பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மீண்டும் லோகநாதனை விழுங்கி ஏப்பமிட்டுவிட்டது மலேயாவின் மரண மேடை ! காமன்வெல்த்திலே அங்கம் வகிக்கிறது நம்மை ஆளும் சர்க்கார். மலேயா கொடுமை பற்றி எடுத்துரைத்து ஏற்றது செய்ய மனத் துணிவு இல்லை. காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டுமென்ற உணர்ச்சி ஏற்படவும் இல்லை. திராவிடம் தனி நாடாக இருந்திருந்தால் கண பதியை, லோகநாதனை சாகவிடுவோமா ? ஏன், மலேயா சென்று வாழ வேண்டிய நிலைதான் அவர்களுக்கு இருந்திருக்குமா? வெளி நாடுகளில் வீசப்பட்ட கேடுகளை கண்டிக்க மறந்தனர்! மாடுகளை மீண்டும் ஓட்டிக்கொண்டு ஓட் டுக்கு வந்தனர். வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, திரா விடம் லோகநா தனுக்காக வாதாட வில்லை ! வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, கோயங்கா தென்னாட்டு அபேட்சகராக முடிந்தது! வடநாட்டுப் பிடியிலே இருப்பதால்தானே, பிர்லா வின் ஏஜண்டுகள் சிலர், பிர்லாவின் பணத்தை வாரி இறைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள் தி ரா விடத்திலே! இத்தகைய கொடுமையான ஏகாதிபத்தியத் திலிருந்து திராவிடம் விடுபட வேண்டும் என்பதற்காகத் தான், திராவிடம் சுதந்திர பூமியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான், திராவிடத்திலே உண்மையான