பக்கம்:அகத்திய முனிவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61 குணம்

    மானமதாணி ஆணியிற் றாங்கல்;
    அழுக்கா றின்மை; அவாவிற் றீர்தல்;
    அருந்துயர் உயிர்கட் கிருந்த காலை
    அழல்தோய் வுற்ற மெழுகே போலக்
    கழலு நெஞ்சிற் கையற் றினைதல்;
    பன்னருஞ் சிறப்பின் மன்னுயிர்த் தொகைகட்கு
    அறிவும், பொறியும், கழி பெருங்கவினும்,
    பெறற் கருந் துறக்கமும், இறப்ப வூங்குத்
    தம்மினும் வேண்டுமென் றெண்னும் பெருங்குணம்;
    வாக்கொடு சிவணிய நோக்கின் மீக் கொள
    அறம்பெரி தறைதல்; புறங்கூறாமை;
    வாய்மை, கல்வி, தீமையிற் றிறம்பல்;
    இன்மொழி யிசைத்தல்; வன்மொழி மறத்தல்;
    அறிவு நூல் விரித்தல்; அருமறை கழறல;
    அடங்கிய வறைதல்; கடுஞ்சொல் விடுத்தல்;
    காயத் தியைந்த வீயா வினையுள்,
    அருந்தவம் தொடங்கல்; திருந்திய தானம்;
    கொடைமடம் படுதல்; படைமடம் படாமை;
    அமரர்ப் பேணல்; ஆகுதி அருத்தல்;
    ஒழுக்க மோம்பும் விழுப்பெருங் கிழமை;
    உடம்பிடி யேந்தி யுடல்தடிந்திடுமா
    ரடைந்த காலை அவணியல் துயரம்
    தேரா ரல்லர், தெரிந்தும் ஆருயிர்
    பெரும்பிறிதாக விரும்பிண மிசைஞரின்
    ஓராங்குப் படரா மாசில் காட்சி;
    ஐம்பெரும் பாதகத் தாழி நீந்தல்;
    இந்தியப் பெரும்படை யிரிய நூறும்