பக்கம்:அஞ்சலி.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 லா. ச. ராமாமிருதம்

அப்போ திடீர்னு சாமியாரு வெடிப்பா ஒரு சிரிப்பு சிரிச்சாரு பாரு! நான் என்னாத்தைச் சொல்ல? தெரு முளுக்க அது கேட்டுது. என்னவோ தெருக் கூத்திலே ‘டார்ரா’ திரையைக் கிளிச்ச மாதிரி, அந்தச் சத்தம். கொழந்தையை அமுக்கினமாதிரி செத்தவ ஆத்தாளுக்கு அழுகை அடங்கிப்போச்சு. எல்லாருக்குமே என்னவோ ஒரு மாதிரி கிலி, சாமியார் எழுந்து உள்ளே போயிட்டிாரு.

மறுநாள் சாணி தெளிக்கற வேளைக்கு ஆளைக் காணோம். ஆனா அவர் போனால் எனக்கென்ன? போன வரைக்கும் சேமந்தானே? ஆனா, கூடவே என் புருசனையும் கானோம்.

திடீரென பூரணிமேல், இருள்கள் இழைந்து குழைந்து திரிந்து செறிந்து சரிந்து படர்ந்து நிறைந்து கவிந்தன.

இருளோன்னு இருளு! கொஞ்சங் கொஞ்சமா கலக்கம் தெளியுது. அது மத்தியிலே அவலச்சணமா, மொத்தையா ஒரு உருவம் எழும்புது, அட, இது என்ன. நம்ப நடு வீட்டுக்கு குதிருன்னா?

“என்ன பூரணி உனக்கு விந்தையாயிருக்குதா? வேடிக்கையாயிருக்குதா? பயமாயிருக்குதா? நான்கூட உன்னோட பேச வந்தூட்டேன்னு? ஏன், நான் வரக் கூடாதா? என்னைப் பார்த்தா உனக்கு ஆளா, கணக்காயில்லியா? பூரணி, ஒன்னுவெச்சுக்க. இந்த உலகத்துலே உயிரில்லாததேயில்லே. எப்பவுமே என்னினைப்பு உனக்கு இல்லாட்டியும் உன் நெனைப்பு எனக்கு உண்டு. ஏன் என்னிடத்திலே நீ கொட்டிவெச்ச பச்சை நெல்லை நான் பழய நெல்லா ஆக்கித்தரல்லியா? நாளு கிழமை சின்னப் பொங்கல் பெரிய பொங்கலுக்கு எனக்கு நீ மஞ்சா பூசி சிவப்பு இட்டுக் கொண்டாடல்லியா? ஊம்... ஊம். அப்புறம்...அப்புறம்...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/150&oldid=1033464" இலிருந்து மீள்விக்கப்பட்டது