பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


VII. ஸ்மாரக லிகிதங்கள்
நிக்லீவா லிகிதம்

இந்த ஸ்தம்பம் உடைந்துபோனது ; லிகிதமும் பல சிதைவுகளுடையது. ஸ்தம்பம் அதன் பூர்வ ஸ்தா னத்திலிருந்து மாற்றப்பட்டிருக்கிறது என்பது தெளிவு. விகிதத்தில் கூறப்படும் ஸ்தூபம் தேடியும் இன்னும் கிடைக்கவில்லை. கொனாக முனிவர் பூர்வ புத்தர்களில் ஒருவர். மொத்தம் புத்தர்கள் இருபத்தைவர் என்பர். அவருள் எழுவர் பிரதானமான வெரென்று பௌத்த நூல்கள் கூறும். அவர், விபஸ்ஸி, சிகீ, வெஸ்ஸபூ, ககுஸந்தர், கொனாகமனர், காச்யபர், கௌதம சாக்கிய முனிவர். புத்தவம்சம் என்ற நூலில் பூர்வ புத்தரின் கதைகளிருக்கின்றன.

அசோகன் பூர்வபுத்தர்களைச் சேர்ந்த மற்ற க்ஷேத்திரங்களையும் தரிசனஞ்செய்து அங்கும் பூஜைமரியாதைகளைச் செய்திருக்கலாம். காலத்தைக் காட்டும் சொற்கள் மாய்ந்திருக்கின்றபோதிலும், நிக்லீவா லிகிதம் ரும்மின் தேயீ லிகிதத்துடனே எழுதப்பட்டிருக்கவேண்டுமென்று வாசக ரீதியிலிருந்து அனுமானிக்கலாம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் முடிசூடிய பதினான்கு வருஷங்களுக்குப் பின் கொனாகமன புத்தரின் ஸ்தூபத்தை இரண்டாந்தரம் விசாலமாகக் கட்டினார். தான் முடிசூடி (இருபது வருஷங்கள்) ஆனபின் அவர் நேராக வந்து இந்த புத்தருக்குப் பூசைசெய்து (கல் ஸ்தம்பத்தையும்) நாட்டினார்.