பக்கம்:அகத்திய முனிவர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அகத்தியமுனிவர். கைப் புராணம், காஞ்சிப்புராணம், சேதுபுராணம், காசி காண்டம், தேவிபாகவதம் முதலிய யாவும் இவர் பெரு ፴} { {: ፴} { ! விழுமிதாக விரும்பியுள்ளன. - 'ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவில் துணிவு' (குறள் 21) என்னும் அணிமொழிக்கு இவர் துணி பொருளாபுள்ளமை ஈண்டு எளிது தெளியலாகும். அருந்தவர் முதலாக அக்காலத் திருந்த அரசர் பலரும் இப்பெருந்தகையின் திருநாமத்தை இனிய மந்திரமாக எண்ணி கின்றனர். :நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என்ற முழுமுதற்பாமனே டும் எதிர் நின்று வாதாடிய புலவர் சிங்கமாகிய நக்கீரரும் தலையன்புடன் கிலையாக இவரை வழிபட்டு வந்தனர். வருங்

கால் வாாணுசியிலிருந்து கொண்டான் என்னும் குயவன் ஒருவன் மதுரைக்கு வந்தான். அவன் வடமொழியிற் பெரிய புலவன். அரிய கலைகள் பலவும் தெளிந்தவன். வடநாட்டிலிருந்த ஆரிய அாசர் பலரும் உவந்து பேண உயர்ந்து நின்றவன். அத்தகைய பீடமைந்த அவன் கூட லம் பதியை யடைந்து சங்கமண்டபத்துள் புகுந்து அங்குக் தங்கியிருந்த புலவர்களுடன் புலமை நலத்தோன்ற உரை பாடி யிருந்தான். இருந்தவன் ஒருநாள் வடமொழியே சிறந்தது; தமிழ் அவ்வளவு உயர்ந்ததன்.அ என்று தருக்கி, மொழிந்தான். மொழிப்பத்ருேடு கொழுப்புற்றுாைக்கும் அவனது அறியாமைக்கு இரங்கிக் கீார் எதிரே வந்து தமி ழின் அருமை பெருமைகளை இனிது மொழிந்தார். அவன் சிறிதும் இசைந்துகொள்ளாமல் 'ஆரியத்தில் ஆாணங் களும் மந்திரங்களும் அமைந்துள்ளன; தமிழில் யாதுளது; ஒன்றும் இல்லையே; என்று மேலும் மேலும் அவன்