தெய்வமணிமாலை

தெய்வமணிமாலை தொகு

திருவருட்பா- ஐந்தாம் திருமுறை தொகு

திருச்சிற்றம்பலம்


பாடல்: 1 (திருவோங்கு) தொகு

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருட்
டிறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்
திகழ்ந்தோங்க வருள் கொடுத்து
மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க
வளர்கருணை மயமோங்கி யோர்
வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த
வடிவாகி யோங்கி ஞான
உருவோங்கு முணர்வினிறை யொளியோங்கி யோங்குமயி
லூர்ந்தோங்கி யெவ்வு யிர்க்கும்
உறவோங்கு நின்பதமெ னுளமோங்கி வளமோங்க
வுய்கின்ற நாளெந்த நாள்
தருவோங்கு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே. (01)


பாடல்: 2 (பரமேது) தொகு

பரமேது வினைசெயும் பயனேது பதியேது
பசுவேது பாச மேது
பக்தியே தடைகின்ற முத்தியே தருளேது
பாவபுண் யங்க ளேது
வரமேது தவமேது விரதமே தொன்றுமிலை
மனம்விரும் புணவுண் டுநல்
வத்திர மணிந்துமட மாதர்தமை நாடிநறு
மலர்சூடி விளையாடி மேற்
கரமேவ விட்டுமுலை தொட்டுவாழ்ந் தவரொடு
கலந்துமகிழ் கின்ற சுகமே
கண்கண்ட சுகமிதே கைகண்ட பலனெனுங்
கயவரைக் கூடா தருள்
தரமேவு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே. (02)


பாடல்: 3 (துடியென்னு) தொகு

"https://ta.wikisource.org/w/index.php?title=தெய்வமணிமாலை&oldid=1049786" இலிருந்து மீள்விக்கப்பட்டது