70
நறுந்தா துண்டு நயனில் காலை
என்று அவர்கள் வாழ்க்கை நெறியை உணர்த்துகிறாள்.
அன்பை அறியாத இனத்தில் அன்பைக் காண முயன்ற மாதவியும் பெருந்தோல்வியையே அடைந்தாள் என்று கூறமுடியும். கற்பிற்சிறந்து, கோவலனின் அன்பைப் பெற்ற அவளும், இறுதியில் அவன் மதிப்பைப் பெற முடியாத நிலையையே அடைந்தாள். ‘மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்’ என்று அவனால் இழித்துரைக்கப்பட்ட நிலையையே அடைந்தாள்; அதனால் மாதவி அத்தொழில் முறையையும் வாழ்வு நெறியையும் வெறுத்தாள். ‘திருந்தாச் செய்கை’ என்று உணர்ந்து தன் மகளைத் திருந்கிய செயலில் ஈடுபடுத்த முனைந்தாள்.
மாபெரும் பத்தினி மகள்மணிமேகலை
அருந்தவப் படுத்த லல்ல தியாவதும்
திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்
ஊரலர் 55-58
என்று உறுதி கொண்டாள்.
அவள் கொண்ட உறுதியோடு மணிமேகலையின் மனமும் துன்பச்சூழலில் சுழன்று இத்துன்பங்கட்குக் கரை காண முடியாமல் தவிக்கிறது; தன் தந்தையும் தாயுமான கோவலனும் கண்ணகியும் உழந்த வெந்துயர் இடும்பை அவள் நெஞ்சைக் கலக்கிவிடுகிறது.
தந்தையும் தாயும் தாம்நனி உழந்த
வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக்
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
- மலர்வனம். 5-7