பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றினர்போல் தோன்றினும், தம் வாழிடம் தோக்கி வந்தார்க்குத், தம்பால் உள்ள தினை உணவை ஒருநாளிற்கு ஒருவராக, வரிசைவரிசையாக வழங்கி, வைத்துப்பேனும் பெருவாழ்வுடையவராவர். இவ்வனப்புமிகும் அவ்வாழ்வுக் காட்சியை, வரைந்துகாட்டும் பெருமையும், அப்பத்திற்கே உரித்தாம்.

'ஏனல் உழவர் வரகுமீது இட்ட கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை மென்தினை நுவணை முறை முறை பகுக்கும் புன்புலம் தழிஇய புறவணி வைப்பு’’

-பதிற்றுப்பத்து , 30: 22-25

இவைபோலும் ப ந ல ம் பலவும் பயிலப்பெற்றது பதிற்றுப்பத்தின் இம்மூன்றாம் பத்து. அப்பாக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே பார்த்து, அப்பாநலம் அனைத்தையும் அறிந்து, ஆரா இன்பம் அடைவோமாக.

25

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/35&oldid=1293658" இலிருந்து மீள்விக்கப்பட்டது