தமிழ் தாய் வாழ்த்து

நீராரும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,

எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!

தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம்வியந்து

செயல் மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்_தாய்_வாழ்த்து&oldid=3504" இலிருந்து மீள்விக்கப்பட்டது