற்றனர். ஒடி ஒளிந்தனர். எதிரியின் கைகளில் படாதவாறு ஒடி ஒளிந்து மறைந்தனர். மாவீரன் கான்சாகிபு போன்றவர்களை தோற்கடிக்கப்பட முடியாத நிலையில் துரோகிகள் மூலம் கைப்பற்றி அவர்களை தாக்கு கயிற்றில் தொங்கவிட்டனர். ஆனால் சிவகங்கைப் போர்க் களத்தில் அவர்களை நேருக்கு நேர் சந்தித்து போரிட்ட மன்னர் முத்து வடுக நாதர் வீழ்த்தப்பட்டார்.[37] இந்திய விடுதலை வரலாற்றில் அந்நிய சக்திகளை ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டு களத்தில் மடிந்த முதலாவது மன்னர் முத்து வடுகநாதர்.

காளையார் கோவில் படுகொலை பற்றிய செய்தி லண்டனுக்குப் போய் சேர்ந்ததும் ஆங்கில - கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகிகள் தளபதி ஜோசப் சுமித்தை கொலையாளி என குற்றம் சுமத்தினர். அமைதிப் பேச்சிற்கு உடன்பட்ட பிறகு போர் தொடுத்து படுகொலை நடத்தியதற்காக அவர்மீது ராணுவ விசாரணையை நடத்தினர்.[38] கம்பெனியாரது போர்வீரர்களிடம் நிலவிய கட்டுபாடின்மை காரணமாக, அவர்களைத் தன்னால் கட்டுப்படுத்தி அந்தப் போரைத் தவிர்க்க இயலவில்லை என்று தளபதி சுமித் தமது இயலாமையை தெரிவித்தார்.[39] அவரது சமாதானம் ஏற்றுக் கொள்ளப்படாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டார். நீதி விசாரணையின் பொழுது, காளையார் கோவில் கோட்டைக்குள் காணப்பட்ட அத்துணை மக்களும், மன்னரது மனைவி, மகள், தவிர அனைத்து மக்களும் காரணமின்றி கொல்லப்பட்டனர் என்ற கோர்க் கொலையைப் பற்றிய அதிர்ச்சி தரும் செய்திகளைாக கேட்ட இளகிய மனம் படைத்த கம்பெனி இயக்குநர் சிலர், நீதி மன்றத்தில் இருந்து வேதனையுடன் அகன்று விட்டனர். லண்டனில் இருந்து வெளியான இரண்டு செய்தித்தாள்கள், "தளபதி அப்ரஹாம் பான்ஜோர் காளையார் கோவில் கொலைகாரன்" என வர்ணித்து எழுதின.[40] தனது உத்திரவுகளைப் போர்வீரர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட விளைவு என்று சமாதானம் கூறி தன் மீது பழியைத் தவிர்க்க முயன்றார் அவர். இவருக்குத் தண்டனை கிடைப்பதற்கு முன்னரே இறந்துவிட்டார். இவையனைத்தும் 25.06.1772-ல் காளையார் கோவில் கோட்டையில் பரங்கிகள் நடத்திய காட்டு மிராண்டித்தனமான படுகொலையின் பரிமாணங்களை ஒரளவு நினைத்து பார்ப்பதற்கு ஏதுவாக உள்ளது.

மன்னர் முத்து வடுக நாதரது மரணம், சிவகங்கைச் சீமை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் அவதியுற்று மக்கள் மீட்சி பெறுவதற்குள் அந்நியரது ஆக்கிரமிப்பு படை தனது கைவரிசையைக் காண்பிக்கத் தொடங்கியது. காளையார் கோவில் கோட்டைக்குள் இருந்த அனைத்து மக்களையும் பரங்கியர் படுகொலை செய்த இரத்த வெறியுடன் சிவகங்கை சென்றனர். அங்கு அனைத்து வீடுகளையும் கொள்ளையிட்டனர். அவர்கள் கொள்ளை கொண்ட அணிமணிகளின் மதிப்பு அன்றைய நிலையில் ரூபாய் ஒன்றரை லட்சம் என அவர்களது ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.[41] மக்களை பீதியும் கவலையும் பற்றி அலைத்தது. முற்றிலும் எதிர்பாராத இந்தச் சூழ்நிலை, மறைந்த மன்னர் முத்துவடுகநாதரது அமைதியும் மனநிறைவும் தந்த இருபத்து இரண்டு வருட (கி.பி.1750-72) ஆட்சியை நினைத்து நினைத்து வருந்தும் நிலையை ஏற்படுத்தியது. ஆண்டிலும், அனுபவத்திலும் இளையவரானாலும் ஆட்சிமுறையில் தமது தந்தையின் அடிச்சுவட்டினைப் பின்பற்றியவராக நடந்து வந்தவர் அல்லவா அவர்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரிடமும், காளையார் கோவில் காளைநாதரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். தேவாரப் பதிகம் பெற்றதும், பாண்டியரது திருப்பணியுமான காளையார் கோவிலின் நுழைவு வாயிலில் மிகப் பிரம்மாண்டமான கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்தார். இந்த மன்னரது இதயத்தின் அடித்தளத்தில், திருமடங்களுக்கு கூடுதலான இடம் அளித்து இருந்தார். காரணம் அன்றைய நிலையில் மக்களது சமுதாய வாழ்க்கை செம்மை பெற மடாதிபதிகளின் தொண்டு மிகவும் தேவை என்பதை உணர்ந்து இருந்தார். இதனால் சிவகங்கை பண்டார மடம், காளையார் கோவில் மிளகாய்த் தம்புரான் மடம், ஊத்துமலை மடம், திருவாவடுதுறை பண்டார மடம், தருமபுரம் மடம், திருப்பனந்தாள் மடம், சிருங்கேரி மடம், சதுரகிரி குளந்தை பண்டார மடம் ஆகிய அமைப்புகளின் பீடாதிபதிகள் இந்த மன்னரிடமிருந்து பல அறக்கொடைகள் பெற்று இருந்ததை கீழ்க்கண்ட பட்டியலில் காணமுடிகிறது.

ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, எந்த சமஸ்தானாதிபதியும் செய்யாத சாதனையாக, கன்னட தேசத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடாதிபதிக்கு இந்த மன்னர் திருப்புவனம் வட்டத்தில் கருங்காலகுடி, தவத்தார் ஏந்தல் என்ற இரு ஊர்களை சர்வமான்யமாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்துக்களால் இந்த நாட்டின் மிகச் சிறந்த புண்யத்தலமாக கருதப்பட்டு வரும் காசியின் கங்கைக் கரையில் தமது பாட்டனார் நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது நினைவாக ஒரு மடம் ஒன்று அமையவும் அதில் முறையாக மகேசுவர பூஜை நடைபெறவும் வல்லக்குளம் என்ற கிராமத்தை அந்த தர்மத்திற்கு ஈடாக தருமபுரம் ஆதினகர்த்தருக்கு வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.[42] காரணம், அன்றைய கால கட்டத்தில் முடிமன்னரும் முத்தமிழ் வள்ளல்களும் அருகி இருந்த அவல நிலையில், கோடை கால குளிர் நிழலாகத் தமிழையும் சமயத்தையும் வளர்த்தவர்கள் இந்த மடாதிபதிகள். சுவாமி காரிய துரந்தரன் என விருது பெற்ற சேதுபதிகளின் வழியினரான இந்த மன்னர்கள், இவர்களை பொன்னும் பொருளும் ஊரும் பேரும் வழங்கி நாளும் புரந்ததில் வியப்பில்லைதான். மன்னர் முத்து வடுகநாத தேவரது
அறக்கொடைகள்

கி.பி 1750 பாணன்வயல், வாதன்வயல் திருவாரூர் தியாகேசர் ஆலயம், அன்னதான கட்டளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம்.
1751 இடையன்குளம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம்.
காத்தாடி ஏந்தல் மானகுடி, முடிக்கரை சிவகங்கை சசிவர்ணர் ஆலயம்
அச்சங்குளம் (மாற நாடு) ஊழியமானியம்
புதுர் (எமனேஸ்வரம்) சத்திர ஊழியமான்யம்
1752 நிரஞ்சான் ஊத்திக்குளம் பக்கத்தான்குடி இருளப்ப செட்டி, தர்மாசனம் நாகபூஸண ஐயர், இனாம் சீனிவாச தாத்தாசாரியார் தர்மாசனம்
அமரன்வயல் சேசகிரி ஐயங்கார், தர்மாசனம்
உரசூர் வியசை ராவல், தர்மாசனம்
1753 மேலப்பிடாரிசேரி (எமனேஸ்வரம் வட்டம்) ஊழியமானியம்
1755 ஏமம் (மங்கலம் வட்டம்) ஊழியமானியம்
செம்மான் ஏந்தல் (எமனேஸ்வரம் வட்டம்) இராம சாஸ்திரி, தர்மாசனம்
பெரியகையன் சேச ஐயங்கார், தர்மாசனம்
சன்னாசி (மங்கலம் வட்டம்) அழகிரி ஐயங்கார், தர்மாசனம்
1755 புதுக்குடி பழுத்தான் குளம் (மங்கலம் வட்டம்) வாசுதேவ ஐயங்கார், தர்மாசனம்
1757 சிராம்புளி (மங்கலம் வட்டம்) நாராயண வாத்தியார், தர்மாசனம்
காளத்திஏந்தல் திருவாவடுதுறை பண்டாரமடம்
அரசப்பிள்ளைதாங்கி அழகிய சுந்தர குருக்கள்
1758 கமுதக்குடி ராமலிங்க சாமியார், தர்மாசனம்
வெட்டியான் வயல், காளையார் கோவில் மடம்,
கட்டி வயல் தண்ணிர் பந்தல், அன்னதானம்
பள்ளியார் ஏந்தல் சிவகங்கை பண்டாரம் மடம்
1759 மேலச்சொரிக்குளம் அன்னதானக் கட்டளை, ஊத்துமலை மடம்
கிழத்துசிவனேந்தல் (சாக்கை வட்டம்) நரசு ஐயர்



[43]

1760 கொடிமங்கலம் (மங்கலம் வட்டம்) திருவாடுதுறை மடம்
1761 கருங்காலக்குடி தவத்தார் ஏந்தல் சிருங்கேரி சாரதா தேவி மடம்
அயினி செட்டி ஏந்தல் (திருவாடனை வட்டம்) பெரிய தம்பி ஜீவிதம்
கொல்லன்வயல் (அமராவதி வட்டம்) தர்மசாசனம்
மேலக்நெட்டுர் சிறுதேட்டு சதுரகிரி குளந்தை ஆனந்த பாண்டார மடம்
1763 வல்லக்குளம் (எமனேஸ்வரம் வட்டம்) காசியில் பெரிய உடையத் தேவர் மடம் கட்டி, மகேசுவர பூஜை, அன்னதானம் நடத்த திருப்பனந்தாள் மடம்
பிராமணக்குறிச்சி, சாத்தனேந்தல் (எமனேஸ்வரம் வட்டம்) திருவாடுதுறை மடம்
1764 கொச்சக்குடி (அமராவதி வட்டம்) வைத்தியநாத சாஸ்திரி, ஊழியமாணியம்
வெள்ளிப்பட்டி மன்னார்குடி பரசுராம ஐயர், தர்மசாசனம்
அம்பலத்தாடி (திருப்புவனம் வட்டம்) சர்வோத்தம் ஐயர், வெங்கட கிரிஷ்ண அவதானி, தர்மசாசனம்
அரியாளி (எமனேஸ்வரம் வட்டம்) மடப்புரம் கோயில்
1769 கொடிமங்கலம் நாகமுகுந்தன்குடி திருவாடுதுறை பண்டார சன்னிதி மடம், மகேசுவர பூஜைக்கு
1771 அழகர்குடி (திருப்புத்தூர் வட்டம்) அக்கிரஹார தர்மம்
1771 குருசேத்திர ஏந்தல் (திருப்புத்துார் வட்டம்) ராஜகோபால ஐயங்கார், தர்மாசனம்

பளிளிவாசல்

1770 குழியூர் (சாக்கை வட்டம்) முகைசீன் ஆண்டவர் பள்ளி வாசல்


அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில செப்பேடுகளின் உண்மைநகல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. குறிச்சி செப்பேடு

சிவகங்கைச் சீமையை கி.பி.1750 - 1772 வரை ஆட்சி செய்த முத்து வடுகனாத பெரிய உடையாத் தேவர் வழங்கியுள்ள அறக்கொடைகளுக்கான செப்பேடுகளில், நமக்குக் கிடைத்துள்ள முதலாவது செப்பேடு. திருவாவடுதுறை மடத்தில் மகேசுர பூஜை நடப்பிப்பதற்காக இந்த மன்னர் 10.6.1740-ல் வைகையாற்றுக்கு வடக்கே உள்ள குறிச்சி கிராமத்தை தான சாதனமாக வழங்கியதற்கான ஆவணம் இது. இந்த மன்னர் கி.பி.1750-ல் தான் ஆட்சிக்கு வந்ததாலும் இந்தப் பட்டயம் கி.பி.1740-ல் வழங்கப்பட்டு இருப்பதாலும் இதனை முத்து வடுகநாதத் தேவர் பெயரில், அவரது தந்தையார் அரசுநிலையிட்ட சசிவர்ணத்தேவர் வழங்கி இருத்தல் வேண்டும். இந்தப் பட்டயத்தில் கி.பி.1742ல் திருவாவடுதுறை மடத்திற்கு தானமளிக்கப்பட்ட சுந்தனேந்தல் பற்றிய செய்தியும் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது.


சிவகங்கைச் சீமையின் சமுதாய அமைப்பில் இருந்த மக்கட் பிரிவினர், மக்களிடமிருந்து பெறப்பட்ட அரசு இறைகள், சுங்கம் ஆகிய வருவாய் இனங்கள், மற்றும் நிலப்பிரிவுகள், ஆகியவைகளைத் தெரிவிக்கும் அரிய ஆவணமாகவும் இந்த தானசாதனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(இந்தச் செப்பேடு திருவாவடுதுறை மடத்தில் உள்ளது.)

1. சுவத்திஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரிய ராயிர தள விபாடன் பாசைக்குத் தப்பு வரா
2. யிர கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டி ம
3. ண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிறதிட்டாபனா சாரியன் தொண்ட மண்டல சண்டப்பி
4. றசண்டன் ஈளமுங் கொங்கும் யாள்ப்பாண பட்டணமும் யெம்மண்டலமுமளித்துக் கெசவே
5. ட்டை கொண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேசுரன் ராச மார்த்தாண்டன் இராசகுல திலகன்
6. ராய ராகுத்த மிண்டன் மன்னரில் மன்னன் மருவலர்கேசரி துட்டரில் துட்டன் துட்ட நெட்டூ.
7 ரன் சிட்டர் பரிபாலனன் ஒட்டியர் மோகந்தவிள்த்தான் துலுக்கர் தள விபாடன் வ
8. லியச் சருவி வழியில் கால்நீட்டி தாலிக்கு வேலி இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் வைகை வ
9. ளநாடன் ஆற்றுப் பாச்சி கடலிற் பாச்சி சேது நகர்காவலன் சேது மூலா துரந்தரன் இராமனாதசு
10. வாமி காரியதுரந்தரன் சிவபூசாதுரந்தரன் பரராசசிங்கம் பரராசகேசரி பட்ட மானங் கா
11. த்தான் பரதேசி காவலன் சொரிமுத்து வன்னியன் கோடி சூரியப்பிரகாசன் தொண்டியந்து
12.றை காவலன் இந்துகுல சற்பகெருடன் இவளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் நவகோடி நாராய
13. ணன் பஞ்சவர்ணன் பாவாடையுடையோன் துட்டநிற்கிறக சிட்டர் பரிபாலன் அட்டலட்சி
14. மி வாசன் நித்திய கலியாணன் மனுகுல வங்கிசன் சாமித்துரோகியன் மிண்டன் கட்டாரி சாளு
15. வன் அடைக்கலங் காத்தான் தாலிக்கு வேலி ரணகேசரி ரண கிரிடி சங்கீத சாயுச்சிய வித்தியா வினோத
16. ன் செங்காவிக் குடையோன் சேமத்தலை விருது விளங்கும்மிரு தாளினான் நரலோகர் கண்டன் பொ
17. றுமைக்குத் தன்மர் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீமன் பரிக்கு நகுலன் சாத்திரத்துக்குச
18. காதேவன் கொடைக்குக் கன்னன் அறிவுக்குக்க கத்தியன் தனத்துக்குக் குபேரன் அனுமக்கொடி
19. கெருடக் கொடி புலிக்கொடி யாளிக்கொடி சிங்கக்கொடிமகரக் கொடி மதப்புலி காரிய
20. ங் காத்தான் திருச்சிங்காதனத்தில் திருமகள் பதம் போற்றி ராச்சிய பரிபாலனம் பண்ணி
21. யருளாநின்ற சாலிய வாகன சகாத்தம் 1662க்கு மேல் சொல்லாநின்ற ரவுத்திரி
22. ஸ்ரீ ஆனி மீ 12 உ ரீமது அரசு நிலையிட்ட விசைய ரெகுனாதச் சசிவர்ணப் பெரிய உடையாத்
23. தேவரவர்கள் புத்திரன் முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் குருவாரமும் சதுத்தெ
24. சி.யு அம்மவாசியும் மிறுக சீரிஷ நட்செத்திரமும் பெற்ற சுபதினத்தில் திருவாடுதுறைப் பண்டார
25. ச்சன்னதியில் அம்பலவாணசுவாமி பூசைக்கும் மகேசுவரபூசைக்கும் தன்மசாதன தாம்புரப்
26. ட்டையங் கொடுத்தபடி பட்டையமாவது கிறாமம் குறிச்சி வைகையாற்றுக்கு வடக்கு நெட்டு.
27. ர் குறிச்சிக்குத் தெற்கு புதுக்கோட்டைக்கு கிளக்கு முனை வண்டி மேலைப் பிடாரி சேரிக்கு மேற்கு இந்தபெ
28. ரு னான்கு எல்லைக்கு உள்பட்ட நிலத்திற் பாதியும் பேட்டைத் தலங்களுக்கும் வழிச் சாரிக்கும் பொதி ஒ
29. ன்றுக்கு மாகாணியும் தலைசுமைக்கு அரை மாகாணியும் மற்றச் சில்லறைக் கடையளுக்கும்
30. பேட்டைத் தலத்துக் கடையளுக்கும் மாதம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் கடல்துறையி
31. ல் நெல் கண்டி ஒன்றுக்கு மூன்று மாகாணியும் சீமை ஒன்றுக்கு அரை மாகாணியும் மாறுபடகு
32. க்கு தோணி சுரிப்பு யேற்றுமதி இறக்குமதியில் பத்துப் பணம் தீருவை பட்டால் மகமை அரை
33. ப்பணமும் உம்பளத்தில் பத்துப் பணத்துக்கு அரைக்கால்பணமும் சீமையொன்று அ
34. ரை மாகாணியும் கம்பட்டத்தில் னூறு பொன்னுக்கு அரைப்பணமும் பண்ணைக் கிராமம் சிறுதேட்
35. டுக் கிராமம் வரிசைக் கிராமம் தேவதாயம் பிறமதாயம் மாணிபம் மடப்புறம் தேவமார் பாளையகாரர்
36. ராசாக்கள் ராவுத்தமார் பிள்ளைமார் மல்லக செட்டியள் நாயக்கமார் அய்யமார் ஒண்டடி காற
37. ர் ஊளியக்காறர் இந்தவகைக் கிறாமங்களுக்கும் மாத்தால் ராமலிங்கப்படி
38. குறுணியும் புஞ்சை நவதானியத்துக்கு கட்டுக்கு முன்னாழியும் இந்தப்படிக்கு அம்பலவாணசுவாமி பூசைக்
39. குக் கொடுத்தபடியினாலே இதுவே தாம்பிற சாதனமாக சந்திராதித்தருள்ளவரைக்கு
40. ம் பாரம்பரையாத் தன்ம பரிபாலனம் பண்ணிக் கொண்டிருப்பாராகவும் கிராமத்தில்
41. பளவரிப் பலவரி கருப்புக்கட்டிவரி வேண்டுகோள் வரி வெள்ளைக்குடைரி கொடிக்கால்வரி
42. கத்திப்பெட்டிவரி மற்றச் சில்லறைப் பலவரிகளும் உள்ளி பாளையமும் இந்தக் கிறாமப் பெரு
43. நான்கெல்லைக்குள்பட்ட நஞ்சை புஞ்சை மாவடை மரவடை நிதி நிட்சேபம் உள்படச் சறுவ மானிய
44. மாக ஆண்டு கொள்வாராகவும் இந்தத் தன்மத்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்
45. ணின பேர்க் காசிலேயும் சேதுவிலேயும் ஆயிரஞ் சிவலிங்கப் பிரதிட்டையும் ஆயிர
46. ம் பிரம்மபிறதிட்டையும் ஆயிரம் கன்னிகாதானம் கோதான புண்ணியமும் பெறுவராகவும் இ
47. ந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணின பேர் காசிலேயுஞ் சேதுவிலேயும் ஆயிரங்
48. காராம்பசு மாதாகுரு இவர்களை வதை பண்ணின தோசத்திலே போவாராகவும் துந்து
49. பி ஸ்ரீ புரட்டாசி மாதம் 15 பட்டயம் கொடுத்தபடி பட்டையமாவது கிராமம் சுந்தனேந்தல் வை
50. கையாத்துக்கு தெற்கு தெளிச்சாத்தனூர் எல்லை புளியமரத்துக்கு மேற்கு பொதுவக் குடிக் காட்டுக்கு வட
51. டக்கு மேலேந்தலுக்கு கிளக்கு இந்தப் பெருநாங்கு எல்லைக்கு உள்பட்ட நிலமும் நஞ்சை 52. புஞ்சை மாவடை மரவடை திட்டு திடல் நிதி நிட்சேபம் உள்பட கிராமத்தில் பளவ
53, ரிப் பலவரி வேண்டுகோல்வரி வெள்ளைக்குடை வரி கொடிக்கால் வரி கத்திப்பெ
54. ட்டிவரி மத்த சில்லறைப் பலவரியகளும் உள்ளிய பாளையம் சறுவ மானியமாக சந்திராதி
5. த்தர் வரைக்கும் ஆண்டு கொள்ளுவாராகவும்.

2. அம்பலத்தாடி செப்பேடு

மன்னர் முத்து வடுகனாத பெரிய உடையாத்தேவர் கி.பி. 1742-ல் திருப்பூவணம் வெங்கடேசுவர அவதானியாருக்கு, திருப்புவனத்தையடுத்துள்ள அம்பலத்தாடி என்ற ஊரினை பூதானமாக வழங்கியதை இந்தப் பட்டயம் தெரிவிக்கின்றது. இந்தப் பட்டயம் வழங்கப்பட்ட காலத்தைக் கொண்டு இந்தப் பட்டயமும் அரசு நிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவரவர்களால், தமது மைந்தன் முத்து வடுகனாத பெரிய உடையாத் தேவரது பெயரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

1. சுவஸ்திஸ்ரீ மன்மகாமண்டலேசுபறன் அரியராய தளவிபாடன் பாசைக்குத்தப்புவரா கண்
2. டன் கண்ட னாடு கொண்ட கொண்ட னாடு குடாதான் பாண்டிய மண்டலத் தாபனாசாரியன் சோ
3. ளமண்டலப் பிறதிஷ்ட்டாபனாசாரியன் தொண்டமண்டல சண்டப் பிரசண்டன் ஈளமும்
4. கொங்கும் யால்ப்பாண ராயன் பட்டணமும் கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசா
5. திராசன் ராசபரமேசுபரன் ராசமார்த்தாண்டன் ராசகுலதிலகன் அரசுராவணராம
6. ன் அந்தப்பிரகண்டன் தாலிக்கிவேலி தளஞ்சிங்கம் இளஞ்சிங்கம் வடகரைப்புலி
7. சேதுகாவலன் சேது மூலாரெச்சாதுரந்தன் ராமனாதசுவாமி காரியதுரன்தர
8. ன் தேவநகராதிபன் தனுக்கோடிகாவலன் தொண்டியந்துறைக் காவலன் ஆத்து
9. ப்பாச்சி கடலில் பாச்சி கரந்தையதிபன் பொதிகமாமலையான் வைகையா
10. ருடையான் முல்லைமாளிகையான் இரவிகுலசேகரன் செங்காவிக் குடையன் செ
11. ங்காவிச் சிவிகையான் அனுமக்கொடி கருடக்கொடி புலிக்கொடி சிங்கக்கொ
12. டி உடையான் பட்டமானங்காத்தான் பரதேசிகாவலன் செம்பி வளனாடன் பஞ்சகெதி
13. இவுளியான் பனுக்குவார்கண்டன் மும்முடியரசன் யரனமும் முரசதிர முத்திலான சேம
14. த்தலை விளங்கும் இருதாளினான் அசுபதி நரபதி செபதி இரணியகெற்பயாசி
15. ரெகுநாத சேதுபதியவர்கள் பிற்திவிராச்சிய பரிபாலனம் பண்ணி அருளாநின்ற சாலி
16. யவாகன சகாதத்து 1664 இதின் மேல்ச் செல்லாநின்ற துந்துபி வருஷம் காற்த்தி
17. கை மீ 12 சோமவாரமும் காற்த்திகை நச்செத்திரமும் பவுறணமியும் சுபயோக சுபகற
18. ணமும் பெற்ற சோமபராக புண்ணிய காலத்தில் பாண்டியதேசத்தில் பொதியமா
19. மலையான் வைகையாருடையான் புனப்பறளையனாடன் கறந்த நகறாதிபன் முல்லை மா
20. லிகையான் பஞ்சகெதி இவுளியான் மும்முதயானையான் அனுமக் கொடி கருடக்கொடி
21. புலிக்கொடி கட்டியபுறவ லமும் முரசதிர முத்திலானதி யெங்கும் ஆணை செழுத்திய
22. சிங்கன் மேனாட்டுப் புலி தாலிக்கிவேலி தளஞ்சிங்க இளஞ்சிங்கம் ஆத்துப்பாச்சி
23. கடலில்பாச்சி தொண்டியன் துறைக்காவலன் இரவிகுலசேகரன் வாசுபேயாகன்
24. அரசுநிலையிட்ட சுவர்ணப் பெரிய உடையாத்தேவரவர்கள்ஸ்ரீ புத்திரன் அரசு நிலையி
25. ட்ட முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் வச்சகோத்திரத்தில் அ
26. வித்தம்பசூவித்திரத்தில் யெசுச்சகாத்தியாபகரான திருப்பூவனத்திலிருக்கும் ஸ்ரீவித்யா
27. பதி வெங்குடகிரி சிறுகொண்டல் திருமலை அவதானியார் குமாரன் வெங்குடேசு
28. ற அவதானியாருக்கு பூதானப்பட்டயம் பண்ணிக்குடத்தபடி பூதானபட்டயமாவது பாண்டி
29. யதேசத்தில் கிறுதமலானதி தீரத்தில் திருபூவன
30. ச்சீர்மையில் அம்பலத்தாடி கிராமத்துக்கு யெல்கையாவது கூட்டக் க
31. ல்லூரணி கீள்கரைக்கும் மளகங்கால் பெரிய உடைப்புக்கும் மேற்கு தென்பா
32. ங்கெல்கை ராங்கியன் காலுக்கும் வடக்கு மேல்பாங்கெல்கை முத்தாங்குளம்.
33. கானத்துக்கு கிளக்கு வடபாங்கெல்கை மாங்குடி காலுக்கும் மண்டிக்கண்மாய் கரை
35. க்கும் தெற்கு இப்படி இசைந்த பெருனாங் கெல்லைக்கு உள்ளிட்ட நஞ்சை புஞ்சை
36. மாவடை மறவடைத்திட்டுதிடல் கீள் நோக்கியகிணர் மேல் நோக்கிய பலன் அரு
37. குதாளி ஆவாரை கொளுஞ்சி முதல் மீன்படுபள்ளம் தேன்படு பொதும்பு சிலதரு
38. பாசானநிதி நிச்சேபமென்று சொல்லப்பட்ட அஷ்ட்டபோக தேசச்வாமியங்க
39. ளும் தானாதி வினிமயவியக்கிறையங்களுக்கும் யோக்கியமாக சகரண்ணிய
40. யோதகர தாராபூறுவமாகப் பட்டயமும் குடுத்து அம்பலத்தாடி கிறாமம் பூதானம் பண்
41. வணிக் குடுத்தபடியினாலே ஆச்சந்திர ஆற்க்கம் புத்திர பவுத்திர பாறம்பரியாயி
42. ஆண்டுகொண்டு சுகமே இருக்கவும் இந்தபடிக்கி இந்த பூதான சாதனம் மெளுதினே
43. ன் கறுப்பனாசாரி கையெழுத்து உ

3. திருவாரூர் செப்பேடு

மன்னர் முத்து வடுகனாத தேவரவர்கள் திருவாரூர்தியாகராஜ சுவாமிகள் திருக்கோயிலில் அன்னதானம் கட்டளைக்காக சிவகங்கைச் சீமையில் உள்ள நாதன்வயல், பாணன் வயல் என்ற இரு கிராமங்களை கி.பி.1750-ல் சர்வமானியமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த தான சாசனத்தைப் பெற்றுக் கொண்டவர். அந்த திருக்கோயிலின் ஆதின கர்த்தர் அருணாசலத் தம்பிரான் என்பதும் இந்தச் செப்பேட்டில் இருந்து தெரிய வருகிறது.

1. ஸ்ரீமஜெயம் ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரியராய
2. தளவிபாடன் பாசைக்கு தப்புவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்
3. டநாடு கொடாதான் பாண்டிமண்டல ஸ்தாபனாசாரியன் சோள மண்ட 4. லப் பிறதிட்டானாசாரியன் தொண்டமண்டல சண்டபிறசண்டன் ஈழ
5. முங் கொங்கு யாழ்ப்பாணமும் கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராச
6. ன் ராசபரமேசுரன் ராசமாத்தாண்டன் ராசகுலதிலகன் தாலிக்கு வேலி தளசிங்கஞ் இள
7. சிங்கம் ஆத்தில்பாச்சி கடலில் பாச்சி மதிரைமண் கொண்ட சேமத்தலை விளங்குமி
8. ரு தாளினான் வடகரைப்புலி சேதுகாவலன்தனுக்கோடி காவலன் சேது 9. மூலா துரந்தரன் ராமசாமி காரியா துரந்தரன் தொண்டித்துறை காவலன்
10. செம்பிய நாடன் தேவை நகராதிபன் இரண்ய கெர்ப்பயாசி அசுபதி
11. கெசபதி நரபதி ரெகுனாத சேதுபதி பிறிதிராச்சியம் பரிபாலனம் பண்
12. னியருளாநின்ற கலியுக சகாத்தம் ஸ்ரீ4851 சாலிவாகன சகாத்தம் 13. 1672 இதன்மேல்ச் செல்லாநின்ற பிறமோதுத ஸ்ரீ சித்திரை மாதம் 14. 1உ சுக்கிரவாரம் சதுத்தெசி தினம் ரோகிணி செளபாக்கிய மாதிரையும்
15. கூடின சுபதினத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா மலையான் வய்கை,ஆத்துடை
16. யான் பாண்டி வளநாட்டில் திருக்கானப்பேர்க் கூத்தத்துப் புனல்ப
17. ரளை நாட்டில் குளந்தை நகராதிபதி முல்லையந் தாரன் பஞ்சகெதி
18. புரவியான் மும்மத யானையான் அன்னக்கொடி கெருடக்கொடி அனுமக்கொடி
19. சிங்கக்கொடி புலிக்கொடி விருதுடையான் மும்முரசு அதிரும்
20. மூன்றிலான் திக்குவேலி ஆணை செலுத்திய சிங்கம் மேனாட்டு
21. ப்புலி தாலிக்குவேலி தளசிங்கம் இளசிங்கம் இரவிகுல
22. சேகரன் பஞ்சகால பயங்கரன் அரச நிலையிட்ட விசைய ரெகு
23. னாத சசிவர்ணப் பெரிய உடையா தேவரவர்கள் புத்திரன் அரசு
24. நிலையிட்ட முத்து வடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள்
25. சோளதேசத்தில் செல்வத் திருவாரூரில் தியாகராஜ சாமியாருக்கு அ
26. ன்னதானக் கட்டளைக்கு கற்தறான அருணாசலத் தம்பிரான் அவர்கள்
27. பாரிசமாக நம்முட அறக்கட்டளைக்கு குடுத்த கிராமம் பாண்டி தேசத்தி
28. ல் தேர்போகி னாட்டில் னாதன்வயல் பாணவயல் ரெண்டும் எல்கை
29. பாணவயல் திருப்பனங்குடி கம்மாய்க்கு திப்பன் ஏந்தலுக்கு கிழக்கு தா
30. னிக் கம்மாய்க்கு வடக்கு கடப்பங்கு தெக்கு ஏந்தலு தெக்கு னாதன்
31. வயலுக்கு இச்சியடி ஊறணிக்கு தெக்கு ஊத்தன் புஞ்சைக்கு வட
32. டக்கு புங்கானி காட்டுக்கு மேற்க்கு புதுப்பட்டி தாண்டவன் செ
33. ட்டி கொல்லைக்கு கிளக்கு இசைந்த பெருநாங்கெல்லைக் குள்ளிட்ட நஞ்
34. சை புஞ்சை மாவடை மரவடை திட்டு திடல் புத்து புனல் அறுகு தா
35. னி ஆவரை கொளிஞ்சி அட்டபோக சுவாமியங்களும் சறு
36. வமானியமாக தானபூறுவமாகக் கொடுத்தபடியனாலே தியாகராச சாமிக்கு
37. அபிசேக நிவேதனம் அபிவிருத்தியாக நடப்பிச்சு வருவார்க்கு
38. இந்த தற்மசாதன கிராம ரெண்டுக்கும் யாதாமொருவன் பரிபா
39. லனம் பண்ணினவர்கள் காசியிலும் ராமேசுவரத்திலும் அனேகம் பிறம்
40. பிற்திட்டை கோடி கன்னிகாதானம் கோடி கோதானம்
41. பண்ணின பலன் அடைவார்கள் இந்த தர்மத்துக்கு யாதாமொருவன்
42. அகிதம் பண்ணினவன் காசியிலும் ராமேசுவரத்திலும் புண்ணிய மட 43. ங்களிலும் அனேகம் கோகத்தி ஸ்ரீஅத்தி பிரமஅத்தி பஞ்சமகாபாதக
44. ம் பண்ணின தோஷத்தில் போகக் கடவராகவும் இந்தப்படிக்கு
45. இந்த தர்ம சாஸனப் பட்டையம் எழுதினேன் ராயசம் சங்கர ந
46. ராயணன் எழுத்து உ

4. சசிவர்ணேசுவரர் ஆலயச் செப்பேடு

மன்னர் முத்துவடுகநாத பெரியஉடையாத் தேவர் அவர்களால் கி.பி.1751-ல் வழங்கப்பட்ட இந்தச் செப்பேடு சிவகங்கை பற்றிய இரண்டு சிறப்பான செய்திகளைத் தெரிவிக்கிறது. சிவகங்கை தன்னரசின் முதலவது மன்னரும் முத்து வடுகநாதரது தந்தையுமான அரசு நிலையிட்ட சசிவர்ண பெரிய உடையாத் தேவர் கி.பி.1750ல் இறந்தார். இவரது நினைவாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்றை சிவகங்கை அரண்மனைக்கு வடகிழக்கே கி.பி.1751ல் இந்தக் கோயிலினை சிற்பமுறைப்படி சமைத்து சிவலிங்க பிரதிஷ்டை செய்ததையும் அதனைத் தமது பெற்றோர்களான சசிவர்ணத் தேவர், அகிலாண்ட ஈசுவரி (பெரியநாயகி) பெயரால் வழங்கப்பட்டிருப்பது.

அடுத்து இந்த திருக்கோயிலுக்கு திருவிடையாட்டக் காணியாக காத்தாடியேந்தல் வாணியங்குடி, மானங்குடி, முடிக்கரை ஆகிய நான்கு ஊர்களையும் இறையிலியாக வழங்கி இருப்பதுமாகும். இந்தச்செப்பேடு மன்னர் முத்து வடுகநாதர் தமது பெற்றோர்பால் கொண்டிருந்த பாசத்தினைப் பறைசாற்றும் சிறப்பான ஆவணமாக அமைந்துள்ளது.

1. உ. சிவமயம்
2. ஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரியரான தளவிபாடன் பாசை
3. க்கிதப்புவார்கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதன்
4. பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோளமண்டலப் பிறதிட்ட
5. னாபசாரியான் தொண்டமண்டல சண்டப்பிறசண்டன் ஈள
6. மு கொங்கும் யாள்ப்பான தேசமும் கண்டு கெசவேட்டை கொண்ட
7. ருளிய ராசாதிராசன் ராசபரமேசுவரன் ராசமாத்தாண்டன் ராச
8. கெம்பீரன் ராசகுலதிலகன் இவளி பாவடி மிதிக் தேறுவார் கண்டன்,
9. மன்னரில் மன்ன மன்னர்சிரோமணி துட்டரில் துட்டன் சிட்டபரி
10. பாலகன் சேமத்தலை விருதுடையான் செங்காவி கொ
11. டையான் செம்பி வளநாடன் மதுரை வளிகண்டான் பட்
12. டமானங் காத்தான் தாலிக்கு வேலி தொண்டித்துறை காவ
13. லன் சேதுமூலா துரந்தரன் இராமனாத சுவாமி காரியாது
14. ரந்தரன் அசுபதி கெசபதி நரபதி தனபதி விசைய ரெகுனா
15. தச் சேதுபதி காத்த தேவரவர்கள் பிறிதிவி ராச்சிய பரிபா
16. லனம் பண்ணியருளா நின்ற சாலியவாகன சகாத்தம் 1673க்கு மே
17. ல் செல்லாநின்ற பிறசோற்பதி நாம ஸம்வத்ஸரத்து உத்தராயண 18. த்து சசீரிதுவில் மாக மாசத்து கிருஷ்ணபக்ஷத்து திரயோதெசியும் ஸ்ரா
19. வன நட்செத்திரமும் சுபயோக சுபகரணமும் கூடின சிவராத்தி
20. ரி சுபதினத்தில் புனப்பிரளய நாட்டில் குளந்தை நகராதிப
21. தி மதப்புலி கெப்புலி ராசபுலி மேனாட்டுப்புலி தளசி
22. ங்கம் தாலிக்கி வேலி இரவிகுல சேகரன் முல்லயந்தா
23. ரன் மும்முரசதிர முளங்குமணி வாசலான் அனுமக்ெ
24. காடி கெருடகொடி நாபி விருதுடைய விருதுமண்டலீ
25. கர் கண்டன் சிவகாரி
26. யா துரந்தரன் அட்டலெ
27. ட்சுமி வாசன் அரசராவண ராமன் கோப்பிறாமண ரெ
28. ட்சகன் வசந்த தியாக பரிபாலன் வாசுபேயி யா கிறு
29. துக்கியானம் சங்கீத தியாப பிறசங்க வசந்த தியாக ப
30. பரி பாலனன் காமனி கந்தப்பன் சகல கலியான குணகாம்பீ
31. ர சமர கோலாகல விருது மன்னர் சிகாமணி ராசஸ்ரீ அரசு நிலையி
32. ட்ட விசைய ரெகுநாத சசிவற்ணத் தேவரவர்கள் புத்திரன் மு
33. த்து வடுகனாத பெரிய உடையாத் தேவரவர்கள் சதுர்வேதமங்க
34. லமான சிவகெங்கை திருக்குளத் தென்கரை கீள்திசை சிவபிற
35. திஷ்டைக்கி சிற்ப்பமுரையே திருக்கோவிலும் சமைத்து சிவ
36. லிங்க பிறதிஷ்டையும் பண்ணி சசிவற்ண ஈசுபர சுவாமி
37. பெரிய நாயகி அம்மன்நெண்டு நவகற்பம் தறித்து சுத்து ே
38. காவில் பரிவார தேவதையளும் உண்டு பண்ணி அஷ்டம
39. ந்திரமு கும்பாஅபிசேகமும் பண்ணிவிச்சு இந்த நயினா
40. ருக்கு விட்டுக்குடுத்த திருவிளையாட்ட கிறாமமாவ
41. து காத்தடியேந்தலுக்கு புரதிநாமமான முத்து வடுகனாத
42. சமுத்திரத்துக்கு புரவாவது முடிக்கண்ட கண்மாய் நீர்பிடிக்கி மேற்கு
43. அரமனை வாசலுக்கு கிளக்கு வீரப்பன் சேருவைகாறன் யேந்த
44. ல் நீர்பிடிக்கி தெற்க்கு கீள்பாத்தி கண்மாய் நீர்பிடிக்கி வடக்கு இ
45. ன்னான்கெல்கைக்கி உள்பட்ட நஞ்சை விரையடி 30 கலமும் வாணிய
46. ங்குடி பிரவாவது ஈளுவ ஊறணி வடகரைக் குத்துக்கல்லு
47. க்கு கிளக்கு சிவகெங்கை தென்பாதைக்கி கடம்பகுளத்து
48. குளக்கால் குத்துகல்லுக்கு மேற்கு தோப்பு ஊறணி நீர்பிடி
49. குத்துக் கல்லுக்கு வடக்கு கோட்டைகுடி வாலி நீர்பிடி குத்துக்
50. கல்லுக்கு தெற்க்கு இன்னாங் கெல்கைக்கி உள்பட்ட நஞ்சை
51. விரையடி 143 கலம் 4 மரக்கால் 1 மா மானங்குடிக்கி யெல்கை மானமாவது சக்க
52. ந்தி வயலுக்கு தெற்கு பனையூர் கண்மாய் நீர்பிடிக்கி வ
53. டக்கு கால்மேக்கி வயலுக்கு உவர் பொட்டலுக்கும்
54. கிளக்கு பில்லத்தி வயலுக்கு மேற்கு இன்னான் கெல்கைக்கி உள்
55. பட்ட நஞ்சை விரையடி 133 கலம் மரக்கால் 1 மா முடிக்கரைக்கி யெல்கை
56. மானமாவது மங்கலுசாற்றவெட்டி பாதைக்கி கிறாமத்து குளக்காலு 57. க்கு மேற்கு புலவன்வயலுக்கு வடக்கு ............குளத்துக்கு
58. கிளக்கு நவ்வதாவுக்கு தெற்கு இன்னாங்கெல்கைக்குட்பட்டதே
59. வதாயம் விற்மதாயம் நீங்கலாக நஞ்சை விரையடி 222 கலம் 1 மா இந்த னா
60. லுக்கும் புரவில் உள்ள புஞ்சையும் இந்த நயினார் திருவிளையாட்
61. டு கிராமம் னாலு கிராமத்தில் நஞ்சை பலன் புஞ்சை பலன் கூரைவரி பாசிவரி
62. சேத்துவரி வெட்டுகொல்லி சேஷவகை சொற்னாதாயம் யெப்பற்
63. பட்ட ஆதாயமும் செலது பாசாண நிதி நிட்சேப அட்டபோக தே
64. சொ சுவாமியங்களுக்கும் தானாதி வினி விக்கிறயங்களு
65. க்கும் யோக்கியமாக இந்த நயினார் திருவிளையாட்ட கிறாமத்து
66. க்கு அரமனை தற்மாசன பலவரி சறுவமாணிபமாக கட்டளையி
67. யிட்டு நயினார் சன்னதியில் தானபூறுவமாக சிவன்ராத்திரி பு
68. ண்ணியகாலத்தில் தாராதத்த பண்ணிக்கொடுத்தோம் யிந்த
69. தற்மத்தை யாதாமொருத்தர் பரிபாலன பண்ணின பேர் காசியி
70. லே சேதுவிலே ஆயிரலிங்க பிறதிஷ்ட்டை விற்ம பிறதிஷ்ட்டை
71. புண்ணியத்தை யடையக் கடவாறாகவும் இந்த தற்ம்மத்துக்கு அகி
72. தம் பண்ணினபேர் காசியிலே கெங்கை கரையிலே மாதா
73. வையும் பிதாவையும் குருவையும் காராம்பசுவையும் கொன்ற தோ
74. சத்திலே போக கடவாராகவும் இந்தப்படிக்கி இந்த தற்ம்ம
75. சாதனம் எளுதினேன் அரமனை ராயசம் சொக்கு கைஎளுத்து.

5. சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு

சிவகங்கை நகர் சசிவர்ண ஈசுவரர் ஆலயத்தில் கூடிய தேவேந்திர குடும்பர்கள், தங்களது குலத்தினருக்கு, நாலு கோட்டைப் பாளையக்காரறது மூதாதையான மதியார் அழகத்தேவர் வழங்கிய சிறப்புக்களை நினைத்தவர்களாக அந்தக் கோயில் திருப்பணிக்கு உதவுவதற்கு கி.பி.1752-ல் ஒப்புதல் அளித்த பட்டயம். இதுவரை சிவகங்கை சீமையில் கிடைத்துள்ள செப்பேடுகளில் மிக நீண்டதாகவும் நூற்று ஐம்பத்து இரண்டு வரிகளைக் கொண்டதுமாகும் இது.

1. உ. சுபஸ்ரீமன் மகா மண்டலேசுரன் அரியாயிர தளவிபாடன் பாசைக் குதப்புவராயி
2. ரகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டி.மண்டலப்பிற
3. தி சட்டாபன சாரியன் சொளமண்(ட★)லப் பிறதி சட்டாபனாசாரியன் பூறுவபட்சி
4 ம் தெட்சண உத்தர சத்த சமுத்திராதிபதி இளமுங் கொங்கு மி யாப்பாணமும் எம்
5. மண்டலமுமளித்து கெசவேட்டை கொண்ட ருளிய ராசாதிராசன் ராச பரமேசுரன் ராச மாற்
6. த்தாண்டன் ராச கெம்பீரன் ராசாக்கள் தம்பிரான் நடன துரங்கரேபந்தனன் நவகோடி நா
7. ராயணன் நவகண்டச் சக்கிறவற்த்தி துலுக்கர் தளவிபாடன் துலுக்கராட்டந்தவிள்த்தா
8. ன் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியராட்டம் தவிள்த்தான் மலைகலங்கினாலும் மனங் கல
9. ங்காத கண்டன் மனுமுறை தவறான் மரபுகாத்த ருள்வான் விசையலட்சுமி வாள்வீ
10. ரப்பிறதாபன் கருதலர்கள் சிங்கம் விருதரசர் மணவாளன் சமரமுகசங்கார பிறளைய காலருத்தி
11. ரன் துட்டரில்துட்டன் சிட்டர் பரிபாலனன் கட்டாரிச்சாளுவன் அசகாய சூரன் வீரவிக்கிறமா
12. தித்தன் படைகண்டு தத்தளிப்பார் முண்டன் கொடைகண்டொளித்து நிற்பார் கண்டன் நகைமு
13. க சந்திரோதயன் கோடி சூரியப் பிறகாசன் மதந்தெறுவித சுமுகர்மணி கமன்மதசொ
14. ருபன் பரிமளசுகந்தன் ப(ர)ராசர்கேசரி கந்தாபிக்ஷகன் கலியாணராமன் ஐந்தருவணை
15. பவசந்தததியாகி யஷ்ட்டலட்சுமிகரன் திக்குவிசையஞ் செலுத்திச் செக முளுதாண்டோ
16. ன் மதுரை வளி கண்டான் வைகையாறுடையான் ஆற்றுப்பாச்சி, கடலுபாச்சி தெட்சண சி
17. ங்காசனாதிபதி சேதுகாவலன் திண்புய கோலாகலன் தாலிக்குவேலி தரியலர்கள் மணவாளன் தண்டுவா
18. ர் மிண்டன் சங்கிறாமகெம்பிரன் வலியச்சருவி வளியிற் கால் நீட்டி நாடுகலக்கி நற்றமளப்
19. மற்ற சங்கன் அரிவையர்கள் மதன சொருபன் அசட்ட பொகதுரந்தரன் தேவைவருது
20. ரை ராசன் செம்பினன்னாடன் அரசராவண ராமன் அரசராட்டந் தவிள்த்தான் குப்பக்
21. குலக்காறன் குவலையங்காத் தோன் இரவி குலசெகரன் இறந்தகால மெடுத்தான் அடை
22. க்கலங்காத்தான் அடையலர் சிங்கஞ் சங்கீதவித்தி யாவினோதன் கா
23. விக்குடையான் கங்காபிஷேகன் தத்துபரியான் தங்கச்சி விகையான் சாடிக்
24. கறார் மிண்டன் சாமித்து ரோகியர் கண்டன் தேவையன் இராமநா சாமிகாரி
25. யதுரந்தரன் சற்பன்னபாரைபதி விற்ப(ன்★)ன விவேகன் தொட்டபாசந்திவிரான
26. சொரிமுத்துவன்னியன் பதிநெட்டுக் கூட்டத்து வன்னியர் கண்டன் வன்னி
27. யராட்டந்தவிள்த்தான் வடகரைப்புலியான் மனங்கலங்காதான், துளபமாலிகை
28. யான் கெருடகேதனன் ஜுரத்திப்பிறதாபன் பட்டமானங்காத்தான் சேமத்தலைவிளங்
29. குமிருதாளினான் சொல்லுக்கரிச்சந்திரன் வில்லுக்கு விசையன் மல்லுக்குவீமன்
30. பொறுமைக்குத் தறுமர் குதிரைக்கு நகுலன் சாத்திர வேதத்துக்கு சகாதேவர் அரிவுக்
31. கர்சுனன் கல்விக்கு அகத்தியர் கொடைக்குக் கற்னன் வாள்விலக்கு பொன்வா
32. ..........நலமிகுதி சாதராமன் றசனை கூர்மலை வளர் காதலிவள் ராமலிங்காசா
33. ணாம்பயும் பணிதாஷ்டடிகப்பிறபலன் துரைகள் கிரிழ துரைராசாற்றிமன்
34. தொண்டியன் துரைகாவலன் அசுபதி நரபதி கெசபதி தநபதி மகபதிக்கிணையா
35. ன் சேதுபதி பிறிதிவிராச்சிய பரிபாலநம் பண்ணியருளா நின்ற கலியுகசகா
36. த்த 4852 - சாலிய வாகன சகாற்தம் 1674 இதின்மேல்ச்
37. செல்லாநின்ற ஆங்கிரச சம்வச்சரது அறப்ப(ர)சி ௴ ருஉ
38. மங்களவாரனாள் பூற்வபட்சத்து விசையதெசமியில் அவுட்ட
39. நெச்செத்திரமும் சிங்கராசியும் கூடிந சுபதிநத்தில்
40. மெநாட்டுப்புலிராச புலிவாடிப் புலிதெப்புலி தாலிக்கு வேலிதளஞ்சிங்
41. கமீளஞ்சிங்கம் முந்துவார் கண்டன் வளைந்த கோட்டை வரவாடிவிடா
42. தான் மகராசராசேந்திரன் மனுச் சக்கிறவிற்த்தி வளந்திகள் வனசம
43. வற்றடஞ் சூழுங்குளந்தை யம்பதியாந் திறு கலர்சிங்கம் ஸ்ரீமது அரசு
45. நிலையிட்ட விசையரகுநாதச் சசிவர்ண பெரிய உடையர்(த்) தேவர(ர)வரகள்
46. புத்திரன் முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவரவர்களுக்கு பராபரமா
47. கிய பரமேசுரனார் தராதலம் படைக்கத் தானினைந்தருளி நெற்றியகளல்
48. கண்ணெருற விளிக்கில(ப்) பொசதக முளக்கொல் சிகை முப்புரிநூல் அசத்த க(டை)
49. யமாடை (ஆ)பரணமும் பத்துக் கரமும் அய்ந்து முகமும் நிதியே வளுவா நீர
50. ஞ்சின வடிவாய வேதசொருப விசுவ ஃவும் வந்து மலாயன் வனசி
51. றை விடுத்து சந்திரர் சூரியர் தன்னைப் படைத்தும் அதல விதல சுதல தராதல ம
52. காதவ பாதாள பூலோக புவலோக சிவலோக தவலோக சந்ரலோக சத்திய
53. லோக மகாலோக மென்னும் பதினாலுலோகமுஞ் சக்கிற வாளகிரியும் ஆயி
54. ரத்தெட்டுக் கொடுமுடியும் ஆயிரத்தெட்டு துளையும் ஆயிரத்தெட்டு
55, ற்றுமுள்ள மகாமேருகிரி முதலாகிய அட்டகுல பறவதமும் அசட்ட கெச அ
56. ட்ட மானாகமும் அட்ட திக்குப் பாலகர் (க★) சூம்ஞ் சத்த சமுத்திரமும் முப்பத்து
57. முக்கோடி தேவர்கள் நா(ர்★) பத்தெண்ணாயிர ரிஷிகளும் அட்டவக கின்ன
58. ரகின்னர கிம்புருஷ கெருடகாந்திரு (வ★) வாத்திய வித்தியாதரர் தும்புருனாருதாதி
59. முனீசுராளும் கொண்டதொரு புவனமாகவும் புவனமுன்னூத்திருபதெட்டு
60. க்கொண்டது ஒரு அண்டமாகவும் அண்டமாயிரத்தெட்டுக் கொண்டது
61. ஒரு அகிரண்டமாகவும் அகிரண்டமாயிரத்தெட்டுக் கொண்டது ஒரு பகிரம்டமா
62. கவும் பகிரண்டமாயிரத் தெட்டுக் கொண்டது ஒரு மகா அண்டம் மகா அண்டம் ஆயிர
63. த்தெட்டுக்கொண்டது ஒரு பிறமாண்டம் பிறமாண்டத்துக்கு மேலாமனேக பல்லா
64. யிரங்கொடி யண்டங்களுஞ் சொற்க மத்தியபாதாள மென்றும் சொல்லப்பட்ட மு
65. மண்டலமுங் கற்பித்து பிறும்மட்சத்திறிய வசிய சூத்திர நாலுவறணா சாதியு
66. ம் கற்ப்பித்து நாலுவேதமு மாறுசாத்திரமும் பதினெண் புராணமும் அறுபத்
67. துனாலுகலையக் கியாதமும்(ங்) கற்பித்து யிது முதலாகிய சகலகாரிய காரணாதி
68. களையுங் கற்பித்து இதற்கெல்லாம் ஆதாரமாகி ரட்சிக்கும் பொருட்டாக முன்பாரா
69. பரத்தின அக்கிநி நேத்தர துற்பவித்து அகலமாகிய அதிவிசுவப்பிறம்
70. மாவிநுடைய ஈசாநம் தற்ப்புருசம் அகோரம் வ(ல★)ம்தேவம் சத்தியோ
71. சத சிவமென்று அஞ்சுமுகத்திலும் மநுமய தோசடாதிப விசுவ (சிவகெங்கை தலத்துக்கும் ௸ சீமைக்கும் அஞ்சு சாதிக் கும் கோல அம்பலம் சுய்ய பகமாசாரி

மகன் ஆறுமுகமாசாரி தச்சு, அம்பலம் நன்
னி ஆசாரி மகன் நல்லதம்பி ஆசாரி ஷ கோ
வில் ஜ்னிகாளில் முத்துபிள்ளை மகன்
குளந்தையா பிள்ளை இந்த வரிக்கு கணக்கு

இரண்டாவது பக்கம்

72. மென்னும் ஐந்து முகம் ஐந்து கறத்தாய் திருவுருக் கொண்டு தனுக
73. ரண புவன போகாதிகளையும் யெல்லாம் தம் இறுதயத்தினாலே திறேதாயுக
74. த்திலக்கியா நத்தினாலேயும் படைத்துந் திறேதாயுக த்தில் த கட்டிப்
75. புனாலே படைத்தும் துவாபரயுகத்தில் மந்திரவித்தகினாலே ப
76. டைத்துங் கலியுகத்தில் கைய்யினாலே படைத்து மாட்சிக்கப்பட்
77. ட கருணாக்கரப்பட மன்னர்க்குச் செங்கோல் வாள்முனை கொடுத்தும் உன்
78. னியகொளுமுனையுள்வரக் கீய்ந்து கன்னியர் தமக்குக் கதிர்முனை கொடுத்து
79. மன்னிய தராசு வணிகற்கீந்து மெளுதாமரைக் கெளுத்தாணியை யீந்
80. து முளுதும் ஜமுனைய்யால் முற்றிலும் காத்தோர் கவசகுண்டலர்யா
81. ணர் தெய்வ நட்டுவராயன் அனுமக்கேதநர் மேகவாகனர் ஒங்காரசொரு
82. பிகள் சிகாயெக்ஞொபவிதர் சிறி புண்டரிகர் மாந்தை நகராதிபர் மகுடத்தியர்
83. சர்புக்க சாலையும் பளனியும் கண்டருளிய மிக்க ......
84. ஞ்சாளர் வல்லியந் ..... புல்லியமார் பா..........
85. வன்னொர் வித்தையுங் கொடுத்துத் தியாகமுங் கொடுத்தோர் வெட
86. ம் கொடுத்துப் பிட்சையுங் கொடுத்தோர் ஆதித்தன் றன்(னை) யச்சிநில க
87. டைந்தோர் திரைகடலடைக்கச் செ(ய★)து செய்திடுவோர் வெங்கலந்த
88. தனக்குச் சுங்கந் விளக்கத் தரணியன்றன்னைத் தலையை யறுத்துத் தர
89. ணியக் கோலால் (த்)தார்நிறுத்திடுவொர் அமரர்கள் தனையும் கசுத்தியன்
90. றனையுஞ் சம்பதமாகத்தானிறுத் தருளிப் பொதிகை மலைதனிற் பொயி
91. ரு மென்ன சதிருடன் பூமி சமதலங்காண்டோர் தாளத் திருப்பணிதான்.
92. செயச்சொனன் காளாஞ்சியேந்தத் தன் புகள்பெற னொர் கற்பந்தலிட்டுக் காராளர் தங்க
93. ள் கற்பகலாமற் காத்த கெம்பீரர் பூலோகத்திலும் புகள் விண்ணாட்டிலும் (ந்) தாலி முத்திரையால்
94. (த்)தாரமும்மைப்போர் அங்கலர் கீர்த்தியை ஆதிசேடனும் பாங்குற னாளும் பகர் கூடுமோ ஆ 95. கையினாலே ஸ்ரீ காஞ்சி காமாட்சி காளிகாதெவி கமலேசுவரி ஸ்ரீஒது பரசமயகோளரி அரு
96. ளும் பிறசாதமும் பெற்றருளிய செகத்திருவான தெய்வ கண்ணாளராகிய சிவகெங்கை அஞ்சு
97. சாதி எளுபத்திநாலு ஆவரணத்தாரும் சமய சங்கிதிகளும் எங்களுக்கு அடிமைத்திரமாகியவ
98 வரும் புத்திரர் வெள்ளாண்மை யுல் கில் வியன்(ப்)பெற விளைய வள்ளல் தெய்வெநதிரன் வ
99. ரிசையாயனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகள்சேர (சோ)
100. டிக்குடையும்(ஞ்) செகத்தில்(க்) கொணர்ந்த தேவெந்திரக் குடும்பர் சேத்துக் காலச் செ
101. ல்லரான் குடும்பர்களும் அமராபதிக்கும் அளகாபுரிக்கும் நிகராயச் சிர(ஞ்)சீவிப்பதியா
102. ன சிவகெங்கைத் திருக்குளத்தங்கரையில் சசிவற்ன யீசுரன் பெரியனாயகி சன்
103. னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வடதி
104. சை தென்திசையிலும் உள்ள உறவின்முறையாரையும் குடும்பர்களையுங் கூட்ட
105. ஞ்செயிது அளவளாவிக் கொண்டு முன் மதியாளராகத் தேவாவர்கள் நாம் அனைவோ
106. ருக்கும் வந்த காரியங்களிலெ பத்துக்காரியங்கள் சாதகப்படுத்திக் கொடுத்தும் நா
107. பத்திரெண்டு காரியத்தில் மரபு காத்துக் கொடுத்தும் புத்திர பவுத்தரி பாரம்
108. பரைக்கும் அஞ்சு சாதி எளுபத்துனாலு ஆவர்ணத்தாருக்கும் புத்திரராக நடந்து
109. கொண்டதினாலெயு முற்காலத்திலே யனுமக்கொடி விருதும் பட்டயமும் வாங்கி
110. யிருந்தது மத்தியிலெ சித்திப்பொனதினாலே அவர்கள் வங்கிசாதிபதியான ஸ்ரீ
111. மது அரசுநிலையிட்ட விசைய ரகுநாதச சசிவர்ன(ப்)பெரி யுடையாதேவரவர்க
112. ள் நாமனைவொருக்கும் இப்படிப் பூறுவத்திலெ நடந்த செய்தி யெல்லாஞ் சொல்
113. லிச் சகல வெகுமான சன்மானமுங் கட்டளையிட்டு சந்துஷ் (ட்)டி பண்ணிவிச்சு அனுமக்
114. கொடி விருதும் வாங்கியிருந்த படியினாலேயும் இப்பொது அவர்கள் செல்வக்குமா
115. ரான ஸ்ரீமது அரசு நிலையிட்ட விசையரகுநாதச் சசிவர்ண முத்து வடுகநாதப்பெரி
116. ய உடையா தேவரவர்கள் முன்மதியாரளகத் தேவர(ர)வர் கள் நாளைச் செயிதியும்
117. பெரிய துரையவர்கள் அனுமக் கொடி விருதும் வாங்கின செய்தியுஞ் சொல்லிய
118. யபடியே யெங்கள் பெரியோர்கள் உங்களுக்கு எந்தப் பிறகாரம் என்ன என்ன மரியா
119. தி நடப்பிவிச்சு இருந்தார்களோ அந்தப் பிறகாரம் நடப்பிவிச்சுக் கொள்ளுகிறோமெ
120. ன்று சகல வெகுமான சன்மாநங்களும் கட்டளையிட்டுப் பெரிய துரையவர்கள் நா
121. ளையிலெதாநெ யனுமக்கொடி விருதுக் கொடுத்திருக்கி றியளி
122. ந்தப் பட்டயமுந் தாருங்கள் என்று கட்டளையிட்டு யிந்தப் பட்டயத்துப் பண
123. த்தைத் தற்ம காரியத்திலெ நிலவரப்படுத்தி விக்கி றொமென்று கட்டளையிட்ட தி
124. னாலெ நாங்களனைவொருங் ....... சம்மதிச்சுக்..........
125. ட்டய மெளுதிக்கொடுக்கபட தாமிர சாசனப்பட்டயமாவது
126. ய்துவிடும் தந்து மொ............ ஆசாரியார்கள் கூடி ஒன்றுக்கு உகுடு
127. மபரகள் குடி ஒன்றுக்கு பதக்கு புள்ளிப் பள்ளுக்குடி ஒன்றுக் யக இந்தப்படிக்கு வரு
128. ஷா வருஷம் குடுக்கிறமென்று இன சம்மதியாகப் பட்டயமெளுதிக் கொடுத்தபடியி
129. னாலே எங்கள் மனுஷரைக் கொண்டு வாங்கியகிலெயறுவாகிற பணமெல்லாந்
130. துரையவர்கள் கட்டளையிட்ட பிறகாரத்துக்கு சிவகங்கைத் திருக்குளத்தங்க
131. ரையில்(க்)கீள் திசையில்ச் சிவப்பிறகிஸ்ட்டையாந ச் சீவறன் யிசுபரர் அம்மன் பெரியநா
132. யகிக்கும் கோவில் திருப்பணி வேலைக்கும் சுவாமிச் சீவறணிசுரர் பெரியநாயனாயகி
133. யம்மனுக்கும் அபிஷேக நெயிவேதினந் திருவிளக்குத் திருமாலை அறக்கட்டளை
134. த்தற பரிபாலினமாக நடக்கத்தக்கதாகச் சந்திராதித்த பிறவேச வரைக்கும் புத்திரபவுத்திரர் பாரம்பரைக்கும் சல்லும் காவெரியு............
135. ப்பட்டய பிறகாரத்துக்குச் சீவறன் இசுவரன் கொவில் தற்மத்துக்குக் குடுத்துவரக்
136. கடவொமாகவும் யிந்தத் தற்மம் புரொவிற்தியாக யிந்தப் பட்டயப்படிக்குக் கொ

137. டுத்துவருகிறவன் அனெக கோடி சிவப்பிறதிஷ்(ட்)டை

மனெகங்கோடி தடாக

138.ப்பிறதி சட்டையு மநேகங்கொடி பிறம்மப் பிறதிசட்டையுஞ் சோடச மகாதாந

139. மும் பண்ணினவனும் பெற்ற சுகிற (த*)த்தை அடையக்கடவாராகவும் யிந்த படிக்குக்

140. கொடாமல் யாதாயொருவன் விகாதம் பண்ணியவன் அனெகம் அகிறகாரங் கெடு

141. த்தவன் கெங்கைக் கரையிலுஞ் சேதுக்கரையிலு(ம்*) மாதாபிதாகுருகாரம் ப

142. சுவைக் கொன்ற தோஷத்திலெ போகக் கடவராகவும் யிந்தப்படிக்கு அஞ்சுசா

143. தி எளுபத்துனாலு ஆவரணத்தார் சொல்ல வரணக் காற வெனைத்தலைப் புலி பூண்டு

144. காண்டான் செருவை காரன் குமாரன் (ப்) பட்ட யவரி சாதிவரி பணியமாகிய பெரிய திருமா

145. கிய முத்துக்குமாரு சேருவைக் காரன் உண்டு படுத்தி எளுதிவிச்ச பட்டயம் அரமனையார் யெ

146. ங்களுக்கு நடக்க வேண்டிய மரிய மரியாதம் யெந்தக்காரியமும் ராமநாதபுரத்தி

147. ல் அத்தகம் உங்களுக்கு மரியாதம் (ப்) பணணி விக்கு (மெ) மென்ற கட்டளையிட்டபடி

148. யிநாலெ யிந்தபட்டயம் யெளுதிக் கொடுத்தோம் அனுமக்கொடி யானிக்க மெ

149. ன்னு ஒரு சிறையும் வாங்கிச் சசிவர்ண மீசுரன் கொவிலுக்கு விட்டொம் யிந்த பட்டயமெ

150. யளுதிளான் மதுராபுரி முதலாந சேது ஆதிக்கம் முதலாக சிற்ப்பாசாரி விசை

151. யரெகுநாதக்காளி ஆசாரி குமாரன் முத்துக்காளி ஆசாரி கைய்எளுத்து.

152. காளிகாதேவி சகாயம் உ.
6. சதுரகிரிமடம் செப்பேடு

மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் அவர்களால், கி.பி.1761-ல் சதுரகிரியில் உள்ள சுவாமி குழந்தையானந்த மட தர்மமாக சிறுதேட்டு கிராமத்தை கி.பி. 1760-ல் சர்வ மானியமாக வழங்கியதற்காக ஆவணம் இந்தச் செப்பேடு. ஐம்பத்து ஏழு வரிகளைக் கொண்ட இந்தச் செப்பேட்டில் தானம் கொடுக்கப்பட்ட காணிகளுக்கு விவரமான வகையில் வரையப்பட்டிருப்பது சிறப்பான தொன்றாகும்.

1. தேவி சகாயம் சுபதேயபூரீமன் மகாமண்டலேசுவரன் அரியராயர்தளவி

2. பாடன் பாசைக்கு தப்பு வராயிர கண்டன் மூவராய கண்ட கண்ட



3.

நாடு கொண்ட கொண்டநாடு குடாதான் பாண்டி மண்டல பனாசா



4.

ரியன் சோள மண்டல பிறதிஷ்டாபனாசாரியன் தொண்ட மண்டல சண்டப்பி



5 .

றசண்டன் பூறுவ தெட்சண பச்சம உத்தம கடித்தரியன் ஈளமுங்



6 .

கொங்கும் யாள்ப்பான பட்டன எம்மண்டலமும்



7 .

....யளத்து கெசவேட்டை கொண்டருளிய ராசாதி ராசன்



8 .

ராச பரமேசுபரன் ராசமார்த்தாண்டன் ராச கெம்பீரன் ராச குலதிலகன் ரா



9 .

சநச்சேத்திர சந்திரோதையன்துட்டரில்துட்டன்துஷ்டநெட்டுரன் சிட்



10.

டர் பரிபாலன பரராசசிங்கம் பகைமன்னர் கிரீடி தாலிக்கு வேலி த



11.

ள சிங்கம் இளசிங்கம் தளங்கண்டு தத்தளிப்பார் கண்டன் தரியலர்



12.

கோடாரி வலியக் சருவி வளியக்கால் நீட்டி வாள்க்காரர் மு



13.

ண்டன் மதுரேவளி கண்டான் வய்கை வளநாடான் உத்தர தெட்



14.

சன சத்த சமுத்திராதிபன் இவளிப் பாவடி மிதித் தேறுவார் கண்டன்



15.

மலை கலங்கினும் மனங் கலங்காத கண்டன் பாஞ்சால புருஷன் பனுக்கு



16.

வார் முண்டன் அளகுக்கனங்கள் அனங்கரேபந்தன் அன்ன சத்திரம்நா



17.

மன் பொறுமைக்குத்தற்மர் புகளுக்குக் கற்னன் மல்லுக்கு விடன் வி



18.

ல்லுக்கு விசையன் சொல்லுக்கு யரிச்சந்திரன் பரிக்கு நகுலன் சாஸ்த்



19.

திரத்துக்கு சகாதேவன் அரிவுக்கு யகத்தியர் பெயத்துக்கு ஆதி சே



20.

டன் குடைக்கு குமணன் வயசுக்கு மாற்க்கண்டன் தனத்தில்



21.

குபேரன் செங்காவிக் குடையான் யனும கேதனன் யாளிகே



22.

தனன் கெருட கேதனன் புலிகேதனன் வடகரைப் புலி மேனாட்



23.

டுப்புலி வாடிப்புலிமதப்புலி கெப்பிலி சீறும்புலி சினக்கும்



24.

விருது யரசர் கெப்பிலி கொட்ட மடக்கி குறும்பர் கோடாலி



25.

துரகரேபந்தன் சொரிமுத்து வன்னியன் துலுக்கர் தள வி



26.

பாடன் துலுக்கர் மோகந் தவிள்த்தான் தொட்டியாதளவி



27.

பாடன் தொட்டியர் மோகந் தவிள்த்தான் நாட்டுக்கு னாயகம்



28.

நவகோடி நாறாயணன் பாட்டுக்கு கோடி பணம் தருங்கிறத



29.

ன் சேது வளி கண்டான் சேது காவலன் செம்பி வளநாடன்



30.

துரைகள் சிகாமணி ரீராமசுவாமி காரியதுரந்தரன் குவலை



31.

யங் காத்தன் குளந்தை நகராதிபன் அசுபதி கெசுபதி தனபதி ந



32.

ரபதி அரசு நிலையிட்ட ரீமரிது விசைய ரெகுனாத சசிவற்ணன்



33.

பெரிய உடையாத் தேவரவர்கள் குமாரர் முத்துவடுகனாதது



34.

ரையவர்கள் பாவத்துக்குப் பிறம்பும் தற்ம்மத்துக்குள்ளு



35.

மாய் யிவ்விதம் ராச்சிய பரிபாலனம் பண்ணியருளாநின்ற சா



36.

லிய வாகன சகாத்தம் 1682-க்கு மேல் செல்லா நின்



37.

ற வசு சித்திரை மீ 15 உ சதுரகிரி குளந்தை யானந்த



38.

பண்டாரம் மடத்து தற்மத்துக்கு நில சாதனம் பண்ணிக்கு



39.

டுத்தபடி நில சாதனமாவது சிறுதெட்டு கிறாமம் மேல் நெட்



40.

டுரில் பெரிய கண்மாய் நான்மடைப் புரவில் கோவானூர்

41. பத்தில் வட வயலில் வடக்கோடிய வாய்க்காலில் பெருமா வய

42. க்கல் தளைக்கும் கிளக்கு பெருமா வயக்கல் தளைக்கு கீள் இதன் கிளக்கு ஆவு
43. டைய வயக்கத் தளைக் கு கீள் அண்ணாவுடையான் செய்க்கும் கா
44. லடை வடகிளக்கு நொச்சியகுடி தளைக் கும் காவல் மா
45. னிய வாகையடி தளைக்கும் கிளக்கு மணி தளைக் குங்
46. இதன் கிளக்கு திருவாலங்காட் வயக்கல் தளை உ உசல் ஹெள
47. இதன் வடமேற்கு வேலாயுதன் வயக்கல் தளை இதன்ே
48. மற்க்கு தேவன் வயக்கல் தலை க தேவன் வயக்
49. கலுக்கு வடமேற்கு சுத்தன் வயக்கல் தளையில் பாதி உ ஹ ள
50. இன்நாங் கெல்லைக்குள் பட்ட விரையடி
51. சகலமும் சறுவ மானியமாய் சாதனம் பண்ணிக்குடுத்தனாலே
52. கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் சந்திராதித்தருள்ளத
53. வரைக்கும் ஆண்டு யநுபவித்துக் கொள்ள கடவாராகவும்
54. படி சாதனமும் எழுதினேன் சொக்கய்யரவர்கள் கை...
55. எழுத்து யட்டவணைச் கணக்கு மேற்படி பெரிய தகப்பனார் மகன் கெ....
56. ர் சொக்கு கைய்யெழுத்து தேவி சகாயம் உ
57. குரு சுவாமி துணை உ

7. வள்ளைக்குளம் செப்பேடு

முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவரது பிதிர் பக்தியினைக் குறிப்பிடும் மற்றுமோர் ஆவணம் இந்தச் செப்பேடு. கி.பி.1763-ல் இந்த மன்னர், தமது தந்தையாரது நினைவாக புனித காசி நகரில் மடம் ஒன்று அமைத்து பிராமண போசனம், மகேசுவர பூஜை முதலிய அன்னதானப் பணிகளாக வள்ளைக்குளம் என்ற கிராமத்தை தானமாக வழங்கியதைக் குறிக்கும் ஆவணம் இந்தச் செப்பேடு:

1. ஸ்வஸ்தி ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராய தள விபாடன் பாசை
2. க்குத் தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்
3. டநாடு கொடாதான் பாண்டிமண்டல ஸ்தாபனாசாரியன் சோள
4. மண்டலப் பிரதிட்டாபனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிறச
5. சண்டன் ஈளமுங் கொங்கும் யாள்பாணராயன் பட்டனமு மெம்மண்டலமும்
6. கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன்
7. ராசமார்த்தாண்டன் ராசகுல திலகன் அரசராவன ராமன் அந்தம்பர கண்
8. டன் தாலிக்கு வேலி தளஞ்சிங்கம் இளஞ்சிங்கம் சேதுகாவலன் சேது
9. மூல ரட்சா துரந்தரன் தனுக்கோடி காவலன் தொண்டியந்துறை கா
10. வலன் செம்பிவள நாடன் தேவை நகராதிபன் முல்லை மாலிகைய 11. ன் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்கொடி புலிக்கொடியுடையான் மு
12. ம்மதயானையான் செங்காவி குடை செங்காவிக் கொடி செங்காவி
13. ச் சிவிகையான் அசுவபதி கெசபதி நரபதி யிரவிய கெற்பயாசி ரெ
14. குனாதச் சேதுபதியவ
15. ர்கள் பிறிதிவிராச்சி
16. ய பரிபாலனம் ப
17. ண்ணியருளாநி
18. ன்ற கலியுக சகா
19. த்தாம் 4864
20. சாலிவாகன ச
21. காத்தம் 1685
22. இதன்மேற் செல்லா
23. நின்ற சுபானு ஸ்ரீ சித்திரை மீ 4 தீ புதவாரமும் அமாவாசியும் அக
24. வதியும் சுபயோக சுபகரணமுங் கூடின சூரியோதபரக புண்
25. னிய காலத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா மலையா
26. ன் வையை ஆறுடையான் புனப்பிரளை நாடன் குளந்தை நகரா
27. திபன் முல்லை மாளிகையான் பஞ்சகதி யிவுளியான் மும்மதயா
28. னையான் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்கொடி கட்டி
29. ய புரவலன் மும்முரச திரு முன்றிலான் திக்கெங்கு மாணை
30. செலுத்திய சிங்கம் மேனாட்டுப் புலி தாலிக்கு வேலி தளஞ்சி
31. ங்கம் இளஞ்சிங்கம் இரவிகுல சேகரன் ஆற்றுப் பாச்சி கடலி
32. ற் பாச்சி தொண்டியந்துறை காவலன் வாசபேயாகன் அரசு
33. நிலையிட்ட விசைய ரெகுநாத சசிவற்னப் பெரிய உடையா

இரண்டாம் பக்கம்

34. த் தேவரவர்கள் புத்திரன் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரி
35. ய உடையாத் தேவரவர்கள் தருமபுரம் குருஞான சம்பந்த தே
36. சிகர் சீஷராண காசிவாசி குமரகுருபரத் தம்பிரானவர்
37. களுக்குத் தர்ம சாசனம் தாம்பிர சாசனப் பட்டயங் கொடுத்தப்படி
38. தற்ம சாசனமாவது காசியிலே பெரிய உடையாத் தேவர் மடமு
39. ங் கட்டிப் பிராமண போசன மகேசுர பூசை அன்னதா
40. னம் நடப்பிவிக்கிறதினாலே இந்தத் தற்மத்தக்கு விட்
41. டுக் கொடுத்த கிராமமாவது பாண்டி தேசத்தில் கரு
42. த்துக் கோட்டை நாட்டில் துகவூர்க் கூற்றத்து வ
43. ள்ளைக்குளம் கிறாமத்துக் கெல்லையாவது கீள்பா
44. ற்கெல்கை கருமேனியம்மன் கோவில் புஞ்சைக்கு
45. ம் அரமனைக் கரைக்கண்மா யுள்வாய்க்கு மேற்கு தெ
46. ன் பாற்கெல்லை ஒச்சந்தட்டுப் புஞ்சைக்கும் துகவூர்
47. க் குளக்காலுக்கும் வடக்கு மேற்பாற்கெல்லை குச்சனா 48. குடி எல்லைப்புரவுகும் கிளக்கு வடபாற்கெல்லை கீள்ச்சே
49. த்தூர் புஞ்சைப் புரவுக்கும் வளையா தேவர் குடியிருப்புக்
50. கும் தெற்கு இப்படி யிசைந்த பெருநான்கெல்லைக் குள்ளிட்ட நஞ்சை
51. சை புஞ்சை திட்டு திடல் நிதி நிற்சேப செலதருபாசானம் அட்சனிய ஆக
52. மியமென்று சொல்லப்பட்ட அட்டபோக தேச சுவாமியங்களும் தானாதி வில
53. மய விக்றியங்களுக்கும் யோக்கியமாக சகல சமுதாயமும் சறுவமானிய
54. மாக ஆசந்திராற்கம் சீஷ பாரம்பரைக்கும் காசி அன்னதான தற்ம
55. த்துக்கு விட்டுக் கொடுத்தப்படியினாலே ஆண்டனுபவித்துக் கொள்ளுவாரா
56. கவும் இந்த தற்மத்துக்கு இதம் பண்ணினவன் காசியிலே சிவப்பிரதிட்டை விட்
57. டுணுப்பிரதிட்டை கோடி பிரம்ம பிரதிட்டையும் பண்ணி புண்ணியத்
58. தை யடைவாராகவும் இதற்கு யாதாமொருவன் அகிதம் பண்ணினவன்
59. காசியிலேயும் ராமீசுரத்திலேயும் கோடி காராம்பசுவையும் கோடி பி
60. ராமணாளையும் கொன்ற பாவத்தை யடையவராகவும் இந்தபடிக்கு கு
61. மர குருபரத் தம்பிரானவர்களுக்கு முத்து வடுகநாதப் பெரிய உடைய
62. யாத் தேவர்கள் இந்த அன்னதானப் பட்டயம் எழுதினே மதுரையிலி
63. ருக்கும் வெள்ளாளரில் சொக்கனாத பிள்ளை குமாரன் சங்கர நாராயண
64. ன் எழுத்து இந்தப் பட்டயம் வெட்டிநேன் தையல் பாகம் உ
65. ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பாதத்தாப ஹா
66. ரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேத் உ

8. கொடி மங்கலம் செப்பேடு

திருவாவடுதுறை குருமகா சன்னிதானத்திடம் மன்னர் முத்து வடுகநாதர் கொண்டிருந்த இணையற்ற குருபக்தியின் சான்றாக அமைந்துள்ள மற்றுமொரு ஆவணம் இந்தச் செப்பேடு. கி.பி.1767ல் மன்னர் முத்து வடுகநாதர், திருவாவடுதுறை பண்டார சன்னதியில் அம்பலவாண சுவாமி பூஜைக்கும் மகேசுவர பூஜைக்கும் உடலாக சிவகங்கைச்சீமையில் உள்ள நாகமுகுந்தன்குடி என்ற கிராமத்தை இறையிலியாக வழங்கியதற்கான ஆவணம் இந்தச் செப்பேடு. திருவாவடுதுறை மடத்தில் இந்தச் செப்பேடு உள்ளது.

1. சுவத்திஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராயிர தள விபாடன் பாசைக்குத்த
2. ப்புவராயிர கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டனாடு கொடாதா
3. ன் பாண்டி மண்டலத் தாபனாசாரியன், சோளமண்டலப் பிறதிட்டாபனாசாரியன்
4. தொண்ட மண்டல சண்டப் பிறசண்டன் ஈளமுங் கொங்கும் யாளபபாணமும எம்
5. ம்மண்டலமு மளித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதி ராசன் ராசபரமே
6. சுரன் ராச மாத்தாண்டன் ராச குல திலகன் ராய ராகுத்த மிண்டன் மன்னரில் மன்னன் ம
7. ருவலர் கேசரி துட்டரில் துட்டடூன் துட்ட நெட்டூரன் சிட்டர் பரிபாலனன் ஒட்டியர் மோகந்த
8. விள்த்தான் துலுக்கர் தள விபாடன் வலியச் சருவி வழியிற் கானீட்டி தாலிக்கு வேலி யிள
9. ஞ்சிங்கத் தளஞ்சிங்கம் வைகை வளநாடன் ஆற்றுப்பாச்சி கடலிற்பாச்சி சேதுநகர்
10. காவலன் சேதுமூல துரந்தரன் ராமனாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூசாதுரந்தான் பாரா
11. சசிங்கம் பரராச கேசரி பட்டமானங் காத்தான் பரதேசி காவலன் சொரிமுத்து வன்னிய
12. ன் கோடி சூரியப் பிறகாசன் தொண்டியந்துறை காவலன் இந்துகுல சற்பகெருடன் இவுளி
13. பாவடி இவுளி மிதித்தேறுவார் கண்டன் நவகோடி நாராயணன் பஞ்சவர்ணபாவாடையுடை
14. யோன் துட்டநிட்டன் சிட்டபரிபாலன் அட்ட லட்சுமிவாசன் நித்தி கலியாணன் மனுகு
15. ல வங்கிசன் சாமித்துரோகியள் மிண்டன் கட்டாரிசாளுவன் அடைக்கலங் காத்தா
16. ன் தாலிக்கு வேலி ரண கேசரி ரணகிரீடி சங்கீத சாயுச்சிய வித்தியா வினோதன்
17. செங்காவிக் குடையோன் சேமத்தலை விருது விளங்குமிரு தாளினான் நரலோகர்
18. கண்டன் பொறுமைக்கு தண்மர் வில்லுக்கு விசையன் மல்லுக்கு வீடன் பரிக்கு ந
19. குலன் சாத்திரத்துக்குச் சகாதேவன் கொடைக்குக் கன்னன் அறிவுக் ககத்தியன் தனத்துக்கு
20. க்குபேரன் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்கொடி யாளிக்கொடி சிங்கக் கொடி மகரக்
21. கொடி மதப்புலி காரியங் காத்தான் திருச்சிங்காசனத்திற்றிரு மகள் பதம்போற்றி ராச்சியபரி
22. பாலனம்பண்ணியருளாநின்ற சாலிவாகன சகாத்தம் 1691க்கு மேல் செல்லானி 23. னற விரோதி ஸ்ரீ அற்பசி மாதம் 25உ ஸ்ரீமது அரசு நிலையிட்ட விசைய ரெகுநாத சசிவற்னப் பெரிய உ
24. டையாத் தேவரவர்கள் புத்திரன் முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் தி
25. ருவாவடுதுறைப் பண்டாரச் சன்னிதியில் அம்பலாணசுவாமி பூசைக்கும் மகேசு
26. சர பூசைக்குந் தற்ம சாதனம் பட்டையங் கொடுத்தபடி பட்டையமாவது கிராமங் கொடி மங்
27. கலம் நாகமுகந்தன்குடிக்கு வடக்கு முடவேலிக்குந் தாய மங்கலத்துக் எல்லைக்குந்த தெற்கு வி

இரண்டாவது பக்கம்

28. ளாங்குடி எல்லைக்கு மேற்கு எம்மத்துக்கும் கிழக்கு இந்தப் பெருநாங் கெல்லைக்
29. குள்ப்பட்ட நிலம் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் நிதி நிட்சேம் உள்படக் கிராமத்
30. தில் பளவரிப் பலவரி வேண்டுகோல்வரி வெள்ளைக்குடைவரி கொடிக்கால்வரி
31. கத்திப்பெட்டிவரி மற்றச் சில்லறைப் பலவரியளும் ஊளிய பாழியமுஞ் சறுவமானியமாக
32. ச் சந்திராதித்தருள்ளவரைக்கும் பரம்பரையாகக் கையாடிக் கொண்டு தற்மம் பரிபாலன
33. ம் பண்ணிக் கொண்டிருப்பார்களாகவும் இந்தத் தர்மத்தை யாதாமொருவர் பரிபாலனம்பண்
34. ணின பேர்கள் காசியிலேயுஞ் சேதுவிலேயும் சிவலிங்கப் பிறதிட்டையும் ஆயிரம் பிரமப்
35. பிறதிட்டையும் ஆயிரங் கன்னிகாதானம் கோதான புண்ணியமும் பெறுவாராகவும் இ
36. ந்தத் தற்மத்துக்கு அயிதம் பண்ணின பேர் இதற்கு யெதிர்மறைப் பயனையடைவாராகவும் உ
37. இதுவல்லாமலுமனேக குனூர் பாவப்பயனையுடையவராகவும்
38. உ ஆறுமுகம் சகாயம் உ ★


  1. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 50
  2. Diary Consultations Vol.9. P: 60
  3. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 69
  4. Ibid - P: 87
  5. Ibid - P: 88
  6. Rajayyan Dr. K. – History of Madura (1974) P: 104
  7. Raja Rama Rao T. - Manual of Ramnad Samasthanam (1891) P: 241
  8. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 144
  9. Hill, S.C. - Yosufkhan - The Rebel Commandant (1931) P: 26-41.
  10. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 72
  11. Rajayyan Dr. K. History of Tamil Nadu (1972)
  12. Rajayyan Dr. K. - History of Tamil Nadu (1972) P: 122
  13. S.C. Hill - Yousufkhan The Rebel Commandant 1931
  14. Military Consultations - Vol. 4/26-3-1753. P: 49-50
  15. Tamil Nadu Archieves Diaries Vol. A. P: 260
  16. Military Consultations Vol.4/4.6.1755. P: 89
  17. Raja Rama Rao.T - Manual of Ramnad Sannasthanam (1891) P: 238.
  18. Raja Rama Rao - Manual of Rammad Samasthanam (1891) P: 242
  19. Ibid. - P. 243
  20. Military Consultations - Vol.4/24.4, 1755. P. 72-74
  21. Arunachalam - History of Pearl fishery in Tamil Nadu (1928) P: 134
  22. Pieris - The Dutch power in cylon. P: 236-48
  23. Military Country Correspondence Vol.19/25.3.1771/P: 109-133
  24. Military Country Correspondence Vol. 19/25.3.1771. P. 79
  25. Ibid. DL. 17.3, 1771
  26. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 253
  27. Radhakrishna Iyer. General History of Pudukottai (1916) P: 251
  28. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 253
  29. Ibid, P: 254,
  30. Vibart.Maj. - History of Madras Engineers (1881) Vol. I. P: 120-121
  31. Military Consultations Vol. 52/15.6.1771. P: 442
  32. 62. Political Despatches to England Vols. 7–9. P. 80-81.
  33. 63. Rajayan Dr. K. - History of Madura (1974) P: 261.
  34. 64. Ibid - 261.
  35. 65. Ibid - 261.
  36. 65. Ibid - 261.
  37. Military Consultations Vol. 42/1.7.1772. P: 442.
  38. Love H.D. - Vestiges of Old Madras Vol. (III) P.71
  39. The London Packet Dt. 2.3.1774.
  40. The British Chronicle Dt. 3.5, 1774.
  41. Military Consultations Vol.42 / July 1772. P: 607.
  42. சிவகங்கை தேவஸ்தான பதிவேடுகள்.
  43. 73. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்.