நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ T. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி

ஸ்ரீ T. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி

இவர் சிறு வயதிலேயே எங்கள் சபையில் சேர்ந்து சில நாடகங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர், இவர் பெரியவரான பிறகு உடல் கொஞ்சம் பெருத்துப் போகவே, பிற்காலத்தில் இவருக்கு நான் ஆண் வேடமே கொடுத்து வந்தேன். இவர் நன்றாய் நடிக்கவும் நடிப்பார், பாடவும் பாடுவார். இவரது பாட்டனார் தியாகராஜ ஸ்வாமிகளுடைய முக்கிய சிஷ்யராக இருந்தவராம். இவர் எங்கள் சபையில் எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்கள் நந்தனாரில் நந்தன், காலவரிஷியில் சித்திர சேனன், வாணீபுர வணிகனில், ஷாம்லால் முதலியவைகளாம். இவைகளிலெல்லாம் இவர் முக்கிய கியாதி பெற்றது நந்தனார் வேடத்தில் தான் அதிலுள்ள பாட்டுகளை பெல்லாம் மிகவும் உருக்கமாக பாடி சபையோரை எப்போதும் சந்தோஷிக்கச் செய்வார். இவர் கடைசி காலத்தில் தன் வீட்டில் பூஜை அறையில் ஸ்தோத்திரங்கள் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மரணமடைந்தார். இவரது அகால மரணம் எங்கள் சபையோரையெல்லாம் மிகவும் வருந்தச் செய்தது.