டால்ஸ்டாய் கதைகள்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக





 
 
 

டால்ஸ்டாய் கதைகள்

 
 
 
 
 
 
 

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

 டால்ஸ்டாய் கதைகள்

 

ஆசிரியர் :

லியோ டால்ஸ்டாய்


தமிழாக்கம் :

வல்லிக் கண்ணன்

 

அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி

பிலிப்ஸ் தெரு, :: சென்னை-1.

காப்பி ரைட்] [விலை ரூ. 2-0-0


முதற் பதிப்பு: 1956

 


எஸ். பி. எஸ். பிரஸ்—சென்னை-1.

முன்னுரை

மகத்தான இலக்கியங்களை சிருஷ்டித்து, உயர்வடைந்தவர்களில் ரஷ்ய மேதை டால்ஸ்டாயும் ஒருவர். இலக்கிய வானில் குன்றாத ஒளி வீசித் திகழும் தனிப் பெரும் நட்சத்திரம் அவர். செல்வ போகங்கள் நிறைந்த உயர்குடியில் பிறந்தவர் அவர். செல்வ வளமும் வாலிபமும் வாழ்க்கையில் பெற்றுத்தரக் கூடிய சகல சுகங்களையும் அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்தார். உணர்ச்சிகள் ஆட்டி வைத்த வழியில் கண்மூடித்தனமாகச் சென்று கொண்டிருந்த அவருக்கு அறிவின் விழிப்பு ஏற்பட்டது. தான் வாழ்கிற முறை சரியானது அல்ல என்று உணர்ந்தார் அவர். தன்னைச் சுற்றிலும் வசிக்கிறவர்களும் பிறரும்—மனித வர்க்கத்தில் பெரும் பலரும்—வாழ்கிற முறை ஒழுங்கானது அல்ல என்று கண்டார். மனித குணங்களைப் பற்றி, மனித வாழ்வின் தன்மைகள் தவறுகளைப் பற்றி, வாழ்வின் உயர்வுக்கான வழிகளை எல்லாம் பற்றி, அவர் சிந்தித்தார். தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் அவர் கட்டுரைகளாகவும், நல்ல கதைகளாகவும். சிறந்த நாவல்களாகவும் உருவாக்கிக் குவித்தார். நல்வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற வழிகள் எனத் தான் உணர்ந்த உண்மைகளைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பதற்காக அவர் தனது வாழ்நாளில் பல முயற்சிகள் செய்தார். அவரது வாழ்க்கை முறைகளினாலும் சிந்தனைக் கருத்துகளினாலும் வசீகரிக்கப்பட்டவர்களில் மகாத்மா காந்திஜீயும் ஒருவர். டால்ஸ்டாயைத் தனது குருவாக மதித்தார் காந்திஜி என்பது குறிப்பிடத் தகுந்தது.

உண்மையின் உயர்வு, எளிய வாழ்வு, தெய்வ நம்பிக்கை, மனித அபிமானம், பரோபகாரச் சிறப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்துவதற்காகவே டால்ஸ்டாய் பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். என்றாலும், அருடைய கதைகள் வெறும் உபதேசக் கதைகள் மாதிரி சாரமற்றவை அல்ல. எளிமையும் இனிமையும் கதைச் சுவையும் நிறைந்த இலக்கியப் படையல்கள் அவை.

டால்ஸ்டாய் கதைகளில் அநேகம் தமிழில் வெளிவந்து விட்டன. ஆயினும், 'இரண்டு பேர்’ எனும் நெடுங்கதை இதுவரை தமிழில் வரவில்லை.

மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே இருக்கிறது. தான்—தனக்கு—தன்னுடைய என்ற குறுகிய நினைவுகளோடு வாழ்கிற வரையில் தான் மரணம் மனிதரை பயமுறுத்தும், தன்னை மறந்து, பிறருக்கு உதவத் துணிகிற போது, மனிதன் மரண பயத்தை வென்றுவிடுகிறான். அதுவரை அவனுக்குக் கிட்டாத மன அமைதி தானாகவே அவனை வந்து அடைகிறது.—இவ் உண்மையை விளக்குவதற்காக டால்ஸ்டாய் இரண்டு கதைகள் எழுதினார். அவற்றில் ஒன்று தான் ‘இரண்டு பேர்’. இக்கதையில் மனித உள்ளத்தின் போராட்டங்களையும், இயற்கை வெறியின் தன்மைகளையும், மிருகங்களின் நுண்ணறிவையும் பற்றி அழகாகச் சித்தரித்திருக்கிறார்.

டால்ஸ்டாய் கதைகளில் சிறந்தவைகளுள் முக்கியமானது ‘குற்றமும், தண்டனையும்’.

டால்ஸ்டாய் கதைகளைத் தமிழாக்கும் வாய்ப்பை எனக்கு அளித்து, அவற்றைப் புத்தகமாகப் பிரசுரிப்பதில் அக்கறை கொண்டு ஆர்வம் காட்டிய அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி உரிமையாளர்கள் எஸ். ஆர். எஸ். சகோதரர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றி உரியது.

வல்லிக்கண்ணன்

 

பொருளடக்கம்


எண்

விஷயம்

பக்கம்

1. 1
2. 127
3. 134
 

"https://ta.wikisource.org/w/index.php?title=டால்ஸ்டாய்_கதைகள்&oldid=1519955" இலிருந்து மீள்விக்கப்பட்டது