பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105


கட்டிடக்கலை வளர்ப்பில் முஸ்லிம்களின் பொறியியல் திறன்

அறிவியலின் மற்றொரு பிரிவான பொறியியல் துறையின் பல்வேறு கூறுகள் முஸ்லிம் பொறியியல் வல்லுநர்களின் மிகு திறனால் புதிய பரிமாணம் பெற்றது. குறிப்பாக கட்டிடக்கலை இஸ்லாமிய மரபொழுங்கோடு கூடிய தனிப்பெரும் துறையாக முஸ்லிம் கட்டிடக்கலைஞர்களாலும் பொறியியல் வல்லுநர்களாலும் வடிவமைக்கப்பட்டு சீரோடு வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

அக்காலத்தில் இறைவணக்கத் தலங்களான மசூதிகள் ஆன்மீக உணாவுக்கு வளமூட்டும் வகையில் அழகிய வடிவமைப்பும் அதே சமயம் உள்ளத்து உணர்வுகளை பண்படுத்தும் பாங்கும் கொண்டதாக மசூதிக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. மசூதியின் இடைவரி மேட்டுக்கவிகை மாடங்களும் முன்புற வில் வளைவு விதானங்களும் லாடவடிவ கமான்களும் புதிய பொறியியல் நுணுக்கங்களை அடியொற்றி அமைக்கப்பட்டன என்பதை இஸ்லாம் நன்கு பரவிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெரும் மசூதிகளின் கட்டுமானங்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.

முஸ்லிம்களின் கட்டிடக் கலைக்கும் பொறியியல் திறமைக்கும் இன்றும் ஏற்ற சான்றுகளாக கார்டோலாவிலுள்ள பெரிய மசூதியும் இஸ்தான்புலில் உள்ள நீல மசூதி’(Blue Mosque) எனும் சுலைமான் மசூதியும் இந்தியாவில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலும் செல்வில் நகர் அல் சாஸர் கட்டிடமும் புகழ்பெற்று விளங்குகின்றன. கார் டோபா பெரிய மசூதியில் 1293 தூண்கள் உள்ளன. கிரனாடாவிலுள்ள அல் ஹம்பரா அரண்மனை முஸ்லிம் கட்டிடக் கட்டுமான பொறியியல் திறமைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகும்.