இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
372 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
ஊரானோர் தேவகுலம்
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து
(கலி)
அணங்குடை முருகன் கோட்டம்
(புறம்)
கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன.
மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து
(அகம்)
போற்றுவார் இன்றி, வழிபடுநர் இன்றி சில கோயில்கள் பாழாயின என்றும் அறிகிறோம்.
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
(அகம்)
‘கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’
(நெடுநல்வாடை)
கர்ப்பக்கிரகம்—சிலை—அமைத்து வழிபடும் வழக்கமும் இருந்தது.
நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன்....
(பெரும்பாணாற்றுப்படை)
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி
(அகம்–167)