பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௭௬

அகநானூறு

[பாட்டு


வின் துதை குரலாக - தொகுதியாய முழவின் நெருங்கிய இசையாகவும், கணக் கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு - கூட்டமாய கலை மான்கள் தாழ ஒலிக்கும் கடிய குரல் பெருவங்கியத்தின் இசையாகவும் (அதனொடு ), மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக - மலைச்சாரலிடத்தே பூக்களிலுள்ள வண்டின் ஒலி யாழின் இசையாகவும் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு - இங்ஙனம் இனிய பலவாய ஒலிக்கும் இசைகளைக் கேட்டு, கலிசிறந்து - ஆரவாரம் மிக்கு, மந்தி நல் அவை மருள்வன நோக்க - மந்திகளாய நல்ல திரள் வியப்புற்றுக் காண, கழை வளர் அடுக்கத்து - மூங்கில் வளரும் பக்க மலையில், இயலி ஆடும் மயில் - உலாவி ஆடும் மயில்கள், நனவுப் புகும் விறலியில் தோன்றும் நாடன் - களத்திற் புகுந்தாடும் விறலிபோலத் தோன்றும் நாட்டையுடையவனாகிய, மலர் தார் மார்பன் - அகன்ற தாரினை யணிந்த மார்பையுடையவன், உருவ வல்வில் பற்றி - அழகிய வலிய வில்லினைக் கையிற் பற்றி, அம்பு தெரிந்து - சிறந்த அம்பினை ஆய்ந்து கொண்டு, செருச் செய் யானை செல்நெறி வினாஅய் - தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற நெறியினை வினவி, புலர் குரல் ஏனல் புழையுடை ஒருசிறை - முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் வாயிலின் ஒரு பக்கத்தே, நின்றோன் கண்டோர் - நின்றவனைக் கண்டோர், பலர் - பலராவர்;

கரு-கஅ. அவருள் - அவர் தம்முள், ஆர் இருள் கங்குல் - அரிய இருள் செறிந்த இரவில், அணையொடு பொருந்தி - அணையின் கண் தங்கி, நீர்வார் கண்ணொடு - நீர் சொரியும் கண்ணினொடு, நெகிழ் தோளோன் - மெலிந்த தோளை யுடையேனாக, ஓர் யான் ஆகுவது எவன் கொல் - யானொருத்தியுமே ஆயது என்னையோ?

(முடிபு) தோழி வாழி! நாடன், மார்பன் நின்றோற் கண்டோர் பலர்; அவருள் அணையொடு பொருந்தி நீர்வார் கண்ணொடு நெகிழ்தோளேன் ஓர் யான் ஆகுவது எவன் கொல்,

(வி - ரை.) மூங்கிலில் வண்டு துளைத்த துளையின் வழியே மேல் காற்றுச் செல்லுதலால் எழும் ஓசை, குழலிசை போலும் என்னுங் கருத்து, 'ஆடமைத் தும்பி குயின்ற, அகலா வந்துளை கோடை முகத்தலின், நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல், ஆய்க்குழற் பாணியி லைதுவந் திசைக்கும்' (உஉரு) எனப் பின்னர் வருதலுங் காண்க. இவ்வுருவகம், 1'பருதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக், கிருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழிற், குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர், மயிலா டரங்கின் மந்தி காண் பனகாண்.' என மணிமேகலையில் அமைந்திருத்தல் அறிந்து இன்புறத்தக்கது. உருவ - என்றதனை உரிச்சொல் ஈறு திரிந்ததெனக் கொண்டு உட்குப் பொருந்திய என்றலுமாம். 2'உருவக்குதிரை மழவர் ஓட்டிய' என்றதன் உரை காண்க. செருச் செய் யானை- போர் செய்து அம்பு எய்யப் பெற்ற யானை. மலர் மார்பு என இயையும். மலர்ந்த தார் எனச் சினைக்கேற்ற அடையாக்கலுமாம். தில், அசை,


1. மணி, ௪: க-௬. 2. அகம். க.