பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௦௮/208

அகநானூறு

[பாட்டு



அறிந்தனள் அல்லள் அன்னை வார்கோல்
செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ
க0) முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்

தோவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன பலராய் மாண்கவின்
பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பரைஇக்
கூடுகொள் இன்னியம் கறங்கக் களனிழைத்
கரு) தாடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர் -

வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐதமை பாணி இரீஇக்கை பெயராச்
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன்
உ0) பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின்

என்னாங் கொல்லோ தோழி மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையிற் சிறவா தாயின் இம்மறை
உரு) அலரா காமையோ அரிதே யஃதான்

றறிவர் உறுவிய அல்லல்கண் டருளி
வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே
செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
கான்கெழு நாடன் கேட்பின்
௩௦) யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே.

- வெறிபாடிய காமக்கண்ணியார்.
.

(சொ - ள்.) உக. தோழி -,

க-௪. பனிவரை நிவந்த பயம் கெழு கவான் - குளிர் வாய்ந்த மலையினது உயர்ந்த வளம் பொருந்திய பக்க மலையிடத்து, அவர் - நம் தலைவர், துனி இல் கொள்கையொடு - வெறுப்பில்லாத கொள் கையுடன், நமக்கு உவந்த இனிய உள்ளம் - நமக்குவந்தளித்த அவரது இனிய உள்ளம், இன்னா ஆக - இன்னாவாயினமையின், முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் - வெறுக்குமாறு நிலை பெறுத்திய நல்கல் வருத்தமானது, . ரு-௬. சூர் உறை வெற்பன் - தெய்வம் உறையும் மலையினை யுடையானாய அத் தலைவன், மார்பு உற - மார்பு உறுவதொன்றானே, தணிதல் - தணிவதாதலை, அன்னை அறிந்தாள் அல்லள் - நம் தாய் அறியாதவளாகி,

௬ - அ. வார்கோல் செறிந்து இலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கி - நீண்ட கோற்றொழி லமைந்த நெருங்கி விளங்கும் ஒளி பொருந்திய வளை நெகிழ்ந்த நிலையினைப் பார்த்து, கையறு நெஞ்சி னள் - செயலற்ற உள்ளத்தினளாய், வினவலின் - வினவுதலாலே,