தாய்மொழி காப்போம்/செந்தமிழ்ச் செல்வி
50. செந்தமிழ்ச்செல்வி
கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்
வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்
[1]தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;
சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை
செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்
நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற
மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி
சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்
நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,
தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில்
உடை எழில் ஒன்றே உவந்தன ராகி
கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில்
புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர்
இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம்
தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத்
அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள்
முந்தையர் தந்தநன் னூல்மலர் மொய்த்ததன்
சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்
சிந்தையுள் தேக்கிநற் செவ்வழிப் பண்தரும்
வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்
(21.12.1976)
- ↑ தாளால் - முயற்சியால்