நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. C. பாலசுந்தர முதலியார்

திரு. C. பாலசுந்தர முதலியார்

இவர் பல வருடங்களாக சுகுண விலாச சபையிலும் இவர் உத்தியோகத்திலிருந்த செக்ரடேரியட்ட நாடக சபையிலும் அநேக முறை நடித்தவர். வேடம் பூணுவதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவர் நல்ல சமர்த்தர். இதில் முன்னே சொன்ன வெங்கடாசலையா அவர்களுக்கு இரண்டாவதாக கூறலாம். இவர் பன்முறை மனோகரா நாடகத்தில் வசந்தனாக நன்றாய் நடித்தவர். நடுவயதிலேயே 1939 வது வருஷம் காலகதி யடைந்தார்.