பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

களிற்றியானை நிரை

௧௭௯


84. முல்லை


[தலைமகன் பாசறையிருந்து சொல்லியது.]



மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்
பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித்
1தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ
மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர

ரு) இருநிலங் கவினிய ஏமுறு காலை
நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி
அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய
நறுவீ முல்லை நாண்மலர் உதிரும்
புறவடைந் திருந்த அருமுனை இயவில்

க0) சீறூ ரோளே 2ஒண்ணுதல் யாமே
எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி '
அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு
கள்ளார் வினைஞர் களந்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில்

கரு) அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து
வினைவயிற் பெயர்க்குந் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே.

- மதுரை எழுத்தாளன்.


(சொ - ள்.) க-ரு. மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில் - மலை மீது வளைந்த அச்சந் தரும் அழகிய வில்லினையுடைய, பணை முழங்கு எழிலி - முரசமென முழங்கும் மேகம், பௌவம் வாங்கி - கடல் நீரை முகந்துகொண்டு, வலன் ஏர்பு வளைஇ- உலகினை வலனாக எழுந்து வளைத்து, தாழ் பெயல் பெரு நீர் - இறங்கிப் பெய்யும் மிக்க மழையை, மாதிரம் புதைப்பப் பொழிதலின் - திசை யெல்லாம் மறையப் பொழிதலால், காண்வர இரு நிலம் கவினிய ஏம்உறு காலை - காட்சியுறப் பெரிய நிலம் அழகுபெற்ற இன்பம் எய்திய இக்காலத்தே,

க0. ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றியினை யுடைய நம் தலைவி,

௬-க0. அயிர்க்கண் படாஅர்த் துஞ்சு - நுண் மணலின் கண்ணுள்ள சிறு தூறினிடத்தே தூங்கும், நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி - நெருப்பினை யொத்த சிறிய கண்ணினை யுடைய பன்றியின், புறம் புதைய - முதுகு மறைய, நறுவீ முல்லை நாள் மலர் உதிரும் - நறிய பூவினதாகிய முல்லையின் புதிய பூக்கள் உதிரும், புறவு அடைந்திருந்த அருமுனை இயவில் - காடு சார்ந்திருக்கும் அரிய முனைகளை யுடைய நெறியிலுள்ள, சீறூரோள் - சிறிய ஊரின் கண் உள்ளாள் ஆவள் ;


(பாடம்) 1. தாழ்பெயற் கெதிரி. 2. நன்னுதல்.