பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அகநானூறு - மணிமிடை பவளம்



அழகிய சிலவாகிய கூந்தலையும், ஆராய்ந்த ஆபரணங்களையும் உடைய தலைவியே!

இவளை நாம் பிரிந்து போனபின், இவள் இரந்துபாட்டை நினைந்து நாம் இரங்க வேண்டுமன்றோ என நினைந்து, நள்ளென்னும் இரவில், நடுங்குந் துணையினரான நம் தலைவர்;

தான் புல்லுத் தின்னுதலை மறந்து, காற்றால் அசைந்தாடும் பெரிய மூங்கிலினின்றும் உதிரும் நெல்லை நோக்கிக் கலைமான் தன் பிணையை அழைக்கும் கானத்திடத்தே;

கற்பாறையோடு சேர்ந்து அமைந்திருந்த வடுப்பட்ட சிற்றில்லிலே,

தாழியிடத்தே செருக்கி வளர்ந்த கொழுவிய இலையையுடைய பருத்தி மொட்டினிடத்துள்ள இளங்காயைத் தன் பேடைக்கு ஊட்டி, ஆண்பறவைகள் கொத்திப் பிளந்து போட்ட பஞ்சி பொங்கி எழுந்த, வெளிய அப் பருத்திக் கொட்டையை, வறுமையுற்ற பெண்டிர் தம் அல்குலிடத்துக் கூட்டா நிற்கும்;

கலங்குதற்குக் காரணமான போர்முனையையுடைய சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி:

அவருடைய கொழுத்த ஆவைக் கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர், செருப்பினைப் பூண்ட அடியினராய்த், தெள்ளிய சுனைக்கண் நீரருந்த நெருங்கும் அரிய சுரமானது;

நீண்ட கோற்றொழில் அமைந்த திருந்திய ஆபரணங்களையும்,மூங்கில் போன்ற தோளையும், வண்டுபடுகின்ற கூந்தலையும், குவளைபோன்ற மையுண்ட கண்ணையுமுடைய இத் தலைவியுடன் செல்லுவதற்கு அரியவல்லவாய் இராநின்றன என்று, காதலர் நமக்குத் தம் மனக்கருத்தை வெளியிட்டனர்;

அவ்வாறாகியபோது, நின்னை மறந்து நம் காதலர் வேற்று நாட்டிடத்தே தங்குதல் என்பது எவ்வாறு கூடும்?

என்று, தலைமகட்குத் தோழி தலைமகன் பிரிந்த காலத்துச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. ஓதி - மகளிர் கூந்தல். 2. நள்ளென் கங்குல் - நள்ளென்னும் இரவு. 3. புல் மறந்து - புல்லுண்ணலை மறந்து. 4. அலங்கல் - அசைந்தாடும். வான்கழை - பெரிய மூங்கில். 6. கல் சேர்பு இருந்த கற்பாறையோடு சேர்ந்திருந்த, கதுவாய்க் குரம்பை-வடுப்பட்டசிற்றில்.7. கலித்த-செருக்கிவளர்ந்த கோழ்-