பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௨௨அகநானூறு[பாட்டு

 


௫)காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை அல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
ஒண்சுடர் நல்லில் அருங்கடி நீவித்
தன்சிதை வறிதல் அஞ்சி இன்சிலை

௧௦)ஏறுடை இனத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையிற் போகி ஈங்கோர்
தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மகள்
இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்

௧௫)பிற்படு பூசலின் வழிவழி யோடி:
மெய்த்தலைப் 1படுதல் செய்யேன் இத்தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி
ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்

௨௦)ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த
துய்த்தலை வெண்காழ் பெறூஉங்
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே.

-கயமனார்.

(சொ - ள். ௯-௧௦.) இன் சிலை ஏறு உடை இனத்த = இனிய முழக்கங் கொண்ட ஆண்மானாகிய இனத்தினையுடைய, நாறு உயிர் நவ்வி = உயிர்ப்புத் தோன்றும் இளைய மானே!

௧-௭. (என் மகளை நோக்கி யான்), மேதை அம் குறுமகள் = அறிவினையுடைய இளைய மகளே! முலை முகஞ் செய்தன = நினக்கு முலைகள் அரும்பின, முள் எயிறு இலங்கின = (விழுந்தெழுந்த) கூறிய பற்கள் ஒளி கொண்டன, தலை முடி சான்ற = கூந்தல் முடித்தல் அமைந்தன, தண் தழை உடையை = தண்ணிய தழையுடை கொண்டனை (ஆதலின்), அலமரல் ஆயமோடு யாங்கணும் படாஅல் = சுழன்று திரியும் நின் ஆயத்தாருடன் எங்கணும் போகற்க, மூப்புடை முதுபதி தாக்கு அணங்கு உடைய = தொன்மை வாய்ந்த இந்தப் பதியின் இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை யுடையன, காப்பும் பூண்டிசின் = (இவற்றால்) நீ காவலும் எய்தினை, கடையும் போகலை = இனி நீ நம் வாயிலகத்தும் போகற்பாலை யல்லை, பேதை அல்லை = நீ பேதைப் பருவத்தினை யல்லை, பெதும்பைப் பருவத்து புறத்து ஒதுங்கினை என = இப்பெதும்பைப் பருவத்து நீ புறத்துப் போனாய் என்னை என்று நான் கூற (அது கேட்டு),

௧௭-௨௨. பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி = பொன்னாலியன்ற புலிப்பல்லொடு கோக்கப்பெற்ற தனி மணித் தாலியினையும், ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் = தழைத்த அசோகந் தளிராலாய தழையுடையால் மாண்புறும் அல்குலினையும்


(பாடம்) 1. படுதல் செல்லேன்.