பக்கம்:அகமும் புறமும்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309 • அகமும் புறமும்

என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தந்தமைக் கூறிக்கொள்ளும் பொழுது பேரரசர்களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். அவ்வரசர்கள் ஒரோவழி அதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சுய கிள்ளிவளவனை ‘வெள்ளனக்குடி நாகனார், என்ற புலவர் பாடிய பாடம் அது.

‘முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
அரசெனப் படுவது நினதே பெரும்!’

(புறம்–35)

என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று,

‘நாடு எனப்படுவது நினதே’

(புறம்–35)

என்றும் கூறிவிடுகிறார். தமிழ்நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், ‘அரசன்’ என்று கூறினால் சோழனைத்தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால் சோழநாட்டைத்தான் குறிக்குமாம்!

சக்கரவர்த்திகள்

இன்னுஞ் சில சந்தருப்பங்களில் அவர்கள் ஆளும் பகுதிகளை ‘உலகம்’ என்றுகூடக் குறிப்பிட்டனர்.‘பிரமனார்’ என்ற புலவர்

‘பொதுமை சுட்டிய மூவர் உலகமும்’
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்.

(புறம்–357)