அகத்தினை நாடகக் காட்சிகள் 443 ஆ.மகள் : நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க்(கு) எஞ்சிய காதல்கொள் காமம் கலக்குற ஏதிலார் பொய்ம்மொழி தேறுவது என். ஆ-மகன் : தெளிந்தேன் தெரியிழாய்! யான். ஆ.மகள் : பல்கால்யாம் கான்யாற்(று) அவிர்மணல் தண்பொழில் அல்கல் அகலறை ஆயமொடு - முல்லை குருந்தொடும் உச்சிவேய்ந்(து) எல்லை இரவுற்ற(து); இன்னம் கழிப்பின் அரவுற்றுருமின் அதிரும் குரல்போல் பொருமுரண் நல்லேறு நாகுடன் நின்றன பல்லான் இனநிரை நாமுடன் செலற்கே" (நந்துதல்-பெருகுதல்; அமர்தல்-விரும்புதல்; உறிஇ-உற்று: ஏமம்-பித்து, அது ஏம்’ எனக் குறைந்து நின்றது; வருவான்: வினையெச்சம்: விடு-இப்பொழுது என்னைப் போக விடு; எஞ்சிய காதல் கொள் காமம்-எஞ்சிய காமம், காதல் கொள் காமம் எனத் தனி தனி இயையும். எஞ்சிய காமம்-மிக்குச் செல்லும் காமம்; காதல் கொள் காமம். அன்பொடு கலந்த காமம்; எல்லை-பகல்; அரவுற்று-அரவு உற பாம்புவரக் கண்டு) கலிப்பாவிலும் உறழ்கலி என்னும் கலிப்பா ஒருவரோடொரு வர் சொல்லாடல் நிகழ்த்துவதற்கென்றே இயன்றதொரு பாட லாகவே அமைந்துள்ளது. மேற் காட்டிய இரண்டு காட்சிகளும் உறழ்கலியாலே அமைந்திருத்தல் நோக்கற்பாலது. 4. முல்லைக் கவி-13. (இது தரவும், இரண்டு அடியால் இரண்டு கொச்சகமும், தனிச்சொல்லும், குறுவெண் பாட்டும், தனிச் சொல்லும், ஒரடியால் இரண்டும், தனிச்சொல்லும், நெடுவெண்பாட்டும், குறுவெண் பாட்டும், சிந்தடி ஒரடியான் ஒன்றும், சொற்சீரடியும், ஐஞசீரும் வந்து போக்கு இலக்கணமில்லாத ஆசிரியச் சுரிதகமும் பெற்ற உறழ் கலி.)
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/461
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை