முகமும் இன்சொல்லும் அணியெனப் பூண்டவர்கள். கூரிய அறிவும் சீரிய சிந்தனையும் இயல்பாக அடுக்குமொழியில் எழுதும் பேராற்றலும், சட்டத்துறையில் நிபுணத்துவமும் வாய்ந்தவர் கள். சட்டவியல், தீங்கியல் சட்டம், குற்றமும் தண்டனையும் போன்ற அரிய சட்ட நூல்களைத் தமிழுலகுக்கு முதன் முதலாக வழங்கிய பெருந்தகையாளர். அவர்களுக்கு என் மனமுவந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்நூலைச் சுருங்கிய காலத்தில் அழகுற அச்சிட்டதோடு அச்சுப்படியினைப் படித்துத் திருத்தியும் உதவிய என் கெழுதகை நண்பரும், பழகுதற்கினிய பண்பினரும், பாரி அச்சக உரிமை யாளருமான திரு. மு. நாராயணன் செட்டியாரவர்கட்கு என் பெருநன்றியை உரித்தாக்குகின்றேன்.
இந்த நூலை விற்பனை உரிமையுடன் ஏற்றுக்கொண்டவரும், பாரி வள்ளலைப்போலப் பண்புள்ளங் கொண்டவரும், பாரி நிலைய உரிமையாளருமான திரு. க. அ. செல்லப்பா அவர்கட்குப் பெரிதுங் கடப்பாடுடையவனாவேன். என்னுடைய எண்ணத்திற்கும் செயலுக்கும் இன் துணையா யிருந்துவரும் என் குருவிற்கும், உலக முதல்வியாம் அன்னையாருக்கும் அவர்கள் திருவடி பணிந்து இந்நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன்.
சென்னை -}
4-9-64}