பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


அரபு மொழியில் ஆயிரக்கணக்கான புதுப்புது தலைப்புகளில் (Topics) நூல்கள் விரைந்து வெளிவர வாய்ப்பாக அமைந்ததற்குக் காகிதக் கண்டுபிடிப்பே அடிப்படைக் காரணமாகும்.

மருத்துவத்துறை வளர்ச்சிக்கு ராஜபாட்டை அமைத்த முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள்

இயற்பியல் அடிப்படையில் கண் ஒளித் தன்மையைச் சரியாக இப்னு அல் ஹைத்தாம் வகுத்தளித்த பின்னர் கண்களைப் பற்றிய ஆய்வுகள் வேகமும் விறுவிறுப்பும் பெற்றன.

கண்ணொளி, பார்வைத் தன்மை போன்றவை பற்றிய நுணுக்கங்களை முதன் முதலாகக் கண்டறிந்து. உலகுக்குணர்த்தி நிலைப்படுத்தி ‘கான்ணொளியியல் தந்தை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இப்னு அல்ஷைத்தாம் அவர்களைப் பற்றி முன்பே கூறியுள்ளோம்.இவர் கணிதவியலிலும் இயற்பியலிலும் வல்லுநரேயன்றி உயிரியல் மருத்துவ விற்பன்னர் அல்லர். ஆயினும், கண் ஒளி பற்றிய அவரது புதிய கோட்பாடுகள் மருத்துவத்துறைக்கு வழிகாட்டியாய் அமைந்ததை மறுப்பதற்கில்லை. ஒளி, வண்ணம் பரவுதல் பற்றிய அவரது கோட்பாடுகள் பிற்கால இயற்பியல் வளர்ச்சிக்கு வழிகாட்டிக் கொள்கைகளாக விளங்கின எனலாம்.

அவரைத் தொடர்ந்து கண் சம்பந்தப்பட்ட பல மருத்துவ நுணுக்கங்களைத் திறம்பட அறிந்து கண் மருத்துவத் துறை வளர்ச்சிக்கு வழிகோலியவர் அலீ இப்னு ஹபில் ஹஸ்ம் என்பவராவார்.

முதல் கண் அறுவை சிகிச்சை

மருத்துவ ஆய்வுகள் வேகமாக வளரத் தொடங்கிய போதே ரண சிகிச்சை முறைகளும் ஆய்ந்து, கடைப்பிடிக்