பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

துறையான மருந்துத் தயாரிப்புத் துறையிலும் முஸ்லிம்களே முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

நோய் தீர்க்கும் மருந்து தயாரிப்புப் பணியை எல்லோரும் செய்துவிட முடியாது. மருத்துவத்தைப் பற்றியும் மருந்துப் பொருட்களைப் பற்றியும் தெளிவான அறிவைப்பெற்றிருக்க வேண்டும் அத்தகைய மருந்தியல் ஞானம் வாய்க்கப் பெற்றவர்கள் மட்டுமே மருந்து தயாரிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ‘அல் அத்தார்’ என அழைக்கப்பட்டனர். இவர்களே மருந்து மூலப்பொருட்களைக் கொண்ட மருந்துப் பொருள் கடைகளையும் நடத்தி வந்தனர். இது மிகக் கண்டிப்பான வழிமுறையாகவும் அன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

மருந்தாக்கமும் மருந்துகளும்

அன்றைய இஸ்லாமிய உலகில் மருத்துவத் துறைக்கு தேவையான மருந்து மூலப் பொருட்கள் ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஃப்ரிக்க நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டன.இம் மருந்து மூலப் பொருட்களைக் கொண்ட மருந்துக்கடைகள் பாக்தாது போன்ற இஸ்லாமிய உலகின் பெரும் நகரங்களில் பெரும் எண்ணிக்கையில் இருந்தன. இம்மருந்துக்கடைகளை தனிப்பட்டவர்கள் நடத்தியதால் அவர்கள் மருந்துகளைப் பற்றியும் அவற்றின் குணப்பண்புகளை பற்றியும் நன்கு அறிந்தவர்களாகவே இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக்கல் பற்றி முறையான பயிற்சியும் அறிவும் வாய்க்கப்பெற்றவர்களாலேயே மருந்துக்கடைகள் நடத்தப்பட்டன அப்பாஸியக் கலீஃபாக்களின் காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இந்நிலை நிலவியதாகத் தெரிகிறது.