பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடோட்டிகள்! அன்றொரு நாள் திராவிடத்தைச் சுரண்ட வந்தவர் கள் மாடோட்டித்தான் வந்தார்கள் இமாலயத்தின் கண வாய்களின் வழியாக! இப்போதும் நம்மிடம் மாடோட்டி வந்தவர்கள் திராவிடத்தை வடவரின் வலையில் சிக்கிடும் மானாக ஆக்கத்தான் பாடுபடுகிறார்கள். வடவரின் அடிமைகள் இவர்கள் ! இவர்கள் ஓட்டி வரும் மாடுகள் நம்மையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு வடவரிடம் அடிமையாக்க முயற்சிப்பவை. வடகாட்டு நாகரீகத்தை, வடநாட்டு மொழியை, வடநாட்டு கலாச்சாரத்தை திராவிடத்திலே புகுத்துவது மட்டுமல்ல; வடநாட்டாரின் நிரந்தர எடுபிடியாக திரா விடத்தை மாற்றிவிட வேண்டுமென்ற தீவிர முயற்சி மாடோட்டிகளால் நடைபெறுகிறது. காங்கிரஸதான் விடுதலை வாங்கித் தந்தது; சுதந் திரம் பெற்றுத் தந்தது- என்ற காரணங்களைக் காட்டி மக்களை மயக்கி விடலாமென்ற துணிவு ஏற்பட்டிருக் கிறது அவர்களுக்கு!