பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


தீராத நோயைத் தீர்க்கும் திறன்

இளம் வயதிலேயே நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக விளங்கிய இவர் மருத்துவத் துறையில் தனித்தன்மை பெற்றவராக விளங்கினார். அக்காலத்தில் மற்றவர்களால் தீர்க்கப்படாத நோய்களையெல்லாம் இவர் போக்கினார், ஒருமுறை சுல்தானின் கடுமையான நோயைப் போக்கியதன்மூலம் நாடறிந்த மருத்துவராகப் புகழ்பெற்றார். இவரை அரண் மனை மருத்துவராக வரித்துக் கொள்ள அக்காலத்தின் மன்னர்களிடையே ஒரு போட்டியே நடந்துவந்தது என்பது இவரது மருத்துவத் திறமைக்குக் கட்டியங் கூறுவதாகும்.

முதல் மருத்துவ வழிகாட்டி நூல்

இவர், தான் கற்றுணர்ந்த அறிவியல் துறைகள் அனைத்தையும் பற்றி நூல்கள் எழுதினார். அவற்றுள்ளும் தனித்தன்மை பெறுவன இவர் எழுதிய மருத்துவ நூல்களாகும். இவர் எழுதிய ‘அல் கானூன் பில் தீப்’ (மருத்துவ விதிமுறை) என்ற நூல் மத்திய கால ஐரோப்பிய மருத்துவ வழிகாட்டி நூலாக விளங்கும் பெருமை பெற்றது. தன் காலத்தில் உயர்வாகப் போற்றப்பட்ட மருததுவ அறிவையெல்லாம் திரட்டித் தொகுத்து முறைப்படுத்தினார். மூளை அழற்சி, கொள்ளை நோய். மனக்கோளாறு போன்ற நுண்ணிய நோய்கள் பற்றிய இவரது ஆராய்ச்சி இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சி முடிவுகள்

பல்வேறு வகையான நோய்கள் பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் நவீன மருத்துவத்துறை வளர்ச்சிக்கே அடித்தளமாயமைந்தன லெனினும் பொருந்தும்.