பக்கம்:அகத்திய முனிவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அக த்தியமுனிவர். 'சாந்திக் கூத்தே விநோதக் கூத்தென்று ஆய்ந்து, வகுத்தனன் அகத்தியன்தானே' (சயந்தம்) “அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆாணங்கு' (பாரதம்) என இவ்வகையாக மொழிகிலையில் இவர் செயல் வகை கள் பல செப்பப் படுகின்றன. தம் கருத்தைப் பிறர்க் குணர்த்தவும். பிறர் கருத்துக்களைத் தாம் உணர்ந்து கொள் ளவும் கருவியாயமைந்து, மக்கள் இனிது வழங்குதற்குத் தனியுரிமையாயுள்ள மொழிகள் இயல்பான சொல்லுருவி அலும், செயலான இசைவடிவிலும், அயலான அவிநய நிலை யிலும் இயலுமாகலால் அவற்றை இவர் அழகுற வகை செய்து இயல், இசை, நாடகம் எனத் தெளிவுற இசைத் அள்ளார். இங்கனம் கலைநிலையில் இவர் தலைமை எய்தி யுள்ளமையால் புலவரெவரும் குலகுருவாக்கொண்டு தம் : புலமை நலம்பெற இவரைப்போற்றி நின்றனர். 'சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப் பாமாசாரியன் பதங்கள் சிசமேற் கொள்ளுதும் திகழ்தாம் பொருட்டே' 'முத்தமிழ் அகத்திய முதனூல் உரைத்த வித்தகன் அடிமலர் விளக்கும் சித்தகின்றுத்தமச் செந்தமிழ் இயல்பே' 希丁証门 இவ்வாறு அறிஞர் பலரும் இவரை ஏத்தி வரு கின்றனர். 'கற்றாேர் அறியா அறிவினர்; கற்றாேர்க்குத்தாம் வசம்பாகிய தலைமையர்; எனக் ாேர் கூறியவாறு இவர் வினுபெற்று கின்ருர், இவர் பெயரைச் சிந்தித்து வரின் கல்வி கலனும், பல் ' வகை கலங்களும் கைவரும் என்பர். இவர் பெயரால் ககோளமண்டபத்தில் ஒரு நட்சத்திரம் உள்ளது; அது