பக்கம்:அணியும் மணியும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


பாரதியாரின் தனிப்பெருமை, நாட்டுச் சீர்மையையும் மொழியின் உயர்வையும் எடுத்துக் காட்டி அவை சிறக்க வழிவகைகளைக் காட்டிச் சென்றமையாகும். இலக்கியத்தில் நாடும் மொழியும் பொருளாக அமைத்துக் கவிதையால் மக்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்வு ஊட்டிய அவர் தொண்டு மிகவும் போற்றத் தக்கதாகும்.