18 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
பிள்ளைகள் அக் குதிரையை இழுக்கும்பொழுது தலைவனுடம்பிலிருந்து குருதி பெருகும். இதனைக் கண்ட ஊரார் அப்பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க முந்துவர்; இப்பழக்கம் எத்தகையதாயினும் தலைவனுடைய மனவளர்ச்சியில் ஒரு படியைக் காட்டுகிறது. தலைவியைப் பெற வேண்டித் தன்மானத்தையுந் துறந்து பனங்கறுக்கினால் செய்த குதிரையில் ஏறத் தலைவன் முற்பட்டான் எனில், அவன் அகங்காரம் முற்றும் அழிந்து விட்டதென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமோ?
. . . .போருள்
அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித்தவள் வாழி! சான்றீர்
. . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் – அம்ம, சான்றீர்
. . . வடிநாவின்
வல்லார் முன்சொல் வல்லேன் என்னைப் பறிர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் – வாழி, சான்றீர்
(கலித்தொகை – 141)
கலித்தொகையில் காணப்பெறும் இம்மூன்று தாழிசைகளும் உண்மைக் காதலில் அகங்காரத்திற்கு அழிவு ஏற்ப்டுகின்றது என்று மேலே நாம் குறிப்பிட்டதை வலியுறுத்துகின்றன. .
என்று சொல்லும்பொழுது அவன் உடல் வன்மையும்,
. . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன்
என்று கூறும்பொழுது அவன் நெஞ்சுரத்தையும்,