பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௮௦

அகநானூறு

[பாட்டு


க௦-எ. யாமே - யாமோ, எரி புரை பன்மலர் பிறழ வாங்கி - நெருப்புப் போன்ற பல மலர்களை மாறுபட வைத்து வலித்து, அரிஞர் யாத்த அலங்குதலைப் பெருஞ்சூடு - நெல்லரிஞர் கட்டிய அசையும் பக்கங்களையுடைய பெரிய நெற்கட்டினைக் கொண்டு, கள் ஆர் வினைஞர் களந்தொறும் மறுகும் - கள்ளினை உண்ட களமர் களந்தோறும் கொடுபோகும், தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் - மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் இவ்வரிய எயிலை, அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் - பகைவர் வணங்கி அரிய திறையாகக் கொடுப்பவும் ஏற்றுக் கொள்ளானாகி, சினஞ் சிறந்து - சினம் மிக்கு, வினை வயின் பெயர்க்கும் தானை - மேன்மேலும் போரின்கட் செலுத்தும் சேனையினையுடைய, புனை தார் வேந்தன் பாசறையேம் - மாலையை அணிந்த அரசனது. பாசறையிடத்தே யுள் ளேம்.

(முடிபு) எழிலி பொழிதலின் இருநிலம் கவினிய ஏமுறு காலை, ஒண்ணுதல் சீறூரோள் ; யாமே, ஆரெயில் திறை கொடுப்பவும் கொள்ளான் வினைவயிற் பெயர்க்கும் தாளைப் புனை தார் வேந்தன் பாசறையேம்.

வி - ரை.) ஏம் - ஏமம் ; பாதுகாவலுமாம். எரிபுரை மலர் - தாமரை, செங்கழுநீர். பிறழ என்றது பூவோடரிந்த நெல்லைக் கட்டுங் காலத்து அரியோடு மாற வைத்துக் கட்டப் பெறுதலால் அவை தம்மின் மாறுபடல். எயில் - அரண், ஊர். தூது விடக் கருதிய தலைவன் சீறூரோள் ஒண்ணுதல் எனத் தன் வருத்தந் தோன்றக் கூறினான் என்க. இதனைத் தூது கண்டு கூறியதென்பர் நச்சினார்க்கினியர்.

(மே - ள்.) 1'ஏவன் மரபின்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுளை எடுத்துக் காட்டி, இது தூது கண்டு வருந்திக் கூறியது எனவும், இதன்கண் தன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலின், தான் குறுநில மன்னன் என்பது பெற்றாம் என்றும், 2'தானே சேறலும்' என்னுஞ் சூத்திரத்து, இது குறுநில மன்னர் போல்வார் சென்றமை தோன்றக்கூறியது என்றும், 3'ஒன்றாத் தமரினும்' என்னுஞ் சூத்திரத்து இது, 'ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்' என்றதற்கு உதாரணமாகுமென்றும், 4'கூதிர் வேனில்' என்னுஞ் சூத்திரத்து, 'வினைவயிற்... பாசறை யேமே' எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம்; அகத்திற்கு வழுவன்று என்றும் கூறுவர் நச்.



85. பாலை


[தலைமகன் பிரிய வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடுயிர்செலச் சாஅய்


1. தொல். அகத். உ௪. .2, தொல். அகத், உஎ. 3. தொல். அகத். ௪க. 4. தொல். புறம், உக.