திருக்கோவையார்/இருபத்திரண்டாம் அதிகாரம் - பகை தணி வினைப் பிரிவு

இருபத்திரண்டாம் அதிகாரம்
22. பகை தணி வினைப் பிரிவு

பேரின்பக் கிளவி
பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
எங்கும் இன்பக் கனமென் றியறல்.

1. பிரிவு கூறல்
மிகைதணித் தற்(கு)அரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்(கு)என்னை ஆண்டுகொண் டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்(கு)அரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. ... 314


கொளு
துன்னு பகை தணிப்ப மன்னவன் பிரிவு
நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.

2. வருத்தம் தணித்தல்
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே. ... 315


கொளு
மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.