னால். காலத்தைப் போக்குவதற்கு சரியான வழி தெரியாது மதமேறிப்போன வெறியினால், முதலாளிகளும் சின்ன முதலாளிகளும் ஊர்ப் பெண்கள் மீதும் உழைக்கின்ற வேலைக்காரப் பெண்கள் மேலும் விளையாடத் துடிக்கின்ற செல்லப்பிள்ளை'களாகத் திரிகின்றார்கள். விபசார பிரம்மாக்களாகவும், விபசார ராஜாக்களாகவும் வாழ்கின்றார்கள்.
அன்றலர்ந்த பனிமலர் போன்ற இளம் பெண்களின் புனிதத்தன்மையையும், சம்பிரதாயங்களால் வலையிடப்பட்ட சிறுபெண்களின் உடலையும் உள்ளத்தையும், வயிற்றுப் பிழைப்புக்காக வேலைசெய்ய வருகின்ற பெண்களின் கெளரவத்தையும் பெயரையும் நாசமாக்கி, சமுதாயத்திலே கறை அதிகம் படியச் செய்கிறார்கள். திமிர்பிடித்த இத்தறுதலைகளின் செயலுக்கு சமாதிகட்டப்பட வேண்டுமானால், சுரண்டி வாழ்ந்து சுகபோகம் கொழிக்கின்ற இக்கும்பலுக்கே - முதலாளி வர்க்கத்தினருக்கு - சாவு மணி அடித்தாகவேண்டும்.
குத்தும் கிண்டல்கள்!
தைக்கின்ற கையாண்டிச்சொற்கள்
கதையல்ல அளப்பல்ல!
- சமுதாயத்தின் சிறுமைகளைச்
சிரித்துச் சிரித்துச் சமாதியாக்க
சுட்டிக்காட்டும் சிரிய சிந்தனைகள்
'நாசகாரக் கும்பல்!
ஆசிரியர்: நையாண்டி பாரதி
இது சாந்தி நிலைய வெளியீடு