நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. T. S. பாலையா அவர்கள்

திரு. T. S. பாலையா அவர்கள்

இவர் நாடக மேடையில் நடித்ததைப்பற்றி நான் எழுதுவதற்கு ஒன்றுமில்லை, பேசும் படங்களில் பன்முறை நடிக்திருக்கிறார். முக்கியமாக வில்லன் (Villain) பாகங்களில் இவர் நடிப்பது வழக்கம். வில்லன் என்றால் நற்குணமுடைய முக்கிய பாத்திரத்திற்கு கெடுதி செய்யும் பாத்திரம் என்று பொருள். இப்படி நடிப்பது சுலபமல்ல, இவைகளில் இவர் நன்றாய் நடித்ததற்காக சென்னை சங்கீத நாடகசபையாரால் வெகுமானம் பெற்றிருக்கிறார்.