நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திருமதி. பாலாம்பாள்

திருமதி. பாலாம்பாள்

இந்த அம்மாளும் ஒரு நாடகக் கம்பெனியை முற்காலத்தில் நடத்தினார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் பாலாம்பாள் ஸ்திரீயாய் இருந்தபோதிலும் எனது 'மனோகரன்' நாடகத்தில் மனோகரனாக நடித்தார். காலஞ்சென்ற கந்தசாமி முதலியார் இவர்களுக்கு மனோகரனாக நடிக்கக் கற்பித்ததாக நான் அறிந்தேன். இந்த ஒரு கம்பெனி எனது மனோகரன் நாடகத்தை அறுபத்தொன்பது முறை நடத்தியதாக கந்தசாமி முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று பெண்மணிகள் எனது மனோகரன் நாடகத்தில் மனோகரனாக நடித்ததைப் பார்த்திருக்கிறேன். ஆயினும் பாலாம்பாள் நடித்ததுதான் எனக்குக் கொஞ்சம் திருப்திகரமாயிருந்தது. இந்த கம்பெனியும் கொஞ்சம் வருடங்கள் தான் இருந்து கலைந்து போய்விட்டது.