பக்கம்:அகத்திய முனிவர்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இருப்பு. 23
  ஒத்தேறும் உவமையில்லா ஒருவன் உயர் மண முடிய உலகமெல்லாம், புத்தோகை யுடன் சிறந்து பொங்கி மணம் பெற வந்த போதனாய, இக் தேவ முனிவரனுக்கு இணையாக இசைத்திட நாம் எண்ணிநோக்கின், எத்தேவர் எம்முனிவர் எவருள்ளார் என எவரும் எத்தி நின்றார்.
  இங்ஙனம் உலகமெலாம் கொழுதேத்த அலகில் புகழோடு நிலவி நிவந்து பொதிய மலையில் இவர் இனிதமர்த் திருந்தார். 
  பொதியம் என்பது நம்பாண்டி நாட்டின் தென்பாலுள்ளதோர் சிறந்த மலை; இன்பகலங்கள் பல இசைத்து திகழ்வது; அலகில் பல்வளம் குலவி நிற்பது; புலவர் பலரால் போற்றப்பெற்றது. இதில் இனிய பொழில்கழும், அரிய நீர் நிலைகளும், வெள்ளிய அருவிகளும், தெள்ளிய சுனைகளும், அழகியதழைகளும், நறுவியமலர்களும், விழுமிய கனிகளும், குழுமிய கருக்களும், எங்கனும் கெழுமியுள்ளன. இவற்றில் படிந்து இதிலிருந்து வரும் மெல்லிய காற்று நலமிக வுடையதாய் மன்பதைக்கு இன்பம் விளக்கும் இயல்பினது. இதனையே தென்றல் என்பர். இம்மலைக்கு மலயம் எனவும் ஒரு பெயருண்டு. இவர் வந்திருந்தபின் இந்திரனெய் திய அமராவதிபோல் முந்தையினும் இது சிறந்து நின்றது. இது தவநிலைக்கு ஏதுவாய தகவினை புடையது. பவநிலையைப் போக்கவல்லது. இதன் பெருமையைப் பல நூல்களும்

மிக வியந்து போற்றியுள்ளன. ஈண்டுச் சிறிது காட்டுதும்.

பொதியை.

பண்டாய நான்மறையும் பகர்த்தான்செய் தவப்பேறாய்ப்

பரவை முற்றும்

உண்டானுக்கு உறைவிடமாம் ஒருமலையின் பெரும்புகழை

உணர்ந்தமட்டில்