மூலமும் உரையும்
புலியூர்க் கேசிகன் ☆ 27
நினக்கு இன்பந்தரும் எமக்கும் பிரிவுத் துன்பமாகிய ஊறும் விளைவித்தனை என்பதாம்.
13. புலம்பொடு வந்த வாடை!
பாடியவர்: பெருந்தலைச்சாத்தனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டது.உம் ஆம். சிறப்புற்றோன்: தென்னவன் மறவனான கோடைப்பொருநன் பண்ணி.
(பொருள் தேடிவருவதற்காகத் தன் தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு செல்ல விரும்புகின்றான் ஒரு தலைவன். அதனால், தலைவி தன் உயிரையே இழந்துவிடவும் கூடும்’ என்று கூறி, அவனைச் செல்லாது தடுக்கின்றாள் தோழி. அல்லது, ‘யாம் துன்புற்றாலும் சகித்திருப்போம்; நின் முயற்சி நன்கு நிறைவுறுக’ என, அவன் போதற்கு இசைகின்றாளும் ஆம்)
தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத்
தெறல்அரும் மரபின் கடவுட் பேணிக்,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
5
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்-
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது,
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன் -
10
பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்விது ஆயினும் - தெற்குஏர்பு,
கழிமழை பொழிந்த பொழுதுகொள் அமையத்துச்,
சாயல் இன்துணை இவட்பிரிந்து உறையின்,
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
15
மாசுஇல் தூமடி விரிந்த சேக்கை,
கவவுஇன் புறாமைக் கழிக - வள வயல்,
அழல்நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்புஅணையாத் துயல்வரப்,
20
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை,
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல, வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே!