இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அ னி ய று ப து
77
ஞாலம் உயிர்த்து வருவது நல்லுழவன்
கோலம் புரியும் குறி.
உழவன் செய்து வரும் தொழிலால் உலகம் வாழ்ந்து வருகிறது. அவ் வுண்மையை அனுபவங்கள் உணர்த்தி இனிது தெளிவித்து வருகின்றன.
உலகம் எனும் உயர்தருவுக்கு உறுதியாம்
- மூலவேர் உழவே; வேறாய்
இலகுபல தொழில்களெலாம் இலைதழைபூ
- கனிகாய்கள் எனவே நின்ற;
நிலவுலகம் என்றுமே நிலையாக
- நிலைத்துவர நேரே ஏரே
பலவகையும் புரந்துவரும் பான்மையினால்
- பாரின் உயிர் ஏரே பாரீர்! (1)
உண்ணுகின்ற உணவுகளால் உயிர்கள்உள;
- அவ்வுணவோ, உழவன் கைகள்
பண்ணுகின்ற தொழில்களிலே பரவியுள;
- ஆதலினால் பாரில் யாரும்
எண்ணுகின்ற தொழில்களெலாம் ஏருடையான்
- தொழில் எதிரே இரவி முன்னே
நண்ணுகின்ற ஒளிகள்என நாணிஒளி
- இழந்தயலே நடந்து போமே. (2)
காய்கின்ற வெயில் எல்லாம் காயத்தின்
- மேல் ஏற்றுக், காட்டில் மூண்டு