பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

சாஸனங்கள்


7. அசோகன் தன் ஆட்சியின்பொழுது
தர்மத்தின் பொருட்டுச் செய்ததான
காரியங்களின் மதிப்புரை.


சுருக்கம். இதில் பத்து உட்பிரிவுள்ளன. இவற்றை I,II,என்று குறிப்பிடுகிறோம். முதற் பிரிவில், முன்னிருந்த அரசர்கள் செய்த தர்மப்பிரவிர்த்திகள் பயனளிக்கவில்லையென்றும், இரண்டாவது பிரிவில் இன்னும் தீவ்ரமாய் முயற்சி செய்து தர்மத்தில் வெற்றியடையவேண்டுமென்ற அசோகனுடைய தீர்மானமும், மூன்றாவது பிரிவில் தர்மப்பிரசாரஞ் செய்வதற்கு அரசனால் செய்யப்பட்ட ஏற்பாடுகளும், நாலாவது பிரிவில் அரசன் ஸ்தம்பங்களை நாட்டி மகாமாத்திரர்களை நியமித்ததும், ஐந்தாவது பிரிவில் பிரயாணிகள் பிரயாணத்தின்போது சௌக்கிய மடைவதற்கான ஏற்பாடுகளும், ஆறாவது பிரிவில் தர்ம மகாமாத்திரரின் வேலையும், ஏழாவது பிரிவில் ௸ அதிகாரிகள் அரசனுடையவும் அரண்மனையிலுள்ள மற்றோருடையவும் தான தர்மங்களை நடத்தவேண்டுமென்றும், எட்டாவது பிரிவில் நன்னடக்கையைப்பற்றியும், ஒன்பதாவது பிரிவில் கண்ணோட்டத்தின் பயனைப்பற்றியும், கடைசியில் இக்கட்டளை எங்கும் விளம்பரம் செய்யப்படவேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கின்றன.

I. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். முற்காலங்களிலிருந்த அரசர்கள் தர்மத்தின் அபிவிர்த்தியோடு மனிதருடைய அபிவிர்த்தியும் இசைந்து போகச்செய்வது எப்படியென்று விரும்பினார்கள். ஆனால் மனிதனோ தர்மத்தின் அபிவிர்த்திக்குச் சரியாய் வளரவில்லை.

II. அதனால் தேவர்களுக்குப் பிரியனை பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான்.